முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாத்மா காந்தி எழுதிய கடிதம் ரூ. 4.6 லட்சத்துக்கு ஏலம்

திங்கட்கிழமை, 24 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

பாஸ்டன்,நூல் நூற்கும் கை ராட்டை குறித்து மகாத்மா காந்தி எழுதிய கடிதம் அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தின் போது ரூ. 4.60 லட்சத்துக்கு விலை போனது.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலுள்ள ஆர்.ஆர். ஏல நிறுவனம் அண்மையில் நடந்திய ஏலத்தில் இந்த கடிதம் ஏலத்தில் விடப்பட்டது. அந்தத் கடிதத்தை ஒருவர் ரூ.4.6 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தார். அந்தக் கடிதத்தை ஏலத்தில் எடுத்தவர் யார் என்ற பெயர் விவரம் தெரிவிக்கப்படவில்லை.

இந்தக் கடிதத்தை மகாத்மா காந்தி குஜராத்தி மொழியில் யஷ்வந்த் பிரசாத் என்பவருக்கு எழுதியுள்ளார். பாபுவின் ஆசீர்வாதங்கள் என்று மகாத்மா காந்தி அதில் கையெழுத்திட்டுள்ளார். அதில் காந்தி எழுதியுள்ளதாவது:-நூற்பாலைகள் குறித்து நாம் என்ன நினைத்தோமோ அதுதான் நடந்துள்ளது. இருந்தபோதும் நீங்கள் கூறியதுதான் சரி. அனைத்துமே தறிகளை நம்பியே உள்ளது. கை ராட்டை முக்கிய மானது. இவ்வாறு அதில் கூறியுள்ளார். இந்தக் கடிதம் எழுதப்பட்ட தேதி விவரங்கள் அதில் இல்லை என்று ஆர்.ஆர். ஏல நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து