முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெர்மனி - இந்தியா கூட்டு திட்டத்தின் கீழ் தமிழக போக்குவரத்து துறையை சீரமைக்க ரூ.1,600 கோடி ஒதுக்கீடு - ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா அறிவிப்பு

சனிக்கிழமை, 2 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

புது டெல்லி : ஜெர்மனி - இந்தியா கூட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் போக்குவரத்து துறையை சீரமைக்க ரூ.1,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என ஜெர்மனி பிரதமர் அறிவித்துள்ளார்.

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் காலை இந்தியா வந்தார். அவருக்கு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் இந்தியா- ஜெர்மனி அரசுகளுக்கு இடையேயான 5-வது உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இரு நாட்டு பிரதமர்களும் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரு நாடுகளுக்கு இடையே 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதை தொடர்ந்து ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் நேற்று காலை டெல்லியில் நடந்த தொழில் முனைவோர் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

ஜெர்மனி - இந்தியா கூட்டு திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பசுமை நகர்ப்புற இயக்கத்துக்கு ரூ. 8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அதே போல் தமிழகத்தில் போக்குவரத்து துறையை சீரமைக்க ரூ.1,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். டெல்லியில் காற்று மாசுவை நாம் பார்த்து வருகிறோம். அதற்கு தீர்வாக டீசல் பஸ்களுக்கு பதில் மின்சார பஸ்களை பயன்படுத்துவது நல்ல பலனை தரும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் ஏஞ்சலா மெர்கல் அரியானா மாநிலம் குர்கான் அருகே மானேசர் பகுதியில் உள்ள ஜெர்மனி நாட்டு தொழிற்சாலைக்கு சென்று பார்வையிடுகிறார். அங்கிருந்து அவர் டெல்லியில் உள்ள துவாரசா செக்டார் 21 மெட்ரோ ரயில் நிலையத்துக்கு செல்கிறார். ரயில் நிலையத்தின் மாடியில் ஜெர்மனி நாட்டு அரசு நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள ஒளி மின்னழுத்த தகடுகளை பார்வையிடுகிறார். ஜெர்மனியுடனான கூட்டு முயற்சியில் ஒளி மின்னழுத்த தகடுகள் அமைக்கப்பட்டதால் ஏஞ்சலா மெர்க்கல்லின் சுற்றுப்பயணத்தில் துவாரகா மெட்ரோ ரயில் நிலையத்தை பார்வையிட தேர்வு செய்யப்பட்டது. அதன்பின் அவர் டெல்லி விமான நிலையத்துக்கு செல்கிறார். அங்கிருந்து ஜெர்மனிக்கு திரும்புகிறார்.

இதுகுறித்து ஜெர்மனி நாட்டுக்கான இந்திய தூதர் கிறிஸ்டியன் விக்லேர் கூறும் போது, ஜெர்மனி நாடு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு செயல்படுவதில் உறுதியாக இருக்கிறது. அதன்படி ஜெர்மனி நாட்டு அரசு முக்கிய மெட்ரோ நிலையங்களில் ஒளி மின்னழுத்த திட்டங்களை செயல்படுத்த நிதியுதவி அளித்து வருகிறது. மேலும் இ- ரிக்சா திட்டம் குறித்து பிரதமர் ஏஞ்சலா மெர்கல்லுக்கு செயல் விளக்கம் செய்து காட்ட ஏற்பாடு செய்துள்ளோம். இந்த வாகனங்கள் பேட்டரி மூலம் இயங்குகிறது என்பதை பார்க்க உள்ளார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து