முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இருமொழி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது : மத்திய மந்திரிக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம் .

திங்கட்கிழமை, 7 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய கல்வி அமைச்சருக்கு, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் :- எதிர்காலத்திலும் இருமொழி கொள்கையை தமிழக அரசு கடைபிடிக்கும்என்றும் நுழைவுத் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கருத்து தெரிவித்துள்ளார்.

இருமொழி கொள்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதால் அதனை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அக்கடிதத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன்  திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருமொழி கொள்கையே நீடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே மத்திய அரசுக்கு தன்னுடைய நிலையை தெளிவாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து