எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![CM-3-2024-07-11](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/07/11/CM-3-2024-07-11.jpg?itok=D2B8npOW)
தருமபுரி மாவட்டத்திற்கான 15 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
தருமபுரி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (11.7.2024) தொடங்கி வைத்து 7 புதிய அறிவிப்புகளை அறிவித்தார். அத்துடன் தருமபுரி மாவட்ட மக்களின் கோரிக்கைகளை ஏற்று மேலும் 8 புதிய அறிவிப்புகளை செயல்படுத்திட ஆணையிட்டார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (11-7-2024) தருமபுரி மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் விரிவாக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊரகப்பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது, தருமபுரி மாவட்டம் சார்ந்த கீழ்க்கண்ட 7 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் தனது உரையில் அறிவித்தார். மேலும், இந்நிகழ்ச்சியின்போது, தருமபுரி மாவட்ட மக்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்று, மேலும் கூடுதலாக 8 புதிய அறிவிப்புகளையும் செயல்படுத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டத்திற்கான 15 புதிய அறிவிப்புகளின் விவரங்கள்:
1. 51 கோடி ரூபாய் செலவில் அரூர் அரசு மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
2. கடந்த சட்டமன்றத்தேர்தல் பரப்புரையின்போது கொடுத்த வாக்குறுதியான தருமபுரி – வெண்ணம்பட்டி சாலையில், புதிய ரயில் மேம்பாலம் 38 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
3. மோபிரிபட்டி– தொட்டம்பட்டியை இணைத்து, "அரூர் பேரூராட்சி", "அரூர் நகராட்சியாக" தரம் உயர்த்தப்படும்.
4. பஞ்சப்பள்ளி, ராஜபாளையம் அணைக்கட்டுகள் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
5. சிட்லிங், அரசநத்தம் பகுதியில் பழங்குடியினர் உற்பத்தி செய்யும் ராகி, சாமை, வரகு ஆகியவற்றை மதிப்புக் கூட்டுப் பொருளாக்க கிடங்கு மற்றும் பொதுச் செயலாக்க மையம் அமைக்கப்படும்.
6. தீர்த்தமலையில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்கப்படும்.
7. இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும், பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பழுதடைந்த நிலையில் இருக்கும் 4 வகுப்பறைகள், அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.
8. தருமபுரி ஒன்றியத்தில் உள்ள பெரியபட்டி மற்றும் வெள்ளாளப்பட்டி ஊராட்சிகளில், 2.54 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், அரூர் ஒன்றியத்தில் சிட்லிங் கிராமம், அம்மாப்பேட்டை, மருதிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் 3.82 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் 6 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாயக் கூடங்கள் கட்டப்படும்.
9. மொரப்பூர் மற்றும் அரூர் பகுதிகளில் உள்ள தனியார் கட்டிடங்களில் செயல்பட்டு வரும் 7 குழந்தைகள் மையங்களுக்கு புதிய கட்டிடம் கட்ட மையம் ஒன்றிற்கு தலா 16 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் என மொத்தமாக, ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் 7 புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.
10. கம்பைநல்லூர் பேரூராட்சியில் 6 வார்டுகளில் உள்ள 5 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், இருமத்தூர் தென்பெண்ணை ஆறு தலைமை நீரேற்று நிலையத்திற்கு அருகில் புதியதாக திறந்தவெளி கிணறு அமைத்து, நீரேற்று குழாய் அமைக்கப்படும். மேலும் பேருந்து நிலையம் அருகில், கூடுதலாக 1.00 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி, 4.1 கி.மீ நீளத்திற்கு குடிநீர் பகிர்மான குழாய் அமைத்து, 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இக்குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்படும்.
11. அரூர் ஊராட்சி ஒன்றியம், பறையப்பட்டி புதூர் முதல் பறையப்பட்டி காலனி வரை, கணபதிப்பட்டி தார்சாலை மற்றும் வீரப்பநாயக்கன்பட்டி தார்ச் சாலைப் பணிகள் மற்றும் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், போளையம்பள்ளி முதல் கோபிநாதம்பட்டி செல்லும் தார்ச் சாலை ஆகியவை 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும்.
