எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ. 25 - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் 2 பேர் தங்களை விடுவிக்கக் கோரி தொடர்ந்த வழக்கு விசாரணை வரும் 30 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட எஸ். ஜெயக்குமார்(50) தன்னை விடுவிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 21.5.91 அன்று ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த குற்றத்துக்கு நான் சதித்திட்டம் தீட்டியதாகக் கூறி, நான் மற்றும் 15 பேர் கைது செய்யப்பட்டோம். இந்த வழக்கில் 41 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்களில் 12 பேர் தற்கொலை செய்து உயிரிழந்தனர், 3 பேர் தலைமறைவாகிவிட்டனர். 26 பேர் மட்டுமே தடா நீதிமன்றத்தில் சாட்சி விசாரணையை எதிர்கொண்டனர்.
இந்த வழக்கில் 21.9.98 அன்று 26 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. 11.5.99 அன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட மறுத்ததோடு, அதை ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது.
நான் ஜெயிலில் அடைக்கப்பட்டு 19.6.11 தேதியோடு 20 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இன்னும் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கிறேன்.19.6.05 தேதியுடன் ஜெயிலில் நான் 14 ஆண்டுகளை முடித்திருந்தேன். எனவே வேலூர் ஜெயில் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்து, என்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதைத் தொடர்ந்து 28.12.06 அன்று ஆலோசனைக் குழு முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. ஆனால் என்னை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு ஆலோசனைக் குழு பரிந்துரை செய்யவில்லை. எனவே சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். ஆலோசனைக் குழு விசாரணையையும், உள்துறை செயலாளரின் உத்தரவையும் ஐகோர்ட் தள்ளுபடி செய்து 24.9.08 அன்று உத்தரவிட்டது. விசாரணையை மீண்டும் நடத்தி முடிவு செய்யும்படி ஐகோர்ட் உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து சிறைத்துறை ஐ. ஜி. 17.2.10 அன்று கடிதம் எழுதி, புதிய ஆலோசனைக் குழு முன்பு ஆவணங்களை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து 20.1.10 அன்று விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில், 'கைதியின் வரலாறு, குற்ற நடத்தை, குற்றத்தின் தன்மை ஆகியவற்றை கருத்தில்கொண்டு, ஜெயக்குமாரை முன்கூட்டியே விடுதலை செய்வதை நாங்கள் பரிந்துரைக்க முடியாது என்று ஆலோசனைக் குழு கூறிவிட்டது.
20 ஆண்டுகளுக்கும் மேலாக என்னை ஜெயிலில் அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதமாகும். எனது அடிப்படை உரிமையை பாதிக்கும் நடவடிக்கை அது. தமிழ்நாடு சிறைகள் விதிப்படி, ஆயுள் தண்டனை முடிந்து விடுதலை ஆக வேண்டிய தேதியை கணக்கிட வேண்டும். 20 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு நான் விடுதலை செய்யப்படும் தேதியை, விசாரணை காலத்தில் சிறையில் இருந்த நாட்களை கழித்து முடிவு செய்ய வேண்டும். எனது குற்றம், சிறப்புப் பிரிவின் கீழ் வரவில்லை. எனவே 20 ஆண்டுகள் தண்டனை முடிந்ததும், வெளியே வருவதற்கு எனக்கு தகுதி உண்டு. என்னை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதே போன்று புழல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனைக் கைதி பி. ராபர்ட் பயஸ் என்ற குமாரலிங்கன் தன்னை விடுவிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த 2 மனுக்களும் நீதிபதிகள் சி.நாகப்பன், பி.ஆர்.சிவகுமார் முன்பு விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை வரும் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.6 hours 18 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
ஐ.பி.எல். 41-வது லீக் ஆட்டம்:ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு
26 Apr 2024பெங்களூரு:ஐபிஎல் சீசனின் 41-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
இந்தோனேசிய வீராங்கனை சாதனை
26 Apr 2024மங்கோலியா பெண்கள் கிரிக்கெட் அணி இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 ஆட்டங்கள் அடங்கிய சர்வதேச 20 ஓவர் தொடரில் பங்கேற்றது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்:பெங்களூருவில் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்
26 Apr 2024பெங்களூரு:கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றது.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
வாக்குப்பதிவு நாளில் சி.பி.ஐ. சோதனை: தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் கட்சி புகார்
27 Apr 2024கொல்கத்தா, தேர்தல் நாளில் சந்தேஷ்காலியில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதற்கு எதிராக மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.