முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் அருகே திறந்த வெளி கிணறு- நீதிபதிகள் முன்னிலையில் மூடப்பட்டது

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2019      திண்டுக்கல்
Image Unavailable

 நத்தம்--  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குடகிப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்தது மந்தைகுளத்துப்பட்டி கிராமம்.. இங்கு திறந்த வெளி கிணறு ஒன்று நீண்ட நாட்களாக மூடாமல் இருந்து வந்தது.இந்நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும்/தலைமை நீதித்துறை நடுவர்  திரு. சரத் ராஜ் அவர்களும்,நத்தம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் நீதித்துறை நடுவர்/மாவட்ட உரிமையியல் நீதிபதி கலையரசி ரீனா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் நீதிபதிகள் முன்னிலையில் அந்த பகுதியில் இருந்த திறந்த வெளி கிணறு இரும்புக் கம்பியால் செய்யப்பட்ட கேட் மூலம் குடகிப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் மூடப்பட்டது. முன்னதாக கிராம பகுதியில் நீதிபதிகள் பலன் தரும் மரக்கன்றுகளை நட்டனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி. ஊ) மணிமுத்து, மண்டலதுணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், ஊராட்சி செயலர் சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து