எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சென்னை, கோபாலபுரத்தில் ரூ. 8 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 'கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (செவ்வாய்க்கிழமை) திறந்துவைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும். அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல். உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
மேலும், மாநிலத்தில் அதிநவீன விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை பெருநிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து நன்கொடை பெற்று ஏற்படுத்திட "தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை"யை உருவாக்கியது. சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திட தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், 2022 - 2023 ஆம் நிதி ஆண்டிற்கான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மானிய கோரிக்கையில், சென்னை நகரமானது பாரம்பரியமாகவே குத்துச்சண்டை விளையாட்டிற்கு புகழ்பெற்றது. சென்னையில் பல்வேறு குத்துச்சண்டை வீர்ர்கள் உருவாகி குத்துச்சண்டை விளையாட்டில் புகழ்பெற்று விளங்கினர். தமிழ்நாட்டில் குத்துச்சண்டை விளையாட்டை மீண்டும் புகழ்பெறச் செய்ய, பல்வேறு உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர்களை உருவாக்குவது அவசியமானதாகும். எனவே, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் குத்துச்சண்டை விளையாட்டிற்கு புத்துயிர் அளிக்க குத்துச்சண்டை அகாடமி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, முதல்வரால் 2.11.2023 அன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னை, கோபாலபுரத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குத்துச்சண்டை அகாடமி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சென்னை கோபாலபுரத்தில் 8 கோடி ரூபாய் செலவில், 890 நபர்கள் அமரும் வகையிலான பார்வையாளர் மாடத்துடன் கூடிய முற்றிலும் குளிரூட்டப்பட்ட உள்அரங்கம், பயிற்சி மைதானம், உடற்பயிற்சிக் கூடம், பயிற்சியாளர் அறை, பயிற்சி செய்யும் பகுதி, மருத்துவர் அறை, நிர்வாக அலுவலகம் ஆகிய வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு குத்துச் சண்டை அகாடமியை முதல்வர் திறந்து வைத்து, அங்கு நடைபெற்ற 48 முதல் 51 கிலோ எடைப் பிரிவிற்கான குத்துச்சண்டை போட்டியை பார்வையிட்டு, வெற்றி பெற்ற குத்துச்சண்டை வீராங்கனைக்கு கோப்பையை வழங்கினார்.
இந்த குத்துச் சண்டை அகாடமிஅமைக்கப்படுவதன் மூலம், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள குத்துச்சண்டை ஆர்வலர்கள் மற்றும விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கலந்துக்கொண்டு பதக்கங்களை வெல்வதற்கு நல்வாய்ப்பாகவும் அமையும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 4 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-02-2025.
25 Feb 2025 -
மார்ச் 5-ல் அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை : முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
25 Feb 2025சென்னை : தமிழகத்தில் இருக்கக்கூடிய 8 எம்.பி.
-
தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் மாநிலங்களின் குரலை நசுக்கும் மத்திய அரசு: கனிமொழி குற்றச்சாட்டு
25 Feb 2025சென்னை : தொகுதி மறுசீரமைப்பு மூலமாக தென் மாநிலங்களின் குரலை மத்திய பா.ஜ.க. அரசு நசுக்கத் திட்டமிடுகிறது என தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
-
எங்களை ஏமாற்றினால்... ஜாக்டோ ஜியோ அமைப்பு எச்சரிக்கை
25 Feb 2025சென்னை : எங்களை ஏமாற்றினால் 2026 தேர்தலில் தி.மு.க. அரசு ஏமாந்து போகும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
நாம் இன்னொரு மொழிப்போரை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் : தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
25 Feb 2025சென்னை : ஆதிக்கத்தை எதிர்ப்பதும், தாய்மொழியைக் காப்பதும் தி.மு.க. தொண்டர்களின் ரத்தத்தில் ஊறிய உணர்வு. உயிர் அடங்கும் வரை அந்த உணர்வு அடங்காது.
