முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

புதன்கிழமை, 17 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

மேட்டூர் : காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று 6ஆயிரத்து 191 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 10ஆயிரத்து 42 கனஅடியாக அதிகரித்து உள்ளது.

கூடுதல் நீர் திறப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் 6ஆயிரத்து 191 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 10ஆயிரத்து 42 கனஅடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து 13ஆயிரத்து 700 கனஅடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.

நீர்மட்டம் உயரும்

நேற்று முன்தினம் 103.35 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 103.10 அடியாக இருந்தது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 10ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 12ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்ததுடன், உற்சாகமாக படகு சவாரியும் சென்று மகிழ்ந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து