எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : நகரமயமாக்கலில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்வதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டில் நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் வசதிகளைப் பெருக்குவதில் பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்திட ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் "கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தைப் புதிதாக உருவாக்கியுள்ளார். நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் இதுவரை 2,04,860 பேர்களுக்கு வேலைக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
11 மாநகராட்சிகளில் சீர்மிகு நகரத்திட்டம் தமிழ்நாடு அரசின் பங்களிப்பு ரூ.5500 கோடி ஒன்றிய அரசின் பங்களிப்பு ரூ.5390 கோடி மொத்தம் ரூ.10,890 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. சேதமடைந்த சாலைகளில் 9,346 கி.மீ. சாலைகள் நடப்புத் திட்டங்களின் கீழ் சீரமைக்கவும் மீதமுள்ள 2,526 கி.மீ நீளமுள்ள சேதமடைந்த சாலைகள் அரசின் சிறப்பு நிதி ரூ.1,000 கோடியில் 2022-2023 முதல் 2025-2026 வரை நான்கு ஆண்டுகளில் பணி முடிக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொசஸ்தலை ஆறு மற்றும் சென்னையைச் சுற்றி நடைபெறும் பணிகள் உட்பட ரூ.6,778 கோடி மதிப்பீட்டில் 2,641 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டும், மேலும், 669 கி.மீ. நீளப் பணிகள் நடைபெறுகின்றன. ரூ.8,911 கோடி மதிப்பீட்டில் 28 பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. 858 கோடி மதிப்பீட்டில் 7.42 இலட்சம் தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. 1,200 கோடி மதிப்பீட்டில் 55 பேருந்து நிலையப் பணிகள் முடிவுற்றுள்ள நிலையில் 100 பேருந்து நிலையப் பணிகள் நடைபெறுகின்றன.
690 கோடி மதிப்பீட்டில் 62 சந்தைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 86 இடங்களில் சந்தைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. 100 அறிவுசார் மையங்கள் நகராட்சி மாநகராட்சியால் தொடக்கப்பட்டுள்ளன. ரூ.424 கோடி மதிப்பீட்டில் 681 பூங்கா அபிவிருத்திப் பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும் 396 பூங்கா மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.700 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு, கரைகளைப் பலப்படுத்தப்படுத்திச் சீரமைக்கப்பட்டடுள்ளன.
ரூ.373 கோடி மதிப்பீட்டில் புதிய மின் மயானங்கள் நிறுவும் பணிகளும் நவீனப்படுத்தும் பணிகளும் நடைபெறுகின்றன. ரூ.153 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ரூ.771 கோடி மதிப்பீட்டில் பள்ளிகளுக்குக் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. திறந்த வெளியில் மலம் கழித்தலை அகற்றிட ரூ.152 கோடி மதிப்பீட்டில் 72,214 தனி நபர் கழிவறைகளும் 2,081 சமுதாயக் கழிப்பிடங்களும் கட்டி முடிக்கப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன.
1405 பேருக்கு நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 2,500 பேரை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் தேர்வு வைத்து யார் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ, அவர்களைப் பணிக்கு எடுத்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டு; அதன்படித் தேர்வுகள் நடைபெற்றுள்ளன. தேர்வுத் தாள்களை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் 2,500 பேருடன் மேலும் 3,000 பேரும் தேர்வு செய்யப்பட்டு நகராட்சிகளில் நியமனம் செய்யப்படவுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில், புதுமையான திட்டங்களினால் பல்வேறு பெருமைகளைப் பெற்று நகராட்சி நிர்வாகத்துறையின் பணிகளால் நகர மயமாக்கலில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 1 week ago |
-
சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறை சார்பில் புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
07 Oct 2024சென்னை : சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழக காவல்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
மெரினா விமான சாகச நிகழ்ச்சி: அரசின் செயலற்றதன்மையால் 5 பேர் உயிரிழந்ததாக இ.பி.எஸ். விமர்சனம்
07 Oct 2024சென்னை : சென்னை, மெரினா விமான சாகச நிகழ்ச்சிக்கு முதல்வர் அறிவிப்பை நம்பி வந்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம். விலைமதிக்க முடியாத உயிர்கள் போயிருக்கின்றன.
-
அரசு நிகழ்ச்சிகளில் டி சர்ட்டோடு பங்கேற்பது ஏற்புடையது இல்லை : உதயநிதிக்கு ஜெயக்குமார் கண்டனம்
07 Oct 2024சென்னை : அரசு நிகழ்ச்சிகளில் டி சர்ட் போட்டு பங்கேற்பது ஏற்புடையது இல்லை என்று துணை முதல்வர் உதயநிதிக்கு அ.தி.மு.க.
-
சற்று குறைந்த தங்கம் விலை
07 Oct 2024சென்னை : சற்று குறைந்த தங்கம் விலை நேற்று, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.56,800-க்கு விற்பனையானது.
-
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்
07 Oct 2024திருவாரூர் : திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம் செய்தார்.
-
மெரினாவில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி
07 Oct 2024சென்னை : சென்னை மெரினாவில் நடைபெற்ற வான்வெளி சாகச நிகழ்வைக் காண வந்தபோது உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் தமிழக காங்கிரஸ் சார்பில் வழங்கப்படும்.