-
அதி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
25 Feb 2025சென்னை : தி.மு.க. நிர்வாகத் திறமையின்மையை மறைக்க, திசைதிருப்பவே கோவை வடக்கு அதி.மு.க. எம்.எல்.ஏ.
-
ரமலான் நோன்புக் கஞ்சி தயாரிக்க மசூதிகளுக்கு 7,920 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதல்வர் உத்தரவு
25 Feb 2025சென்னை : புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிக்கும் முஸ்லிம்களுக்கு நோன்புக் கஞ்சித் தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளா
-
பாலியல் குற்றச்சாட்டு வழக்கு: சீமான் நாளை நேரில் ஆஜராக சம்மன்
25 Feb 2025சென்னை : நீதிமன்ற உத்தரவையடுத்து, நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நாளை நேரில் ஆஜராகும்படி சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
-
மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்காக நீர் திறப்பு
25 Feb 2025மேட்டூர் : மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
ஆதரவற்றோரை சுட்டுக்கொன்ற நபருக்கு 40 ஆண்டுகள் சிறை
25 Feb 2025லாஸ் வேகாஸ் : அமெரிக்காவில் ஆதரவற்றோரை சுட்டுக்கொன்றவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உச்சம்
25 Feb 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (பிப். 25) சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,600-க்கும் புதிய உச்சத்தைத் தொட்டு விற்பனையானது.
-
மும்மொழிக் கொள்கை விவகாரம்: பா.ஜ.க.வில் இருந்து ரஞ்சனா நாச்சியார் விலகல்
25 Feb 2025சென்னை : மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வில் இருந்து ரஞ்சனா நாச்சியார் விலகியுள்ளார்.
-
விமான நிலையத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ், ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு
25 Feb 2025சென்னை : சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி காந்த் அமைச்சர் அன்பில் மகேஸ் சந்தித்து பேசினர்.
-
ரஷ்ய படைகளை திரும்பப்பெற வேண்டும்: ஐ.நா. தீர்மானத்தை புறகணித்த இந்தியா உள்ளிட்ட 60 நாடுகள்
25 Feb 2025ஜெனீவா : உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தி ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது.
-
வங்கக் கடலில் நிலநடுக்கம்
25 Feb 2025ஒடிசா : ஒடிசா அருகே வங்கக் கடலில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
காணாமல் போன மலேசிய விமானம்: 11 ஆண்டுகளுக்கு பின்பு தேடுதல் பணி துவக்கம்
25 Feb 2025மலேசியா : மலேசிய விமானம் மர்மமான முறையில் மாயமாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் அந்த விமானத்தை தேடும் வேட்டையில் மலேசிய அரசு தொடங்கியுள்ளது.
-
சென்னையில் ரூ. 8 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்தார முதல்வர் மு.க.ஸ்டாலின்
25 Feb 2025சென்னை : சென்னை, கோபாலபுரத்தில் ரூ.
-
உ.பி. மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு
25 Feb 2025லக்னோ : மகா கும்பமேளா புதன்கிழமையுடன் நிறைவுபெறும் நிலையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி சட்டசபையில் அமளி: 12 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்
25 Feb 2025புதுடெல்லி : டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்த அம்பேத்கர் புகைப்படத்தை நீக்கிவிட்டு பிரதமர் மோடியின் படம் வைக்கப்பட்டதாக கூறி டெல்லி சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட 12 எ
-
கனடாவில் புதிய விசா விதிமுறைகள்: இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு
25 Feb 2025கனடா : கனடாவில் வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்க விசா வழங்குவதில் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
-
மும்பையில் 3 நாட்கள் வெப்ப அலை வீசும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
25 Feb 2025மும்பை : மும்பையில் அடுத்த 3 நாள்களுககு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பட்ஜெட் சிறப்பம்சங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
25 Feb 2025சென்னை : பட்ஜெட் சிறப்பம்சங்கள் குறித்து நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவையின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
-
இன்று த.வெ.க. கட்சியின் 2-ம் ஆண்டு துவக்க விழா : 3 ஆயிரம் நிர்வாகிகளுக்கு அழைப்பு
25 Feb 2025சென்னை : இன்று த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் முக்கிய அறிவிப்புகளை விஜய் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
த.வெ.க. 2-ம் ஆண்டு விழா: புதுச்சேரி முதல்வர் வாழ்த்து
25 Feb 2025புதுச்சேரி : இன்று நடைபெறவுள்ள த.வெ.க.ஆண்டு விழா சிறக்க வாழ்த்துகிறேன் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
-
பட்டியலின மாணவர்களுக்கான உதவித்தொகை குறைப்பு: கார்கே கடும் கண்டனம்
25 Feb 2025டெல்லி : பட்டியலின மாணவர்களுக்கான உதவித்தொகை குறைக்கப்பட்டுள்ளதை கண்டித்து கார்கே கண்டனம் தெரிவித்துள்ளது.