முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் நேரில் ஆஜர்

செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

பாகிஸ்தான் பிரதமராக ஷெரீப் பதவி வகித்த போது, அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றன. ஊழல் பணத்தைக் கொண்டு வெளிநாடுகளில் சொத்து வாங்கியது குறித்து பனாமா ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர் மீதான ஊழல் வழக்கு மேலும் சூடுபிடித்தது.

குறிப்பாக, ஷெரீபும் அவரது குடும்பத்தினரும் ஊழல் பணத்தை அல்-அஸீஸியா உருக்கு ஆலை, ப்ளாக்ஷிப் இன்வெஸ்ட்மெண்ட், அவென்பீல்டு ப்ராப்பர்ட்டீஸ் போன்றவற்றில் முதலீடு செய்தது தொடர்பான மூன்று வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் ஆஜராக நவாஸ் ஷெரீப் லண்டனிலிருந்து வந்திருந்தார். அவருடன் மகள் மரியம், மருமகன் முகமது ஷப்தார் ஆகியோரும் வந்திருந்தனர்.
நீதிபதி முகமது பஷீர் தலைமையிலான அமர்வில் அல்-அஸீஸியா உருக்கு ஆலை விசாரணை தொடங்கியது. இருப்பினும், முக்கிய சாட்சி ஒருவர் வராததால் வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

இந்த நிலையில், தற்காலிகமாக நீதிமன்றத்தை விட்டு வெளியே செல்ல ஷெரீபுக்கு அனுமதியளித்த நீதிபதி, மதியம் 2 மணிக்கு நடைபெறும் அவென்பீல்டு வழக்கில் அனைவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

லண்டனில் அவென்பீல்டு பகுதியில் சொத்துகளைவாங்கியதில் ஷெரீப், அவரது மகள், மருமகன் ஆகியோரின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னதாக, இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியத்துக்கு பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து