முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இம்ரான்கான் பதவியேற்ற பிறகே பாக். தீவிர தாக்குதல் தொடுக்கிறது எல்லை பாதுகாப்பு படை தலைவர் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 29 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற பிறகுதான், அந்நாட்டு ராணுவம் இந்தியா மீது தீவிரத் தாக்குதல்களை நடத்தி வருவதாக எல்லைப் பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் கே.கே. ஷர்மா தெரிவித்துள்ளார்.
சர்வதேச எல்லையில் செப்டம்பர் 18-ம் தேதி பி.எஸ்.எப் தலைமைக் காவலர் நரேந்திர சிங் கொலை செய்யப்பட்டதும், பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற பிறகே என்று ஷர்மா கூறியுள்ளார். இந்த கொலை, எல்லையில் செயல்படும் குழுவால் செய்யப்பட்டது. கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது எதிர்த்தரப்பினர் மிகவும் வீரியத்துடன் தாக்குதல் நடத்துகிறார்கள் என்று பி.எஸ்.எப் தலைவர் கூறினார்.

புற்களை நீக்கச் செல்லும் நடவடிக்கையின் போதே பி.எஸ்.எப். வீரர் கொலை செய்யப்பட்டார். வழக்கமாக இந்த நடைமுறையின் போது எதிர்தரப்பில் வானை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள். நாங்கள் அங்கிருந்து திரும்பி வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகே எங்கள் பணியை தொடருவோம். இந்த முறை அப்படி திரும்பி வரும்போதுதான் ஒருவர் திரும்பவில்லை என்று தெரிந்து அப்பகுதிக்குச் சென்று தேடினோம். அங்கு ஒரு நபரை இழுத்துச் சென்றிருப்பதற்கான தடயங்கள் கிடைத்தன.
அந்தப் பகுதி சர்வதேச எல்லை என்பதால் எங்களால் அங்கு உடனடியாக சென்று தேட முடியவில்லை. எதிர்த்தரப்பினருடன் பேசி தேட அனுமதி பெற்று அங்குச் சென்று தேடிய போது, பி.எஸ்.எப் வீரரின் உடல் கிடைத்தது. அவரது கால்கள் கட்டப்பட்டிருந்தன. உடலில் 3 துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருந்தன. அவரது கழுத்தை அறுத்ததற்கான அடையாளங்களும் இருந்தது. அந்த பகுதியே காலியாக இருந்தது.

இந்த சம்பவத்துக்குப் பிறகு எதிர்தரப்பினர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். கிராமம் முழுவதும் காலியாகி விட்டது. எப்போதுமே பி.எஸ்.எப் தக்க பதிலடி கொடுக்கும். ஆனால் தற்போது உடலை கைப்பற்றுவதே முக்கியம் என்பதால் அதில் கவனம் செலுத்தினோம். இந்த நடவடிக்கை குறித்து ஆராய்ந்து முடிவெடுப்போம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து