12. கீரைப்பட்டி - கெளாப்பாறை சாலையில் உள்ள பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று, கெளாப்பறை ஆதிதிராவிடர் காலனி மயானம் செல்லும் சாலையில், வரட்டாறு ஓடையின் குறுக்கே 50 லட்சம் ரூபாய் செலவில் பாலம் கட்டப்படும்.
13. சிட்லிங் ஊராட்சி, நாட்டான்வளவு முதல் கம்பாளை சாலைக்கு இடையே, பழங்குடியின மக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று, காட்டாற்று ஓடையின் குறுக்கே ரூ.50.00 லட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைக்கப்படும்.
14. அரூர் சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பறையப்பட்டி புதூர் ஊராட்சி ஜி.கே.ரோடு கிராமத்தில் ஒரு புதிய 30,000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், இருமத்தூர் ஊராட்சி, போளையம்பள்ளி ஊராட்சி, மொரப்பூர் ஊராட்சிகளில் மூன்று இடங்களில், மூன்று 60 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் கட்டப்படும்.
15. பாளையம்புதூர் ஊராட்சியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கோம்பை, மூலக்கோம்பை, ராஜீவ்காந்தி நகர் மற்றும் நாயக்கனேரி பகுதிகளில் இணைப்புச் சாலைகளைப் புதுப்பிக்கவும்; 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தேர்ச்சாலை மற்றும் மூலக்கோம்பை கிராமச்சாலைகளை சிமெண்ட் சாலைகளாக மாற்றவும்; தொம்பரகாம்பட்டி மேற்கு வன்னியர்தெருவில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஆழ்துளைக்கிணறு மற்றும் மின்மோட்டார் ஆகியவை அமைக்கவும் – ஆக மொத்தம் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்குறிப்பிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டை 65![]() 1 day 7 min ago |
பிரட் உப்மா![]() 5 days 2 hours ago |
முக்கோண உருளைக்கிழங்கு நக்கெட்ஸ்![]() 1 week 1 day ago |
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தைப் பலி
01 Aug 2024காசா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தைப் படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
-
பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தடை ஏதுமில்லை: சுப்ரீம்கோர்ட்டு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
01 Aug 2024புது டெல்லி, பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
-
இமாச்சல பிரதேசத்தில் மேக வெடிப்பால் பெருவெள்ளம்: 3 பேர் பலி - 40 பேர் மாயம்
01 Aug 2024சிம்லா, இமாச்சலப் பிரதேசத்தில் சிம்லா மற்றும் மண்டி மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்று அதிகாலை மேகவெடிப்பு ஏற்பட்டு பெய்த கனமழை காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-08-2024.
01 Aug 2024 -
இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த படைகளுக்கு ஈரான் தலைவர் உத்தரவு
01 Aug 2024டெக்ரான், இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த படையினருக்கு ஈரான் தலைவர் அயோதுல்லா அலி காமினி உத்தரவிட்டுள்ளார்.
-
கமலா ஹாரிஸ் மீது டிரம்ப் தெரிவித்த இனவெறி கருத்து பல்வேறு தரப்பினர் கண்டனம்
01 Aug 2024வாஷிங்டன், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் மீது டிரம்ப் இனவெறி கருத்தை தெரிவித்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
-
தேர்தல் முடிவு குறித்த விவகாரம்: வெனிசுலா அதிபரின் சவாலை ஏற்று கொண்ட எலான் மஸ்க்
01 Aug 2024நியூயார்க், வெனிசுலாவில் நடந்த அதிபர் தேர்தல் முடிவு விவகாரத்தில் வெனிசுலா அதிபரின் சவாலை எலான் மஸ்க் ஏற்றுக் கொண்டுள்ளார்.
