எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
விரைவில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், வாய்ப்பு கிடைத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்த தயாராக இருப்பதாக அந்த அணியின் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக அவர் பேசியதாவது: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்த வாய்ப்பு கிடைத்தால், அதற்கு நான் கண்டிப்பாக தயாராக இருக்கிறேன். எனக்கு தலைமைப் பண்பில் நம்பிக்கை இருக்கிறது. அணியின் தலைவனாக அணியை வழிநடத்துவது மிகப் பெரிய பொறுப்பு. அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்துவதில் எந்த ஒரு குழப்பமும் இல்லை. அணியை கேப்டனாக வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தால், கண்டிப்பாக அதனை ஏற்றுக் கொள்வேன். கேப்டன் பொறுப்பை நிராகரிக்க எந்த ஒரு காரணமும் இல்லை என்றார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்த வெங்கடேஷ் ஐயர், அந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு மெகா ஏலத்தில் அதே அணியால் ரூ.23.75 கோடிக்கு வாங்கப்பட்டார். இதுவரை 51 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள வெங்கடேஷ் ஐயர் 1,326 ரன்கள் குவித்துள்ளார். இதற்கு முன்பாக எந்த ஒரு தொழில்முறை போட்டியிலும் வெங்கடேஷ் ஐயர் கேப்டன் பொறுப்பு வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
___________________________________________________________________________________________
இந்தியாவிற்கு சாதகம்: கம்மின்ஸ்
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 போட்டி பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று ஆடாததால், ஹைபிரிட் முறையில் துபையில் இந்திய ஆட்டங்கள் நடைபெறுகின்றன. வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுடன் துபையில் நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்தியாவின் அடுத்த ஆட்டம் வருகிற ஞாயிறன்று (மார்ச் 2) நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும். நியூசிலாந்து அணி இதுவரை வங்கதேசம், பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியாவுடன் புள்ளிப்பட்டியலில் சமமாக உள்ளனர்.
காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாட முடியாத நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இதுகுறித்து பேசியதாவது: ”இவ்வாறு போட்டி தொடர்வது நல்லது என்றே நான் நினைக்கிறேன். ஆனால், ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகமாக அமையும். அவர்கள் ஏற்கனவே வலுவான அணியாக உள்ளனர். அத்துடன், அனைத்துப் போட்டிகளையும் ஒரே மைதானத்தில் ஆடுவது அவர்களுக்கு கூடுதலாக பலனளிக்கும்” என்றார். மேலும், ”வீட்டில் இருந்து எல்லாவற்றையும் பார்ப்பது நன்றாக இருக்கின்றது. கணுக்கால் காயம் குணமாகி வருகின்றது. இந்த வாரம் மீண்டும் ஓட்டப் பயிற்சி மற்றும் பந்துவீச்சைத் தொடங்கவுள்ளேன்” என்று கம்மின்ஸ் கூறினார்.
___________________________________________________________________________________________
சிறந்த வீரரை பார்த்ததில்லை - பாண்டிங் பாராட்டு
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அரையிறுதி வாய்ப்பையும் ஏறக்குறைய உறுதி செய்து விட்டது. விராட் கோலியை பல முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பாரட்டி வருகின்றனர். அந்த வரிசையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் 50 ஓவர் கிரிக்கெட்டில் விராட் கோலி போன்று சிறந்த வீரரை தான் பார்த்தது இல்லை என்று பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "பெரிய போட்டிகளுக்கு சமமான வீரர்கள் வேண்டும் என்று நான் எப்போதும் சொல்வேன். அழுத்தமான நேரத்தில் அசத்தக்கூடிய பெரிய வீரர் தேவை. இந்திய அணிக்கு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை விட பெரிய போட்டி இல்லை. சர்வதேச போட்டிகளில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை பொறுத்தே உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். எனவே கோலி சிறப்பாக விளையாடியதில் எனக்கு ஆச்சரியம் இல்லை. இந்த போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ததை விட அவர்களுக்கு சாதகமான விஷயம் கிடையாது. எனவே அந்த போட்டியை வெல்வதற்கு டாப் ஆர்டரில் சிறப்பாக விளையாடுவதற்கு ஒருவர் தேவைப்பட்டார். அதனை விராட் கோலி மீண்டும் செய்து முடித்தார் என கூறினார்.
___________________________________________________________________________________________
ஸ்மிருதி மந்தனா வருத்தம்
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு - உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 180 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ் அணியும் 20 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக ஆட்டம் 'டை' ஆனது. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி 8 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 9 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 4 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் முறையில் பெங்களூருவை வீழ்த்தி உ.பி.வாரியர்ஸ் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் பெங்களூரு கேப்டன் ஸ்மிருதி மந்தனா அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த தோல்வி மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இப்போட்டியில் நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நிறைய விஷயங்களைச் சரியாகச் செய்தோம். நாங்கள் இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு வலுவாக மீண்டு வருவோம். இந்தப் போட்டியில் நான் சோபிக்க தவறினேன். அதனால் சில விஷயங்களில் உழைத்து வலுவாக மீண்டு வருவேன். எல்லிஸ் பெர்ரி போன்ற ஒரு ஆல் ரவுண்டர் எங்கள் அணியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், அவரின் பந்துவீச்சு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அனைத்து பந்து வீச்சாளர்களும் மிகச் சிறப்பாக பந்து வீசினர். கிரிக்கெட்டில் இதுபோன்ற விஷயங்கள் நடக்கும். அதனால் இதிலிருந்து நாங்கள் முன்னேறுவோம் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 4 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-02-2025.
