முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழை

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : பகலில் வெயில் வாட்டி வந்த நிலையில் மாலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம் முழுவதும் பல பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்துவருகிறது. சென்னையை பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மாலையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியது.

இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. நந்தனம், தி.நகர், சைதாப்பேட்டை, கிண்டி, அடையாறு, சாந்தோம், மயிலாப்பூர், மந்தைவெளி, திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. வேளச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது. பகல் நேரங்களில் வெயிலால் அவதிப்பட்ட மக்கள் இரவில் வெப்பம் தணிந்து உற்சாகமடைந்துள்ளனர். இதேபோல் நாகை, வேளாங்கண்ணி, சேலம், ஓமலூர், தாரமங்கலம், திருவாரூர் , விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து