எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்செந்தூர்,நவ.01 - திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்தசிஷ்டி திருவிழா சூரசம்ஹார நிகழ்ச்சி. லட்சக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையில் தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இரண்டாம் படை வீடாகும். வங்க கடலோரம் மிக அழகாக அமைந்துள்ள திருத்தலம். இத்திருக்கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அவற்றுள் மிக மிக முக்கியமான திருவிழா சூரசம்ஹார திருவிழா ஆகும். தேவர்களின் உரைகளை கேட்ட சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் தோன்றியவர் சுப்பிரமணிய சுவாமி. சிவபெருமானின் சக்தியாக வெளிப்பட்ட சுப்பிரமணியசாமி சுவாமி சூரனை வதம் செய்து ஆட்கொண்ட திருத்தலம் திருச்செந்தூராகும்.
இத்திருத்தலத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சியை காண்பதற்கும் முருகப்பெருமானின் அருளை வேண்டியும் கடந்த 26ம் தேதி முதல் கந்தசிஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் தொடங்கிய நாள்முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கோவில் உள்ளேயும், வெளிப்பிரகாரங்களிலும் தற்காலிக மற்றும் நிரந்தர மண்டபங்களிலும், கோவில் மற்றும் தனியார் விடுதிகளிலும் கடுமையான விரதம் மேற்கொண்டுள்ளார்கள். இந்தியா மட்டுமல்லாது இலங்கை, மலேசியா, லண்டன், அமெரிக்கா, ஐப்பான் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் விரதம் இருக்கிறார்கள்.
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 1.30க்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கியது. காலை 10 மணிக்கு மூலவருக்கும் யாகசாலையில் ஸ்ரீஜெயந்திநாதருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பகல் 11.30 மணிக்கு உச்சிக்காலை தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து யாகசாலையில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி, தெய்வாணையுடன் தங்க சப்பறத்தில் மேள தாளங்கள் முழங்க பக்தர்களின் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்கள் பாட சண்முகஉலாச மண்டபம் எழுந்தருளினார். அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து திருவாவடுதுறை ஆதியினம் கந்தசிஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 4.40 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் பக்தர்கள் புடை சூழ கடற்கரையில் சூரசம்ஹாரத்திற்கு கிளம்பினார். முதலில் சாரகசூரன் யானை முகத்துடன் முருகப்பெருமானிடம் சண்டையிடும் காட்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிங்கமுகாசூரன் வதம் நடபெற்றது. அதனையடுத்து ஆணவமே உருவான சூரபத்மன் முருகப்பெருமானிடம் சண்டையிடும் காட்சி நடைபெற்றது. சூரனை வதம் செய்யும் பொழுது கடற்கரையில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற கோஷங்கள் விண்ணதிர சூரசம்ஹாரம் நடைபெற்றது. மாயமான சூரபத்மன் சேவல் உருக்கொண்டு முருகனிடம் போரிட வந்தான். சூரபத்மனின் மாயத்தோற்றத்தில் வந்த சேவலை முருகபெருமான் தனது கொடியாக மாற்றிக் கொண்டார். இந்த நிகழ்வு நடைபெற்ற போது வானத்தில் கருடன் மூன்று முறை வலம் வந்தது. இந்த காட்சியை கூடியிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர்.