-
கேரள நிலச்சரிவு சம்பவம்: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடிக்கு இரங்கல் செய்தி அனுப்பிய அதிபர் புடின்
01 Aug 2024மாஸ்கோ, கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்ச்சியாக பலர் பலியான சோக சம்பவத்திற்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோருக்கு ரஷ்ய அதிபர் புடின் இரங்கல் செய
-
மேக வெடிப்பால் நிலச்சரிவு: கேதார்நாத்தில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தவிப்பு
01 Aug 2024டேராடூன், உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக மந்தாகினி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 200-க்கும் மேற்பட
-
ஜனாதிபதி தலைமையில் 2 நாள் மாநாடு: டெல்லி சென்றார் கவர்னர் ஆர்.என்.ரவி
01 Aug 2024சென்னை, ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறும் 2 நாள் மாநில கவர்னர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென
-
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா இணைந்து நிதியுதவி
01 Aug 2024சென்னை, வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா இணைந்து கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.
-
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: கேரள முதல்வர்
01 Aug 2024திருவனந்தபுரம், வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கை ஏற்கனவே மத்திய அரசிடம் வைத்துள்ளோம். ஆனால், இன்னும் அறிவிக்கவில்லை.
-
மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கனஅடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
01 Aug 2024சேலம், மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு நேரடியாக ரூ. 300 தரிசன டிக்கெட் வழங்க பரிசீலனை
01 Aug 2024திருப்பதி, திருப்பதிக்கு நேரில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவச தரிசனம் போல் நேரடியாக ரூ.
-
தீரன் சின்னமலை நினைவு நாள்: சென்னையில் திருவுருவப் படத்திற்கு நாளை முதல்வர் ஸ்டாலின் மரியாதை
01 Aug 2024சென்னை, சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது.
-
மனைவிக்கு வீட்டு மனை ஒதுக்கியதில் முறைகேடா?: விளக்கம் கேட்டு சித்தராமையாவுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் நோட்டீஸ்
01 Aug 2024பெங்களூரு, கர்நாடக முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு, மைசூருவில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது.
-
ஜார்க்கண்ட் சட்டசபையில் அமளி: பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் சஸ்பெண்ட்
01 Aug 2024ராஞ்சி, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு ஜார்கண்ட் முதல்வர் சோரன் பதிலளிக்க மறுத்ததையடுத்து சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட 18 பா.ஜ.க.
-
தணிக்கையாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
01 Aug 2024சென்னை, சென்னை தலைமைச் செயலகத்தில், நிதித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் தணிக்கைத்துறைகளில் கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், உதவி ஆ
-
சென்னையில் வணிக சிலிண்டர் விலை உயர்வு
01 Aug 2024சென்னை, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.7.50 உயர்த்தப்பட்டு ரூ.1,817 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ராகுல், பிரியங்கா ஆய்வு
01 Aug 2024வயநாடு, தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
-
மோசடியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற தடை விதிக்கப்படும்: அண்ணா பல்கலை. துணைவேந்தர் தகவல்
01 Aug 2024சென்னை, மோசடியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற தடை விதிக்கப்படும் என்று அண்ணா பல்கலை. துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
-
குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது: தமிழக அரசு அறிவிப்பு
01 Aug 2024சென்னை, இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு
01 Aug 2024சென்னை, சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
காண்டூர் கால்வாய் பராமரிப்பு பணிகளை தமிழக அரசு விரைந்து முடிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
01 Aug 2024சென்னை, காண்டூர் கால்வாய் பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தமிழக அரசை அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
இலங்கை ரோந்து படகு மோதி உயிரிழந்த தமிழக மீனவரின் உடலை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
01 Aug 2024சென்னை, இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்த மீனவரின் உடலை உடனடியாக தாயகம் கொண்டு வரவும், காயமடைந்த மீனவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி, அவர்களை தம