முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லல்லுவின் மகன்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டனர் - ஐக்கிய ஜனதா தளம் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

பாட்னா : ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லல்லு பிரசாத்தின் மகன்கள் தேஜ் பிரதாப் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளது.

இது குறித்து பீகார் மேலவை உறுப்பினரும் ஜே.டி.யு. கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் சிங் கூறியதாவது:-

பீகாரில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை முன்வைத்து முதல்வர் நிதீஷ் குமாரை பதவி விலகுமாறு தேஜஸ்வி யாதவும், தேஜ் பிரதாப்பும் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு முன்பாக, அவர்கள் இருவரும் டெல்லியில் கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி என்ன நடந்தது என்பதை நினைவுகூர வேண்டும்.

அப்போது இளம் வயதினரான இருவரும், டெல்லியில் மெஹரோலி பண்ணை வீடு, கன்னாட் பிளேஸ் மற்றும் அசோகா ஓட்டல் ஆகிய இடங்களில் பெண்களை கேலி கிண்டல் செய்தனர். இதன் காரணமாக, அவர்கள் இருவரையும் டெல்லிவாசிகள் சரமாரியாக அடித்து உதைத்தனர். இந்த சம்பவத்தை அவர்கள் நினைவுகூர்வதுடன், அதனை பீகார் மக்களிடம் ஒப்புக் கொள்ளவும் வேண்டும்.

இதேபோல், தேஜஸ்வி யாதவின் தனி உதவியாளர் மணி யாதவ் மீது பாட்னாவின் காந்தி மைதானம் காவல் நிலையத்தில் கடந்த 2011-ல் பாலியல் புகார் பதிவாகி உள்ளது. இது தவிர, பலாத்கார வழக்கில் சிக்கிய ராஷ்டிரீய ஜனதா தளக் கட்சியின் எம்.எல்.ஏ. ராஜ் வல்லப் யாதவ், தற்போது லல்லுவின் அரசியல் ஆலோசகராக உள்ளார். முதலில், இவர்கள் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்கக் கோரி, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் லல்லுவிடம் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு சஞ்சய்சிங் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து