முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் மூவர் சுட்டுக் கொலை

வெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

பாரமுல்லா : காஷ்மீர் சர்வதேச எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற மூன்று தீவிரவாதிகள் எல்லை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பாரமுல்லா மாவட்டத்தின் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஊடுருவ முயன்ற மூன்று தீவிரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டது.

வியாழக்கிழமையன்று சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சந்தேகிக்கும்படியான ஆட்களின் நடமாட்டம் இருந்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கை அடைந்தனர்.

அப்போது, ஊடுருவல்காரர்கள் பாதுகாப்புப் படையினரின் நிலைகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு ராணுவம் பதிலடியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை'' என்று தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து