முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

DNA மூலம் மம்மிக்களின் முகங்கள் மறு உருவாக்கம்

பண்டைய காலத்தை பற்றி தெரிந்து கொள்வதில் மிக முக்கிய பங்கு வகிப்பவை எகிப்து நாட்டின் மம்மிக்கள். தற்போது டிஎன்ஏ எனப்படும் மரபணுக்கள் மூலம் பண்டைய எகிப்து மம்மிக்களின் முகங்களை விஞ்ஞானிகள் மறுஉருவாக்கம் செய்துள்ளனர். ஜெர்மனியில் உள்ள மார்க்ஸ் பிளாங் இன்டிடியூட் ஆஃப் சையின்ஸ் ஆஃப் ஹியூமன் ஹிஸ்டரி மையமும் துபின்சென் பல்கலை கழகமும் இணைந்து இப்பணியை மேற்கொண்டுள்ளன. இதற்காக 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய மம்மிக்களின் உடலிலிருந்து டிஎன்ஏ சாம்பிள்கள் தொகுக்கப்பட்டு முக மாதிரிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இது போன்ற முயற்சி இதுவே முதன்முறையாகும். இதன் மூலம் பண்டைய எகிப்து நாகரிகத்தின் அசலான முகங்களை நம்மால் இனம் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

புகழ்பெற்ற கால்வாய்

78 கிமீ நீளமும் 33.5 மீட்டர் அகலமும் உடைய உலக புகழ்பெற்ற பனாமா கால்வாய், கட்டுமானப்பணி 1900களில் தொடங்கி, 1914 -ல் நிறைவடைந்தது. ட்ராபிக்கல் நோய் காரணமாக பனாமா கால்வாய் கட்டுமான பணியில் ஈடுப்பட்ட பிரெஞ்சு, ஐக்கிய அமெரிக்காவை சேர்ந்த  27,500 தொழிலாளர் இறந்தனராம்.

நன்றாக தூங்க

தினமும் இரவில் ஒரு கப் பாலில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் வென்னிலா எசன்ஸ் சேர்த்து குடித்தால் நன்றாக தூக்கம் வரும். பாலில் புரோட்டீன், அமினோ அமிலங்கள் போன்ற சத்துக்கள்,  தூக்கத்தைப் பெற உதவும் செரடோனின் மற்றும் மெலடோனின் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்ட உதவுகிறது.

எவ்வளவு உயரம்!

சைபீரியாவிலுள்ள அல்டாஸ் மலைப்பகுதி, உலகிலேயே வெப்பநிலை குறைந்த பகுதிகளில் ஒன்று. கடல் மட்டத்திலிருந்து 8500 அடி உயரத்தில் இருப்பதால், இங்கு வெப்பநிலை மைனஸ் 50 டிகிரிக்கும் குறைவானதாகவே இருக்கும்.இந்தப் பகுதியில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தில் 4 ஆராய்ச்சியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்காக, அங்கு டாய்லெட் ஒன்று உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 8530 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த டாய்லட் உலகின் மிக அபாயகரமான டாய்லெட். டாய்லெட் உபயோகத்திற்கான டிஷ்யூ பேப்பர்கள் ஹெலிகாப்டர் மூலமாகவே கொண்டு வரப்படுகிறது.

உருளை கிழங்கின் தாயகம் எது தெரியுமா?

உலகம் முழுவதும் இன்றைக்கு செல்வாக்கு செலுத்தும் உணவு பொருளில் உருளை கிழங்கு முதலிடம் வகிக்கிறது. இன்றைக்கு உருளைகிழங்கை சாப்பிடாத ஆட்களே இல்லை என்ற அளவுக்கு பரவியுள்ளது. ஆனால் உருளை கிழங்கு முதன் முதலில் எங்கு பயிரிடப்பட்டது தெரியுமா.. பெரு நாட்டில் தான் முதன் முதலில் பயிரிடப்பட்டது. இன்றைய பெரு நாட்டுப்பகுதியே உருளைக்கிழங்கின் தாயகம் எனப்படுகிறது அங்கிருந்து 1536-ல் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டு ஐரோப்பிய கடல் பயணிகள் வழியாக ஆசியா மற்றும் பிற பகுதிகளுக்கும் சென்றது. அதுவும் பெருவில் எப்போது பயிரிடப்பட்டது தெரியுமா... கிட்டத்தட்ட சுமார் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. அதே போல பெருவில் மட்டும் சுமார் 1000 வகையான தக்காளி ரகங்கள் உள்ளன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.

வயது தடையில்லை

ஹெலன் வேன் விங்கிள் என்ற 87 வயதான மூதாட்டி, ‘பாடி விங்கிள்’ என்ற பெயரில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவர்.இவர் கணக்கு தொடங்கிய மிகக் குறுகிய காலத்திலேயே இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பாலோவர்ஸ், ட்விட்டரில் 2 லட்சத்து 20 ஆயிரம் பாலோவர்ஸும் உள்ளனர். நடிகை கர்தாஷியன் உடன் இவர் சேர்ந்து இருக்கும் போட்டோவிற்கு 88.3K லைக்குகள் கிடைத்ததாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago