எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Stalin 2021 11 29](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2025/02/09/Stalin_2021_11_29.jpg?itok=nlXYyNTB)
சென்னை, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் வெற்றி பெற முடியாது என்பதால் அமைதியை கெடுக்கும் வேலைகளை தூண்டுகின்றனர் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், வஞ்சிப்பது பா.ஜ.க.வின் பழக்கம்; வாழ வைப்பது தி.மு.க.வின் வழக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், நம் உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் நன்றி மடல். தந்தை பெரியார் மண்ணான தமிழ்நாட்டில், அவர் பிறந்த ஈரோட்டின் கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், அண்ணாவால் உருவாக்கப்பட்டு, கலைஞரால் பேணிப் பாதுகாக்கப்பட்டு, அவர்தம் உடன்பிறப்புகளால் வளர்க்கப்பட்ட தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்ட வி.சி.சந்திரகுமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலே வாக்களித்து மகத்தான வெற்றியை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். இது திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்திருக்கும் மற்றொரு நற்சான்றிதழ்.
கழகத்தைத் தோளிலும், தலைவர் கலைஞரையும் - அவருடைய உடன்பிறப்புகளான உங்களையும் நெஞ்சிலும் சுமந்துகொண்டு தொடர்ந்து பயணிக்கிறேன். இந்தப் பயணத்தில் எதிர்கொண்ட தேர்தல் களங்களில் எல்லாம் வெற்றியன்றி வேறில்லை என்கிற வகையில் தொடர்ச்சியான வெற்றியைத் தி.மு.க. பெற்று வருகிறது. அந்த வரிசையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் கழக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பதில் உங்களைப் போலவே உங்களில் ஒருவனான நானும் உறுதியாக இருந்தேன்.
பிப்ரவரி 8ம் நாள் காலை முதலே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்திலிருந்து இனிப்பான வெற்றிச் செய்தி வந்து கொண்டிருந்தது. முதல் சுற்றில் தொடங்கி வாக்கு எண்ணிக்கை முடியும்வரை எல்லாச் சுற்றுகளிலும் கழக வேட்பாளர் சந்திரகுமார் கூடுதலான வாக்குகளைப் பெற்றுக் கொண்டே இருந்தார். இந்த இடைத்தேர்தல் களத்தைச் சட்டமன்றத்தின் முதன்மை எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும், அது மறைமுகக் கூட்டணி வைத்திருக்கிற பா.ஜ.க.வும் திட்டமிட்டுப் புறக்கணித்துவிட்டு, உதிரிகளை முன்னிறுத்தித் தி.மு.க.வை எதிர்த்தன.
மக்களுக்குத் தேவையானவை குறித்து எதுவும் பேசாமல், மகத்தான தலைவர் தந்தை பெரியார் மீது அவதூறுகளை அள்ளி வீசிய கைக்கூலிகளுக்கு டெபாசிட் பறிபோகும் வகையில் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள் சரியான பாடம் புகட்டியிருக்கிறார்கள். இது என்றென்றும் பெரியார் மண் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.
தி.மு.க.வை பொறுத்தவரை அமைச்சர் முத்துசாமி அவர்களும் மற்ற நிர்வாகிகளும் தோழமைக் கட்சியினருடன் இணைந்து நின்று திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும், அதனால் தொகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் அடைந்துள்ள பயன்களையும் எடுத்துரைத்து வாக்குகளைச் சேகரித்தார்கள். மக்கள் வைத்த கோரிக்கைகளைச் செவிமடுத்தார்கள். உங்களில் ஒருவனான நான் நேரடியாகச் சென்று பிரசாரம் செய்யவில்லை என்றாலும், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மூன்றாண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டிருக்கிற திட்டங்களைப் பட்டியலிட்டு, கழக வேட்பாளரை ஆதரிக்குமாறு வாக்களார்களுக்குக் கடிதம் வாயிலாக வேண்டுகோள் விடுத்தேன்.
மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அதைவிட மக்களுக்கு என் மீது அதிக நம்பிக்கை உள்ளது. அதனால்தான் நேரடிப் பிரசாரத்துக்கு வர இயலாதபோதும், என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு உதயசூரியன் சின்னத்திற்குப் பெருவாரியான வாக்குகளை அளித்து, தி.மு.கழக வேட்பாளரை 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, எதிர்த்து நின்ற மற்ற அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்திருக்கிறார்கள்.
இந்த மகத்தான வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும், இந்த வெற்றிக்காக உழைத்த அமைச்சர் முத்துசாமி தலைமையிலான கழக நிர்வாகிகள் – செயல்வீரர்கள் - உடன்பிறப்புகள் அனைவருக்கும், தோழமைக் கட்சியினருக்கும் என் மனமார்ந்த நன்றியினையும், கழகத்தின் வெற்றி வேட்பாளர் சந்திரகுமார் அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன், 'வெல்வோம் இருநூறு - படைப்போம் வரலாறு' என்ற முழக்கத்தை உங்களில் ஒருவனான நான் முன்வைத்தேன். 'இருநூறு இலக்கு' என்பதற்கான தொடக்க வெற்றியாக அமைந்திருக்கிறது இடைத்தேர்தல் கண்ட ஈரோடு கிழக்கு. மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள். அந்த மக்களுக்குரிய திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் திராவிட மாடல் அரசு, மத்திய ஆளும் பா.ஜ.க. அரசுடன் அன்றாடம் போராடிக் கொண்டிருக்கிறது.
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பா.ஜ.க. அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, நேற்றைய நாளில் (பிப்ரவரி 8) மாநிலம் முழுவதும் கழகத்தின் சார்பில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளன. திருவள்ளூர் மத்திய மாவட்டம் ஆவடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் நான் பங்கேற்று, தமிழ்நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கவும், தமிழ்நாட்டு மக்களின் நலன்களைக் கெடுக்கும் வகையிலும் மத்திய பா.ஜ.க. அரசு தன் வஞ்சகப் போக்கைத் தொடர்ந்து மேற்கொள்வதைச் சுட்டிக்காட்டினேன். உங்களில் ஒருவனான நான் என்ன உணர்வுடன் ஆவடிப் பொதுக்கூட்டத்தில் பேசினேனோ, அதே உணர்வுடன் தமிழ்நாடு முழுவதும் கழக மாவட்டங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கழகத்தினர் பேசிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
மத்திய பா.ஜ.க அரசிடம் நிதியும் இல்லை, நீதியும் இல்லை என்று நெல்லையில் நடந்த விழாவில் நான் சுட்டிக்காட்டியதுபோலவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் புள்ளிவிவரங்களுடன் நம்முடைய கழகத்தினர் உரையாற்றியிருக்கிறார்கள். இது வெறும் கண்டனக் கூட்டமாக முடிந்துவிடாமல், நல்லாட்சி தரும் திராவிட மாடல் அரசை முடக்குவதாக நினைத்து தமிழ்நாட்டை பா.ஜ.க அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதையும், தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் வெற்றிபெற முடியாது என்பதால் அமைதியைக் கெடுக்கும் வேலைகளைத் தூண்டி விடுவதையும் மக்கள் மனதில் அழுத்தமாகப் பதிய வைத்து, அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களின் நல்லிணக்க நிலமாக தமிழ்நாடு என்றும் தொடரவேண்டும் என்கிற உறுதியை ஏற்கக்கூடிய வகையிலே பொதுக்கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
வஞ்சிப்பது பா.ஜ.க. அரசின் பழக்கம். அதனையும் எதிர்கொண்டு, தமிழ்நாட்டை வாழவைப்பது தி.மு.கழகத்தின் வழக்கம் என்பதை ஆவடிப் பொதுக்கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் உரையாற்றியபடி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான நம்முடைய பணிகள் தொடரும். மாநில உரிமைக்கான துணிச்சலான குரல் தொடர்ந்து ஒலிக்கும். சட்டத்தின் வழியே ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் தி.மு.கழகம் முன்னணியில் இருக்கும். அதற்கான நம்பிக்கையை ஈரோடு கிழக்குத் தொகுதியின் வெற்றி நமக்கு அளித்திருக்கிறது.
இந்த வெற்றிப்பயணம் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்ந்திடும் வகையில் தி.மு.கழக அரசின் செயல்பாடுகள் அமைந்திடும். அவை சரியாக நிறைவேறுவதை உறுதி செய்யும் வகையில், மாவட்டந்தோறும் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பணிகளின் அடுத்தகட்டமாக பிப்ரவரி 21, 22 ஆகிய நாட்களில் கடலூர் மாவட்டத்திற்குப் பயணிக்க இருக்கிறேன். எங்கு சென்றாலும் மக்களின் மலர்ந்த முகம் கண்டு மகிழ்கிறேன். கடலூரில் கடலெனத் திரண்டு வரவேற்கக் காத்திருக்கும் பொதுமக்கள், உடன்பிறப்புகளின் மலர்ந்த முகங்களை இப்போதே என் மனக்கண்களில் காண்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 1 week ago |
-
2-வது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி: 14 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி
09 Feb 2025காலே, இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
-
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது
09 Feb 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது கூட்டத்தில் விரைவில் தாக்கலாகும் தமிழக பட்ஜெட் குறித்து விவாதிக்கப்படுகிறது.
-
வரும் 21, 22-ம் தேதிகளில் கடலூருக்கு செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Feb 2025சென்னை, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் வெற்றி பெற முடியாது என்பதால் அமைதியை கெடுக்கும் வேலைகளை தூண்டுகின்றனர் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், வஞ்சிப்பது பா.ஜ.க.
