எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மார்ச் 13 - பாராளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தின் முதல்நாளான நேற்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் உரையாற்றினார். அவரது உரையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் குறித்து எதுவும் இடம்பெறாததற்கு அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது. கூட்டத்தின் முதலாம் நாளான நேற்று இரு சபைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா தேவிசிங் பாட்டீல் நீண்ட உரையாற்றினார். அப்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதம் வரை இருக்கும் என்பது உட்பட பல்வேறு பிரச்சனைகள் உரையில் இடம்பெற்றிருந்தது. ஜனாதிபதி உரையை அ.தி.மு.க. உறுப்பினர்கள் கவனமாக கேட்டுவந்தனர். உரையின் கடைசி நேரத்தில்கூட இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கமிஷன் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவந்து தாக்கல் செய்துள்ள தீர்மானத்திற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அதாவது தீர்மானம் குறித்து ஜனாதிபதி உரையில் இதுவும் இடம் பெறவில்லை.
இலங்கையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இறுதிப்போரில் பாகிஸ்தான், சீனாவின் கருத்து கேட்டு அப்பாவி தமிழர்கள் மீது ரசாயான குண்டுகளை வெடித்து ஆயிரக்கணக்கான தமிழர்களை அதிபர் ராஜபக்சேவின் உத்தரவின்பேரில் கொன்று குவித்தனர். தப்பிய தமிழர்களை சிங்கள ராணுவம் கொடுமை செய்தது. இளைஞர்களாக இருந்தால் அவர்களின் உறுப்புக்களை வெட்டுவது, கண் பார்வையை கெடுத்து குருடர்களாக்கியும் பட்டினி போட்டும் கொடுமை படுத்தினர். இளம் பெண்களாக இருந்தால் அவர்களை வெறித்தனத்தோடு கற்பழிப்பது போன்ற கொடூர செயல்களிலும் ஈடுபட்டனர். அதோடு மட்டுமல்லாது முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு எந்தவித வசதியும் செய்து கொடுக்காமல் கடும் குளிரிலும்,வெய்யிலும் போட்டு வாட்டி எடுத்தனர். இதுகுறித்து நண்பு என்ற போர்வையில் கண்டுகொள்ளாமல் மத்திய அரசு இருந்து வந்தது. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டும், கொடுமைப்படுத்தியும் வந்ததை எப்படியோ வீடியோ படம் எடுத்தன. அதோடுமட்டுமல்லாது வெளிநாடுகளிலும் வசிக்கும் தமிழர்கள் வசிக்கும் தமிழர்கள் ஒன்று திரண்டு இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா.விடமும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகளிடம் கோரின. அதனைத்தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கமிஷனில் இலங்கை அதிபர் ராஜபக்சே போர்க்குற்றவாளியாக அறிவிக்கக்கோரும் தீர்மானத்தை கொண்டுவர அமெரிக்கா முடிவு செய்தது. இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா 3 முறை கடிதம் எழுதியுள்ளார். அதற்கு மன்மோகன் சிங் இதுவரை பதில் கடிதம் எழுதியதாக தெரியவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. சென்னை வந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா? என்று நிருபர்கள் கேட்டதற்கு இலங்கை நட்பு நாடு என்றும் அதேசமயத்தில் தமிழர்களின் உணர்வுகள் புரிந்துகொள்ளப்படும் என்றும் மழுப்பலாக கூறினார். ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கமிஷனின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. தீர்மானம் குறித்து ஜனாதிபதி உரையில் மத்திய அரசு கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஜனாதிபதி உரையின் இறுதியில் ராஜ்யசபையின் அ.தி.மு.க. குழுத்தலைவர் மைத்ரேயன் குறுக்கிட்டு, இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து மத்திய அரசு கருத்து எதுவும் தெரிவிக்காததற்கு கண்டனம் தெரிவித்தார். இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து மத்திய அரசு தனது நிலையை விளக்காதது ஏன்? தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்து வருகிறது என்றும் மைத்ரேயன் கடுமையாக குற்றஞ்சாட்டினர். இதற்கு பாராளுன்ற இருசபை எம்.பி.க்களும் ஆதரவு தெரிவித்தனர். ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் குறித்தும் உரையில் இடம்பெறாததற்கு அந்த மாநிலத்தை சேர்ந்த பெரும்பாலான எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
27 Apr 2024சென்னை, அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தே
-
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை
27 Apr 2024சென்னை:பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
-
உறவினர் உடல்நலக்குறைவால் மரணம்:ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
27 Apr 2024புதுடெல்லி:மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்த பஞ்சாப்
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது.
-
சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிட்டார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
27 Apr 2024ஐதராபாத்:ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று (ஏப்.
-
அமெரிக்காவில் விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு: குஜராத்தைச் சேர்ந்தவர்கள்
27 Apr 2024வாஷிங்டன், அமெரிக்காவில் சொகுசு கார் விபத்துக்குள்ளானதில், குஜராத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
-
மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது : மத்திய பா.ஜ.க. அரசு மீது செல்வப்பெருந்தகை தாக்கு
27 Apr 2024சென்னை:பா.ஜ.க. அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.மேலும், பா.ஜ.க.
-
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்:பஞ்சாப் வீரர் ஷசாங்க் சிங் நம்பிக்கை
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்கள் குவித்த ஷசாங்க் சிங், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
27 Apr 2024மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தில் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
கேரளாவில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
28 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
-
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் நீதிபதி கடத்தல்
28 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் நீதிபதியை கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbs
-
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ உதவிகள்: ஆஸ்திரேலியா அறிவிப்பு
28 Apr 2024கீவ், உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.