எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, பிப். 23 - இரண்டு இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள நிலைமை குறித்து ஆலோசிப்பதற்காக இத்தாலிய துணைவெளியுறவு மந்திரி மிஸ்துரா நேற்று டெல்லி வந்து மத்திய வெளியுறவு விவகாரத்துறை இணை அமைச்சரை அவசரமாக சந்தித்துப் பேசினார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையை இத்தாலியில் நடத்த வேண்டும் என்று அந்நாடு கோரிவரும் நிலையில் இத்தாலிய அமைச்சரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மீனவர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் வழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது. அவர்கள் ராமேஸ்வரத்திலிருந்து சென்றாலும் இலங்கை கடற்படையால் தாக்கப்படுகிறார்கள். எல்லை தாண்டி வந்ததாக குற்றம் சாட்டி இவர்களை இலங்கை கடற்படை தாக்கி கொன்று வருகிறது. சரி, ராமேஸ்வரம் மீனவர்களுக்குத்தான் எல்லை பற்றி தெரியவில்லை என்பதை ஒருவாதத்திற்காக ஏற்றுக்கொண்டாலும்கூட, கோடியக்கரை மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொல்வதை எந்த வகையில் ஏற்றுக்கொள்ளமுடியும்? நேற்றுகூட நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் இருந்து சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற் படையினர் தாக்கி அவர்களது வலைகளை அறுத்தெறிந்து மீன்களை கொள்ளையடித்ததோடு, பெட்ரோல் குண்டுகளையும் வீசிவிட்டு போய் இருக்கிறார்கள். இதில் பல மீனவர்கள் காயத்தோடு தப்பிவிட்டார்கள். இந்திய கடலோர காவல்படை என்னதான் செய்கிறது என்று தெரியவுமில்லை, புரியவுமில்லை. மீனவர்களுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்ய மட்டும்தான் இந்த படைக்கு தெரியும்போலும்.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள்தான் தாக்கப்படுகிறார்கள் என்றால் கேரள பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இருவருக்கும் சமீபத்தில் ஒரு துயர நிலை ஏற்பட்டது. கடந்த 15 ம் தேதி கேரள கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 2 மீனவர்களை கடற்கொள்ளையர்கள் என்று தப்புக்கணக்கு போட்டு சுட்டுத்தள்ளி இருக்கிறார்கள் இத்தாலியைச் சேர்ந்த ஒரு சரக்கு கப்பலின் பாதுகாவலர்கள். இச்சம்பவத்தில் 2 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வெளிநாட்டவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி சமீபத்தில் கூறியிருந்தார்.
மீனவர்களை சுட்டுக்கொன்ற இரண்டு இத்தாலிய கடற்படையினரும் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இவர்களை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்று துடிக்கிறது இத்தாலி. காரணம் சம்பவம் நடந்த இடம் சர்வதேச கடற்பகுதியாம். அதனால் இந்த வழக்கு விசாரணையையும் இத்தாலியில் தான் நடத்த வேண்டுமாம். இப்படிச் சொல்லி தப்பிக்கப்பார்க்கிறது இத்தாலி. ஆனால் இந்தியா விடுவதாக இல்லை. இந்த விஷயத்தில் சற்று தீவிரமாகவே உள்ளது. இந்தியாவில்தான் விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகளை விசாரணைக்காக இத்தாலியிடம் ஒப்படைக்க முடியாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அதுமட்டுமல்ல, விசாரணை பூர்த்தியடையும்வரை இத்தாலி காத்திருக்கத்தான் வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இத்தாலிய துணை வெளியுறவு அமைச்சர் மிஸ்த்ரா டெல்லி வந்து மத்திய வெளியுறவு இணை அமைச்சர் பிரினித் கவுரை நேற்று சந்தித்து பேசினார். அப்போது இந்த விவகாரம் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது. முன்னதாக இத்தாலியில் இருந்து உயர்மட்ட குழு ஒன்றும் டெல்லி வந்ததோடு, கேரளாவுக்கும் விரைந்துள்ளதாம். எது எப்படி இருந்தாலும் சரி, இந்த விவகாரத்தில் ஒரு கை பார்த்துவிடுவது என்பதில் உறுதியாக உள்ளது கேரள அரசு.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 2 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்18 hours 42 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 21 hours ago |
ஆனியன்ப்ரை1 week 21 hours ago |
-
நெல்லை அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி கொண்டு வந்தது யார்? - போலீசார் தீவிர விசாரணை
15 May 2024சென்னை : சென்னையில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்தில் இருந்து துப்பாக்கி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரப
-
தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு: டெங்கு தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல்கள் வெளியீடு : கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை, தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ம
-
வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து: கதவை உடைத்து பயணிகள் மீட்பு
15 May 2024நெல்லை : நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் கதவை உடைத்து மீட்கப்பட்டனர்.
-
ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்க விபத்தில் 14 பேர் மீட்பு - ஒருவர் உயிரிழப்பு
15 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்கத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
-
ஐ.பி.எல்.லில் புதிய சாதனை
15 May 2024ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 17-வது தொடரில் சிக்சர் மழை அதிக அளவில் பொழியப்பட்டுள்ளது.