25 Feb 2025 -
எங்களை ஏமாற்றினால்... ஜாக்டோ ஜியோ அமைப்பு எச்சரிக்கை
25 Feb 2025சென்னை : எங்களை ஏமாற்றினால் 2026 தேர்தலில் தி.மு.க. அரசு ஏமாந்து போகும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
மார்ச் 5-ல் அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை : முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
25 Feb 2025சென்னை : தமிழகத்தில் இருக்கக்கூடிய 8 எம்.பி.
-
தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் மாநிலங்களின் குரலை நசுக்கும் மத்திய அரசு: கனிமொழி குற்றச்சாட்டு
25 Feb 2025சென்னை : தொகுதி மறுசீரமைப்பு மூலமாக தென் மாநிலங்களின் குரலை மத்திய பா.ஜ.க. அரசு நசுக்கத் திட்டமிடுகிறது என தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
-
நாம் இன்னொரு மொழிப்போரை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் : தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
25 Feb 2025சென்னை : ஆதிக்கத்தை எதிர்ப்பதும், தாய்மொழியைக் காப்பதும் தி.மு.க. தொண்டர்களின் ரத்தத்தில் ஊறிய உணர்வு. உயிர் அடங்கும் வரை அந்த உணர்வு அடங்காது.
-
அதி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
25 Feb 2025சென்னை : தி.மு.க. நிர்வாகத் திறமையின்மையை மறைக்க, திசைதிருப்பவே கோவை வடக்கு அதி.மு.க. எம்.எல்.ஏ.
-
ரமலான் நோன்புக் கஞ்சி தயாரிக்க மசூதிகளுக்கு 7,920 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதல்வர் உத்தரவு
25 Feb 2025சென்னை : புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிக்கும் முஸ்லிம்களுக்கு நோன்புக் கஞ்சித் தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளா
-
பாலியல் குற்றச்சாட்டு வழக்கு: சீமான் நாளை நேரில் ஆஜராக சம்மன்
25 Feb 2025சென்னை : நீதிமன்ற உத்தரவையடுத்து, நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நாளை நேரில் ஆஜராகும்படி சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
-
மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்காக நீர் திறப்பு
25 Feb 2025மேட்டூர் : மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உச்சம்
25 Feb 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (பிப். 25) சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,600-க்கும் புதிய உச்சத்தைத் தொட்டு விற்பனையானது.
-
ஆதரவற்றோரை சுட்டுக்கொன்ற நபருக்கு 40 ஆண்டுகள் சிறை
25 Feb 2025லாஸ் வேகாஸ் : அமெரிக்காவில் ஆதரவற்றோரை சுட்டுக்கொன்றவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
நா.த.க. ராணிப்பேட்டை மாவட்ட செயலர் விலகல்
25 Feb 2025சென்னை : நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
-
மும்மொழிக் கொள்கை விவகாரம்: பா.ஜ.க.வில் இருந்து ரஞ்சனா நாச்சியார் விலகல்
25 Feb 2025சென்னை : மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வில் இருந்து ரஞ்சனா நாச்சியார் விலகியுள்ளார்.
-
விமான நிலையத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ், ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு
25 Feb 2025சென்னை : சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி காந்த் அமைச்சர் அன்பில் மகேஸ் சந்தித்து பேசினர்.
-
ரஷ்ய படைகளை திரும்பப்பெற வேண்டும்: ஐ.நா. தீர்மானத்தை புறகணித்த இந்தியா உள்ளிட்ட 60 நாடுகள்
25 Feb 2025ஜெனீவா : உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தி ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது.
-
சென்னையில் ரூ. 8 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்தார முதல்வர் மு.க.ஸ்டாலின்
25 Feb 2025சென்னை : சென்னை, கோபாலபுரத்தில் ரூ.
-
உ.பி. மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு
25 Feb 2025லக்னோ : மகா கும்பமேளா புதன்கிழமையுடன் நிறைவுபெறும் நிலையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
-
வங்கக் கடலில் நிலநடுக்கம்
25 Feb 2025ஒடிசா : ஒடிசா அருகே வங்கக் கடலில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
காணாமல் போன மலேசிய விமானம்: 11 ஆண்டுகளுக்கு பின்பு தேடுதல் பணி துவக்கம்
25 Feb 2025மலேசியா : மலேசிய விமானம் மர்மமான முறையில் மாயமாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் அந்த விமானத்தை தேடும் வேட்டையில் மலேசிய அரசு தொடங்கியுள்ளது.
-
டெல்லி சட்டசபையில் அமளி: 12 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்
25 Feb 2025புதுடெல்லி : டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்த அம்பேத்கர் புகைப்படத்தை நீக்கிவிட்டு பிரதமர் மோடியின் படம் வைக்கப்பட்டதாக கூறி டெல்லி சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட 12 எ
-
பட்ஜெட் சிறப்பம்சங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
25 Feb 2025சென்னை : பட்ஜெட் சிறப்பம்சங்கள் குறித்து நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவையின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
-
கனடாவில் புதிய விசா விதிமுறைகள்: இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு
25 Feb 2025கனடா : கனடாவில் வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்க விசா வழங்குவதில் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
-
மும்பையில் 3 நாட்கள் வெப்ப அலை வீசும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
25 Feb 2025மும்பை : மும்பையில் அடுத்த 3 நாள்களுககு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
இன்று த.வெ.க. கட்சியின் 2-ம் ஆண்டு துவக்க விழா : 3 ஆயிரம் நிர்வாகிகளுக்கு அழைப்பு
25 Feb 2025சென்னை : இன்று த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் முக்கிய அறிவிப்புகளை விஜய் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
பாக். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 22 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்
25 Feb 2025அகமதாபாத் : பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 22 இந்திய மீனவர்கள் நேற்று நாடு திரும்பினர்.