-
தேஜஸ் போர் விமானத்தில் ஒன்றாக பறந்த ராணுவ, விமானப்படை தளபதிகள்
09 Feb 2025பெங்களூரு, கர்நாடகாவில் நடக்கும் ஏரோ இந்தியா விமான கண்காட்சியையொட்டி, ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி, விமானப்படை தலைமை தளபதி ஏ.பி.சிங் ஆகியோர் ஒன்றாக தேஜஸ் போர் விமா
-
அதிக வயதில் அறிமுகம்
09 Feb 2025இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
-
தமிழக மாணவர்களுக்குரிய ரூ.2,152 கோடி நிதி பறிப்பு: மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
09 Feb 2025சென்னை, தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடி நிதி பறித்து மற்ற மாநிலங்களுக்கு வழங்கும் இரக்கமற்ற செயலில் மத்திய அரசு ஈடுபட
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் 31 நக்சல்கள் சுட்டுக்கொலை
09 Feb 2025பிஜாபூர், சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 31 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
ரூ.18.63 கோடி மதிப்பில் திருச்சி பறவைகள் பூங்கா: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
09 Feb 2025திருச்சி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், கம்பரசம்பேட்டை ஊராட்சி, அய்யாளம்மன் படித்துறை பகுதியில் ரூ.18.63 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திருச்சி பறவைகள் பூங்கா
-
தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 38 பேர் திடீர் பணியிட மாற்றம்
09 Feb 2025சென்னை, தமிழ்நாட்டில் 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
-
35.12 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் அச்சடிக்கும் பணி தீவிரம்
09 Feb 2025சென்னை, வரும் கல்வியாண்டில் 35.12 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று பிரயாக்ராஜ் பயணம்
09 Feb 2025பிரயாக்ராஜ், உலகின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்
-
ஆஸ்திரேலியா வெற்றி எதிரொலி:ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மாற்றமில்லை
09 Feb 2025துபாய், இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ள நிலையில் ஐ.சி.சி டெஸ்ட்
-
ஊழல் கட்சியாக மாற்றி விட்டார்: டில்லி தோல்விக்கு கெஜ்ரிவால் தான் முழு பொறுப்பு: பிரசாந்த் பூஷண் குற்றச்சாட்டு
09 Feb 2025புதுடில்லி, டில்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு கெஜ்ரிவால் தான் முழு பொறுப்பு என்று அந்த கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான பிரபல வக்கீல்
-
இலங்கை கடற்படையினரால் 14 தமிழ்நாடு மீனவர்கள் கைது
09 Feb 2025ராமேசுவரம், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 14 தமிழ்நாடு மீனவர்கள், 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.
-
தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டில் 18 வயதிற்கு கீழே உள்ளவர்கள் பணம் வைத்து விளையாட தடை
09 Feb 2025சென்னை, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாட தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டபோது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்
09 Feb 2025சென்னை, நடிகர் அஜித் குமார் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கியதாக தெரிவித்துள்ளார்.
-
உ.பி. மகா கும்பமேளாவில் 4-வது முறையாக தீவிபத்து
09 Feb 2025பிரயாக்ராஜ், பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் 4வது முறையாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
-
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா
09 Feb 2025இம்பால், மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை நேற்று (பிப். 9) ராஜினாமா செய்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-02-2025
10 Feb 2025 -
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஓட்டு சதவீதம் அதிகரிப்பு
10 Feb 2025புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கடந்த 2020 தேர்தலில் பெற்றதை விட 2 சதவிகிதம் அதிகம் பெற்றுள்ளது.
-
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால் 14 கோடி ஏழைகள் பாதிப்பு: சோனியா காந்தி குற்றச்சாட்டு
10 Feb 2025புதுடெல்லி: நாட்டில் சுமார் 14 கோடி மக்கள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற முடியாமல் தவித்து வருவதாகத் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா கா
-
மதுரை, பாலதண்டாயுதபாணி கோவிலில் அர்ச்சகர்களின் தட்டில் விழும் காணிக்கை உண்டியலில் செலுத்தும் உத்தரவு வாபஸ்
10 Feb 2025மதுரை: அர்ச்சகரின் தட்டில் விழும் காணிக்கை உண்டியலில் செலுத்தும் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் இரும்பு - அலுமினியத்துக்கு 25 சதவீதம் இறக்குமதிக்கு வரி அதிபர் அறிவிப்பு
10 Feb 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் இரும்பு- அலுமினியத்துக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் அறிவித்துள்ளார்.
-
உ.பி. மகா கும்பமேளாவில் ஜனாதிபதி புனித நீராடினார்
10 Feb 2025புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் ஜனாதிபதிதிரவுபதி முர்மு புனித நீராடினார்.
-
‘ஏரோ இந்தியா’ இந்தியாவின் சக்தியை வெளிப்படுத்துகிறது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்
10 Feb 2025பெங்களூரு: ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி, பாதுகாப்பு கண்காட்சியான ‘ஏரோ இந்தியா’ -வை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள யெலஹங்கா வ