-
‛நியூஸ் க்ளிக்' ஆசிரியரை கைது செய்தது செல்லாது : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
15 May 2024புதுடில்லி : "நியூஸ் க்ளிக்'' நிறுவனரும் ஆசிரியருமான பரபீர் புரக்யஸ்தா கைது செய்யப்பட்டது செல்லாது எனக் கூறி, அவரை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் அல்லது பாண்டிங்?
15 May 2024மும்பை : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்-கை நியமிக்க பி.சி.சி.ஐ விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சி.ஏ.ஏ. சட்டத்தின் மூலம் 300 பேருக்கு குடியுரிமை : மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்
15 May 2024புதுடில்லி : சி.ஏ.ஏ.
-
சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்? சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
15 May 2024புதுக்கோட்டை, சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
ஐ.பி.எல். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை? - எஞ்சிய போட்டிகள் தீர்மானிக்கும்
15 May 2024புதுடெல்லி : ஐபிஎல் 2024 தொடரின் அடுத்து வரும் 10 ஆட்டங்கள் தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமைய உள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதுவது யார்?
15 May 2024புதுடெல்லி : டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதப்போகும் அணி குறித்து பி.சி.சி.ஐ.
-
வாக்கு அரசியலுக்காக வேலை செய்பவன் அல்ல: இந்து-முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்ய மாட்டேன் : பிரதமர் நரேந்திரமோடி திட்டவட்டம்
15 May 2024காந்திநகர் : வாக்கு அரசியலுக்காக வேலை செய்பவன் நான் அல்ல என்று தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி, இந்து-முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன் என்று திட்டவட்டமாக தெரி
-
பெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
15 May 2024புவனேஸ்வர் : ஒடிஸாவில் நடைபெறும் ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
-
சுலோவேகியா பிரதமர் துப்பாக்கி சூட்டில் காயம் - மர்ம நபர் கைது
15 May 2024பிரடிஸ்லாவா : சுலோவேகியா பிரதமரை துப்பாக்கியால் சுட்ட சந்தேகத்திற்குரிய நபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
-
பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை
15 May 2024ராஞ்சி : பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் ஆலம்கீர் ஆலம் நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியா காவல் நீட்டிப்பு
15 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் முன்னாள் முதல் மணீஷ் சிசோடியாவின் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் நகைச்சுவை கலைஞர் வேட்புமனு தாக்கல்
15 May 2024வாரணாசி : மோடியை எதிர்த்து உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த இளைஞரான பிரபல மிமிக்கிரி நகைச்சுவை கலைஞர் சியாம் ரங்கீலா(28) வேட்பு மனு தாக்கல் செய
-
லக்னோவை வீழ்த்தியது டெல்லி
15 May 2024புதுடெல்லி : தற்போது நடைபெற்று வரும் 64வது லீக் போட்டியில் லக்னோ அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: 2-வது அரையிறுதிக்கு ரிசர்வ் டே கிடையாது : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு
15 May 2024நியூயார்க் : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
லக்னோவுக்கு எதிராக டெல்லி வெற்றி: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான் அணி
15 May 2024புதுடெல்லி : விறுவிறுப்பாக நடந்து வரும் 17-வது ஐ.பி.எல்.
-
சபரிமலை விபத்தில் குழந்தை உயிரிழப்பு
15 May 2024திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் இருந்து சபரிமலைக்கு புனிதப் பயனம் மேற்கொண்ட பக்தர்களின் வாகனம் சாலையில் குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
-
பிரதமரின் வழிகாட்டுதலில் தேர்தல் ஆணையம்: மம்தா
15 May 2024புதுடில்லி : பொம்மை தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.
-
தேர்தலின் போது ஆந்திராவில் வன்முறை: தலைமை செயலாளர், டி.ஜி.பி.க்கு தலைமை தேர்தல் ஆணையம் சம்மன்
15 May 2024அமராவதி : ஆந்திராவில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக விளக்கமளிக்க தலைமை செயலாளர், டி.ஜி.பி.க்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-05-2024.
16 May 2024