-
சென்னையில் ரூ. 25 கோடி மதிப்பிலான கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறப்பு
07 Oct 2024சென்னை : சென்னை கதீட்ரல் சாலையில் ரூ. 25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
-
டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு நியூசிலாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம்
07 Oct 2024வெல்லிங்டன் : 9-வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
-
விமான சாகச நிகழ்ச்சியில் குறைபாடுகள் இருந்ததா? - உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
07 Oct 2024சென்னை : மெரினா கடற்கரையொட்டிய வான்வெளியில் இந்திய விமானப்படை நடத்திய சாகச நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான மக்கள் கூடினர்.
-
நீல நிற சூரியன் – விமர்சனம்
07 Oct 2024ஆணாக பிறந்தாலும் ஹார்மோன் மாற்றத்தால் பெண்ணாக மாறுபர்களை பெண்ணாக அங்கீகரிப்பதில்லை.
-
ஹமாஸ் தாக்குதலின் முதலாண்டு நினைவு: ஆயிரக்கணக்கான மக்கள் கூடி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
07 Oct 2024டெல் அவிவ் : பாலஸ்தீன பயங்கரவாதிகள் குழுவான ஹமாஸ் இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்.7-ம் தேதி நடத்திய எதிர்பாராத தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவினைக் கடைபிடிக்க ஆயிரக்கணக்கா
-
இஸ்ரேல் படைகள் தாக்குதல்: லெபனானில் பலியானோர் 4 ஆயிரத்தை தாண்டியது
07 Oct 2024பெய்ரூட் : இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் லெபனானில் இதுவரை 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
-
செல்ல குட்டி விமர்சனம்
07 Oct 2024கிராம பள்ளிக்கூடம் ஒன்றில் டிட்டோ, மகேஷ் இருவரும் 12 ம் வகுப்பு படிக்கிறார்கள்.
-
சுசீந்திரன் இயக்கும் ’2கே லவ் ஸ்டோரி’.
07 Oct 2024சுசீந்திரன் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் ’2கே லவ் ஸ்டோரி’. இப்படத்தில் அறிமுக நாயகன் ஜெயவீர், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
-
மெய்யழகன் வெற்றி விழா
07 Oct 20242டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ படம் கடந்த செப்-27ஆம் தேதி வெளியானது..
-
மருத்துவத்துக்கான நோபல் பரிசு: அமெரிக்காவை சேர்ந்த இருவருக்கு பகிர்ந்தளிப்பு
07 Oct 2024வாஷிங்டன் : 2024-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்கின் ஆகிய இருவருக்கும் பகிர்ந்து அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள
-
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
07 Oct 2024சென்னை : தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
அதிரடி அணுகுமுறை: ரோகித் சர்மாவுக்கு கவாஸ்கர் புகழாரம்
07 Oct 2024மும்பை : ரோகித் சர்மாவின் அதிரடி அணுகுமுறைக்கு கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
அபார வெற்றி...
-
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கர்நாடகா துணை முதல்வர் குடும்பத்துடன் சாமி தரிசனம்
07 Oct 2024திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், குடும்பத்துடன் நேற்று (அக்.7) சுவாமி தரிசனம் செய்தார்.
-
லெபனான் எல்லையில் இஸ்ரேல் ராணுவ வீரர்களை சந்தித்த பிரதமர் நெதன்யாகு
07 Oct 2024டெல் அவிவ் : லெபனான் எல்லையில் நிலை கொண்டிருந்த இஸ்ரேல் ராணுவ வீரர்களை பிரதமர் நெதன்யாகு சந்தித்து அவர்களுக்கு வெற்றி நமக்கே என்று நம்பிக்கை தெரிவித்தார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
07 Oct 2024மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,710 கன அடியாக மேலும் அதிகரித்துள்ளது.
-
பாலியல் பலாத்கார வழக்கு: நடிகர் சித்திக்கிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
07 Oct 2024திருவனந்தபுரம் : பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜரான நடிகர் சித்திக்கிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.
-
சர்வதேச டி-20 கிரிக்கெட்: கோலியின் சாதனை முறியடிப்பு
07 Oct 2024குவாலியர் : சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியின் மாபெரும் சாதனையை ஹர்த்திக் பாண்ட்யா முறியடித்துள்ளார்.
-
காசா போருக்காக இதுவரை இஸ்ரேலுக்கு அமெரிக்கா ரூ.1.5 லட்சம் கோடி உதவி
07 Oct 2024வாஷிங்டன் : காசா போருக்காக இதுவரை இஸ்ரேலுக்கு அமெரிக்கா ரூ.1.5 லட்சம் கோடி நிதியுதவி அளித்துள்ளது.
-
அரசியல் செய்வோருக்கு தோல்விதான் மிஞ்சும்: 5 பேர் உயிரிழப்பு வருத்தம் அளிக்கிறது: அமைச்சர் பேட்டி
07 Oct 2024சென்னை : 'விமான சாகச நிகழச்சியில் 5 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது.