முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கும் விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

திங்கட்கிழமை, 21 நவம்பர் 2022      இந்தியா
Supreme-Court 2021 07 19

Source: provided

புதுடெல்லி : வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு நபருடைய பெயரை நீக்கும் போது முன்னதாகவே சம்மந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் பிறப்பித்து விளக்கங்களை பெற தேர்தல் ஆணையத்திற்கு உத்தரடக் கோரிய மனு மீது பதில் அளிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்ம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

தேவ சகாயம் என்பவர் சுப்ரீம் கோர்ட்த்தில் தொடர்ந்த மனுவில், எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் பல தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமான வாக்காளர்கள் உடைய பெயர்கள் நீக்கப்படுவதாகவும் இது கடுமையான குழப்பங்களை ஏற்படுத்துவதாகவும் இந்த விவகாரத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து குறிப்பிட்ட வாக்காளர் பெயரை நீக்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நபருக்கு இது தொடர்பான விவரங்களை தெரிவிப்பதுடன் அவரது பதிலையும் கேட்டு பெற ஏதுவாக தேர்தல் ஆணையத்திற்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என கூறி இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி கேஎம் ஜோசப் தலைமையிலான அமரும் முன்பு விசாரணைக்கு வந்த போது மனுவை பரிசீலித்த நீதிபதிகள் நான்கு வாரத்தில் பதிலளிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து