எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் நவ. 30 - சேலம் , தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் பொதுமக்களை அதிர்ச் சிக்குள்ளாக்கி விட்டது. 3 மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளிலும் மேட்டூர் அணையின் தண்ணீர்தேக்கப் பகுதிகளிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. நேற்று அதிகாலை 350 மணிக்கு இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அப்போது வேகமான சத்தத்துடன் சூறாவளி காற்று வீசியது. ஆடுகள், மாடுகள் பெருத்த ஓசையுடன் கயிறுகளை அறுத்துக்கொண்டு ஓடியதால் பயந்துபோன பொதுமக்கள் குழந்தைகளை கையில் எடுத்துக்கொண்டு சாலைகளில் வந்து நின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் குழந்தைகளை எடுத்துக்கொண்டு சாலைகளில் வந்து நின்றனர். கிருஷ்ணகிரி பகுதியில் நிலநடுக்கம் 3.3 என பதிவாகியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகாவிற்குட்பட்ட குள்ளாத்திராம் பட்டி, குருக்கலையனூர், மஞ்சார அள்ளி, ஈச்சூர், நாகமறை, ராமகுண்ட அள்ளி, மத்தாளபள்ளம், ஏரியூர், நெருப்ர், பெரும்பாலை, ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. வெடி வெடிப்பது போன்ற சத்தம் போல் கேட்டது.
மேலும் இந்தபகுதியில் வீட்டில் இருந்த பாத்திரங்கள் உருண்டன. இதனால் ஆண்களும், பெண்களும் அலறி அடித்து விட்டு வீட்டை விட்டு ஓடி வந்தனர். சிலர் கைக்குழந்தைகளை தூக்கிக்கொண்டு தெருவுக்கு ஓடி வந்து கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் வெட்டவெளி சாலையில் நின்றனர். சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.
கிராமங்களில் வீட்டுக்கு வெளியே கட்டியிருந்த ஆடு, மாடுகள் கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடின. அவை சத்தம் போட்டுக் கொண்டு ஓடியதால் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டு இருந்த மக்கள் வெளியே ஓடி வந்து பார்த்த போது தான் சிலருக்கு நில நடுக்கம் ஏற்பட்ட தகவல் தெரிந்தது. சில கிராமங்களில் நில நடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு நாய்கள் ஊளையிட்டுக்கொண்டு ஓடி உள்ளன.
இந்த சத்தத்தை கேட்டு சிலர் வீடுகளில் இருந்து வெளியே வந்தனர். அப்போது சூறாவளி காற்று அடித்ததால் எப்படி சத்தம் வருமோ அது போல நிலநடுக்க சத்தம் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்
ஈச்சூர் கிராமத்தில் கோவிந்தன் என்பவரது ஓட்டு வீட்டில் 4 இடத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரி பேருராட்சிக்குட்பட்ட சாம்ராஜ்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும், மற்றும் மேட்டூர் அணையின் தண்ணீர்தேக்கப் பகுதிகளான கூனாண்டியூர், கீரைக்காரனூர், மற்றும் பொட்டனேரி, அரங்கனூர், வெள்ளார் பேரூ ராட்சிக்குட்பட்ட எருமப்பட்டி, நங்கவள்ளி, வனவாசி,ஜலகண்டாபுரம் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.இந்த நில நடுக்கம் 5 முதல் 8நொடிகள் வரை இருந்தது. . நில நடுக்கம் ஏற்பட்ட போது கட்டில் குலுங்கியது. பாத்திரங்கள் உருண்டன. தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் கொட்டும் பனியிலும் வீட்டுக்கு வெளியே ரோடுகளில் நின்றனர். நிலநடுக்கத்தினால் நங்கவள்ளி அருகே தாச காப்பட்டியில் முனியப்பன் என்பவரது வீட்டில் விரிசல் ஏற்பட்டது.
மேச்சேரியை அடுத்த மல்லிகுந்தம் அருகே கூத்தனூரில் ஆஸ்பெட்டாஸ் கூரைகள் நிலநடுக்கத்தால் உராய்ந்து இடி சத்தம் போல கேட்டதாக விவசாயி ஒருவர் தெரிவித்தார். சேலம் மாவட்டம் மேட்டூர், கொளத்தூர், கோவிந்தப்பாடி, குருமனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டது. ஒரு சில வீடுகளில் பாத்திரங்கள் உருண்டன. அதிகாலை 4 மணிக்கு முன்பு நில நடுக்கம் ஏற்பட்டு இருந்தாலும் காலை 8 மணி வரை பெண்களும், ஆண்களும் நிலநடுக்க அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. பீதியில் அவர்கள் தெருவில் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் மீண்டும் வீட்டுக்குள் செல்ல பயந்தனர். மீண்டும் நில நடுக்கம் வந்து விடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர். தாரமங்கலத்தில் அதிகாலை நேரத்தில் ரெயில் போவது போல் திடீரென சத்தம் கேட்டது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருட்கள் குலுங்கியது.
இதனால் நில அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். ஆனால் எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை. காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி, கஞ்ச நாயக்கன்பட்டி, சின்ன திருப்பதி, ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.