முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதார் தகவல்களை பகிர வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தல்

புதன்கிழமை, 1 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ஆதார் தகவல் இணையதளம் உட்பட பொதுவெளியில் பகிர வேண்டாம் என பொதுமக்களை ஆதார் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து ஆதார் வழங்கும் அமைப்பான யு.ஐ.டி.ஏ.ஐ. கூறியுள்ளதாவது:-

பொதுவெளியில் ஆதார் தகவல்களை தெரிவிப்பது தவறாகும். இது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபடக் கூடாது. அடுத்தவர்களின் ஆதார் தகவல்களை பயன்படுத்துவது சட்ட விரோதமாகும். வங்கி கணக்குகள், பாஸ்போர்ட் எண் மற்றும் பான் கார்டு எண் போன்று ஆதார் விவரங்கள் மிகவும் முக்கியமானதாகும் எனவே, இவற்றை பொதுவெளியில் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து