முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலாண்டு தேர்வுக்குப்பின் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

ஈரோடு : பெரியார் பிறந்தநாளையொட்டி ஈரோடு பெரியார், அண்ணா நினைவகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

காலாண்டு தேர்வுக்குப்பின் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி. மத்திய அரசின் மூலமாக காந்தியின் பிறந்த நாளை பள்ளிக்கல்வித் துறையின் மூலம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் காந்தி ஜெயந்தியன்று அவரது படம் வைக்கப்பட்டு, விழாக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடரும். காலாண்டு தேர்வு அட்டவணைகள் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் கல்வி திட்டம் என்ற முறையில் மத்திய அரசால் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. நமது மாநிலத்தின் நிலையைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் மூன்றாண்டு காலம் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்ட்டத்தில் மாணவர்கள் தங்களது கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. எனவே, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தற்போது என்ன நிலை உள்ளதோ, அதுவே தொடரும். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது போன்ற கொள்கை முடிவுகளை முதல்வர்தான் மேற்கொள்ள வேண்டும் என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து