சூரசம்ஹாரம் முடிந்தபின் சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் உள்ள சந்தோஷமண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஜெயந்திநாதர் வள்ளி தெய்வாணையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து திருக்கோவில் உள்ளே உள்ள 108 மகாதேவ சன்னதி அடைந்தார். அங்கு சுவாமிக்கு எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்பட்டு அந்த கண்ணாடியில் தெரியும் சுவாமியின் பிம்பத்திற்கு யாகசாலையில் 6 நாளும் பூஜை செய்யப்பட்ட கும்பங்களில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் கையில் தகடு கட்டிக் கொண்டார்கள். இன்று காலை 6 மணிக்கு தெய்வாணை அம்பாள் தபசு கோலத்தில் தெப்பக்குளம் அருகே உள்ள மண்டபத்திற்கு எழுந்தருவார். மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான் தங்கமயில் வாகனத்தில் தெப்பக்குளம் அருகே மடத்தில் தபசு கோலத்தில் இருக்கும் தெய்வாணை அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோள்மாலை மாற்றும் காட்சி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து இரவு திருப்பணி மண்டபத்தில் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
முன்னதாக சூரபத்மன் தனது பரிவாரங்களுடன் மேலக்கோவில் என்றழைக்கப்படும் சிவன் கோவிலில் இருந்து ஊர்வலமாக தனது பரிவாரங்களுடன் 8 வீதிகளிலும் வலம் வந்து திருக்கோவில் கடற்கரையில் வந்தடைந்தார். சூரசம்ஹாரம் நிகழ்ச்சியைக்காண கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், அறநிலைத்துறைய ஆணையர் சந்திரகுமார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை, இந்துசமயஅறநிநிலையத்துறை செயலாளர் ராஜேந்திரன், ராம்கோ சிமெண்ட் உரிமையாளர் ராமசுப்பிரமணிய ராஜா, திருக்கோவில் பிரசாத ஸ்டால் உரிமையாளர் ஹரிகரமுத்து, ஹோட்டல் மணி ஐயர் உரிமையாளர் மூர்த்தி, ரமணி, ஆனந்த், சிவமுருகன் லாட்ஜ் உரிமையாளர் அருள், அர்ச்சனா ஹோட்டல் உரிமையாளர் கிட்டப்பா, திருச்செந்தூர் பேரூராட்சி ஒன்றிய தலைவர் சுரேஷ் பாபு, ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் ஹேமலதா, நகர செயலாளர் மகேந்திரன், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், அசோக் பவன் உரிமையாளர் ராஜா, திருக்கோவில் இணை ஆணையர் பாஸ்கரன், அலுவலக கண்காணிப்பாளர் செல்வகுமாரி, திருச்செந்தூர் பேரூராட்சிமன்ற உறுப்பினர்கள் அரசு இந்திர மீனா, சுப்புலெட்சுமி, மணிகண்டன், லெட்சுமணன், ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வினோத், மலேசியாவை சேர்ந்த டப்போ எஸ். தவராஜா, தத்தின் ருக்மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து சார்பில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயார் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர் இசக்கி, பிரதாபன் ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர். ஊர்காவல் படை சார்பில் 500 ஊர்காவல் படை தொண்டர்கள் பக்தர்களை வரிசையில் ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். திருச்செந்தூர் செயல் அலுவலர் சுப்பையா தலைமையில் நூற்றுக்கணக்கான சுகாதார பணியாளர்கள் நகரில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருக்கோவில் வளாகத்தில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிக அளவில் பக்தர்கள் கந்தசிஷ்டி திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்து சூரசம்ஹார நிகழ்ச்சியை கண்டு களித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷிஸ் குமார் நேரடியாக திருச்செந்தூர் வந்து சூரசம்ஹார நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்கள். பல்வேறு அமைப்புகள் சார்பில் சூரசம்ஹார நிகழ்வுகளை காணவந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சூரசம்ஹாரம் முடிந்தபின் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனிதநீராடி முருகனை தரிசனம் செய்து தங்கள் விரதத்தை முடித்துக் கொண்டார்கள். கடந்த 6 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த திருச்செந்தூரில் நேற்று சூரசம்ஹாரத்தன்று காலை 10 மணி முதல் மழையில்லாமல் வெயில் எடுத்ததை பக்தர்கள் சந்தோசமாக பேசிக்கொண்டார்கள். தெய்வசக்தியின் மூலம் தான் மழை இல்லாமல் சூரசம்ஹார நிகழ்ச்சியை பார்க்க இறைவன் அருள் செய்தான் என்று மனநிறைவோடு பேசிக்கொண்டு சென்றார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.6 hours 18 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
ஐ.பி.எல். 41-வது லீக் ஆட்டம்:ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு
26 Apr 2024பெங்களூரு:ஐபிஎல் சீசனின் 41-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
இந்தோனேசிய வீராங்கனை சாதனை
26 Apr 2024மங்கோலியா பெண்கள் கிரிக்கெட் அணி இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 ஆட்டங்கள் அடங்கிய சர்வதேச 20 ஓவர் தொடரில் பங்கேற்றது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்:பெங்களூருவில் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்
26 Apr 2024பெங்களூரு:கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
வாக்குப்பதிவு நாளில் சி.பி.ஐ. சோதனை: தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் கட்சி புகார்
27 Apr 2024கொல்கத்தா, தேர்தல் நாளில் சந்தேஷ்காலியில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதற்கு எதிராக மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.