எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அபுதாபி, மே 1 - கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக அபுதாபியில் நடந்த ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. இரு அணிகளின் 20 ஓவர்கள் ஸ்கோர் சமனில் முடிய, சூப்பர் ஓவர் ஸ்கோரும் சமனில் முடிந்தது. கொல்கத்தா அணியை விட ராஜஸ்தான் அணி அதிக பவுண்டரிகள் அடித்திருந்ததால், விதிகளின் படி ராஜஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் வாட்சன், டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். துவக்க வீரர் ரஹானே தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்க்க ஆரம்பித்தார். மறுமுனையில் இருந்த நாயர் வினய் குமார் வீசிய பந்தை அடித்து ஆட முயற்சி செய்து 1 ரன்னுக்கு வீழ்ந்தார். தொடர்ந்து வந்த சாம்சன் அதிரடி ஆட்டத்துடன் கொல்கத்தாவின் பந்துவீச்சாளர்களை திணறடித்தார். முன்னணிப் பந்துவீச்சாளர் மார்னே மார்கல் வீசிய 6-வது ஓவரில் சாம்சன் 4 பவுண்டரிகளை அடித்தார். ஆனால் அவரது அதிரடி ஷகிப் அல் ஹசன் வீசிய 9-வது ஓவரில் முடிவுக்கு வந்தது. அடுத்து ஜோடி சேர்ந்த வாட்சன், ரஹானே ஜோடி அணியை சிறப்பான ஸ்கோரை நோக்கி வழிநடத்தியது.
ரஹானே 44 பந்துகளில் அரை சதம் எடுத்தார். சிறப்பாக ஆடிவந்த வாட்சன் துரதிர்ஷடவசமாக 33 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். தொடர்ந்து வந்த பின்னி முதல் பந்திலேயே ஆட்டமிழக்க, ஸ்மித், ரஹானேவுடன் இணைந்தார். ரஹானே கடைசி ஓவரில் 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை எடுத்தது.
வெற்றிக்கு 151 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு, துவக்க வீரர்களாக பிஸ்லா மற்றும் காம்பீர் களமிறங்கினர். சென்ற போட்டிகளில் மோசமாக ஆடிய காம்பீர், இன்று கவனமாக ஆடினார். 3-வது ஓவரில் பிஸ்லா வீழ, காலிஸ் களமிறங்கினார். இந்த ஜோடியும் வெகு நேரம் நீடிக்கவில்லை. காலிஸ் 13 ரன்களுக்கு டாம்பேவிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த பாண்டே, 19 ரன்களில் வீழ்ந்தார். அடுத்த ஓவரிலேயே காம்பீரும் 45 ரன்களுக்கு ஆட்டமிழக்க கொல்கத்தா அணியின் வெற்றிவாய்ப்பு மெலிந்தது. இந்த கட்டத்தில் ஜோடி சேர்ந்து ஆடிய யாதவ் மற்றூம் ஷகிப் அல் ஹசன் இருவரும் சூழலுக்கு ஏற்ப தங்களது ஆட்டத்தின் தன்மையை மாற்றினர். குறிப்பாக 17 மற்றும் 18-வது ஓவர்களில், இந்த இணை 26 ரன்களைச் சேர்த்தது. 19-வது ஓவரை வீச வந்த ஃபால்க்னர் யாதவ்வை வீழ்த்தி ராஜஸ்தான் அணிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதே ஓவரில் மேலும் உத்தப்பா மற்றும் வினய் குமார் விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றினார்.
கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் ரிச்சர்ட்சனின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ஷகிப். அடுத்த பந்தில் 2-வது ரன் எடுக்க முற்படும்போது பியூஷ் சாவ்லா ரன் அவுட் ஆனார். அடுத்த 4 பந்துகளில், ஒரு வைட் உட்பட 6 ரன்கள் மட்டுமே வர, ஆட்டம் சமன் ஆகி, சூப்பர் ஓவருக்குச் சென்றது. அணியை வெற்றியின் விளிம்பிற்கு எடுத்துச் சென்ற ஷகிப் அஉல் ஹசன் 18 பந்துகளில் 29 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
சூப்பர் ஓவர்
சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய கொல்கத்தா, முதல் பந்திலேயே யாதவ்வை இழந்தது. 4-வது பந்தில் பாண்டே அதிரடியாக ஒரு சிக்ஸர் அடிக்க கடைசிப் பந்தில் ஷகிப் அல் ஹசன் ரன் அவுட் ஆனார். ஒரு ஓவரில் கொல்கத்தா 11 ரன்களை எடுத்தது.
ஒரு ஓவரில் 12 ரன்கள் தேவை என்று ஆட வந்த ராஜஸ்தான் அணிக்கு சவாலாக, கொல்கத்தாவின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் பந்துவீச வந்தார். முதல் 3 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே வர, 4-வது பந்தை வாட்சன் பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட ஸ்மித் 2 ரன்கள் மட்டுமே அடித்ததால் மீண்டும் ஆட்டம் சமனில் முடிந்தது. ஆனால், விதிகளின் படி, ராஜஸ்தான் அணி கொல்கத்தாவை விட அதிக பவுண்டரிகள் அடித்திருந்தால், அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.6 hours 18 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
இந்தோனேசிய வீராங்கனை சாதனை
26 Apr 2024மங்கோலியா பெண்கள் கிரிக்கெட் அணி இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 ஆட்டங்கள் அடங்கிய சர்வதேச 20 ஓவர் தொடரில் பங்கேற்றது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
வாக்குப்பதிவு நாளில் சி.பி.ஐ. சோதனை: தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் கட்சி புகார்
27 Apr 2024கொல்கத்தா, தேர்தல் நாளில் சந்தேஷ்காலியில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதற்கு எதிராக மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது