எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கும்பகோணம் : கும்பகோணத்தில் ஒரு நாளில் 9 கோவில்களை தரிசிக்க நவக்கிரக சிறப்பு பஸ்களை பக்தர்களின் வசதிக்காக அமைச்சர் சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள நவகிரக தலங்களுக்கு ஒரே நாளில் ஒரே பஸ்சில் பயணம் செய்யும் வகையில் சிறப்பு பஸ் இயக்க வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதனை ஏற்று, நவக்கிரக சிறப்பு பஸ் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். அதன்படி, நேற்று நவக்கிரக சிறப்பு பஸ் தொடக்க விழா கும்பகோணத்தில் நடந்தது. விழாவில் எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், அன்பழகன் எம்.எல்.ஏ., அரசு போக்குவரத்து கழக மேலான் இயக்குனர் மோகன், துணை மேயர் சு.ப. தமிழழகன் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த 52 பக்தர்கள் இந்த சிறப்பு பஸ்சில் பயபக்தியுடன் பயணித்தனர். நேற்று ஒரு பஸ் மட்டுமே இயக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் பொதுமக்கள் வரவேற்பு மற்றும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தால் கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
இந்த சிறப்பு பஸ்சானது வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலம் இயக்கப்படும். இதற்கு பயண கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.750 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த சிறப்பு பஸ்சானது முன்பதிவு செய்த பயணிகளை அழைத்துக் கொண்டு காலை 6 மணிக்கு கும்பகோணம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு திங்களூர் சந்திரன் கோவிலுக்கு சென்றது. பின்னர் அங்கு பக்தர்கள் தரிசனம் செய்து முடித்தனர்.
அதனை தொடர்ந்து 2-வதாக திருவாரூர் மாவட்டம் ஆலங்குடிக்கு காலை 7.15 மணிக்கு சென்று அங்கு குரு பகவான் தரிசனம் செய்ய பக்தர்கள் இறக்கி விடப்பட்டனர். தரிசனம் முடிந்த பின்னர் காலை உணவு இடைவேளை விடப்பட்டது.
தொடர்ந்து, ஆலங்குடியில் இருந்து புறப்பட்டு 9 மணிக்கு தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரம் ராகு பகவான் கோவில், 10 மணிக்கு சூரியனார் கோவில் சூரிய பகவான் கோவிலில் தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு கஞ்சனூர் சுக்கிரன் கோவில் தரிசனம், மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் செவ்வாய் தரிசனம், பிற்பகலில் மதிய உணவுக்கான இடைவேளை விடப்படும்.
பின்னர், 2.30 மணிக்கு திருவெண்காடு புதன் கோவில் தரிசனம், மாலை 4 மணிக்கு கீழப்பெரும்பள்ளம் கேது பகவான் தரிசனம், இறுதியாக 4.45 மணிக்கு திருநள்ளாறு சனிபகவான் கோவில் தரிசனத்திற்காக பக்தர்கள் இறக்கி விடப்படுவார்கள். அத்துடன் தரிசனம் நிறைவடையும்.
இதையடுத்து திருநள்ளாறில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் பஸ் இரவு 8 மணிக்கு கும்பகோணத்தை வந்தடையும்.மொத்தம் 9 நவக்கிரக கோவில்களை ஒரே நாளில் பக்தர்கள் தரிசனம் செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பஸ்சில் பயணிக்க tnstc செயலி அல்லது www.tnstc.in என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 1 week ago |
-
உ.பி. மகா கும்பமேளாவில் இன்று புனித நீராடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
04 Feb 2025புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடி, துறவிகளுடன் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
-
தமிழ்நாட்டில் ஒரு வாரம் வெப்பநிலை அதிகரிக்கும் வானிலை மையம் தகவல்
04 Feb 2025சென்னை: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றத்திற்கு பழனியில் இருந்து காவடியுடன் புறப்பட்ட பா.ஜ.வினர் கைது
04 Feb 2025திண்டுக்கல் : பழனியில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு காவடிகளுடன் பாதயாத்திரையாக புறப்பட்ட பா.ஜ.க.வினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
04 Feb 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.840 உயர்ந்து விற்பனையானது.
-
அரசு காலி பணியிடங்கள் எத்தனை? - டி.என்.பி.எஸ்.சி தலைவர் விளக்கம்
04 Feb 2025சென்னை : இந்த ஆண்டு அரசு பணிகளில் எத்தனை காலியிடங்கள் நிரப்பப்படும் என்பது ஏப்ரல் மாதம் தெரியவரும் என்று தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார்.
-
மசோதாக்களுக்கு அனுமதி வழங்காத விவகாரம்: 24 மணிநேரத்தில் தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும் கவர்னருக்கு சுப்ரீம்கோர்ட்டு அறிவுறுத்தல்
04 Feb 2025புதுடெல்லி: மசோதாக்களுக்கு அனுமதி வழங்காமல் கிடப்பில் போடப்பட்ட உள்ளிட்ட விவகாரங்களில் அரசியல் சாசனப்படி 24 மணிநேரத்தில் தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க
-
உ.பி. மகா கும்பமேளாவில் புனித நீராடிய பூடான் மன்னர்
04 Feb 2025லக்னோ: உ.பி. பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் நேற்று புனித நீராடினார்.
-
11-ம் தேதி ராமேசுவரம் வருகிறார் பிரதமர் மோடி
04 Feb 2025சென்னை: பாம்பன் பால திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிற 11-ம் தேதி தமிழகம் வருகிறார்.
-
அரசு பஸ் ஓட்டியபடி ரீல்ஸ் வீடியோ எடுத்த டிரைவர், கண்டக்டர் டிஸ்மிஸ்
04 Feb 2025சென்னை : சென்னையில் பணியின் போது அரசு பஸ் ஓட்டியபடி ரீல்ஸ் எடுத்து வீடியோ ரிலீஸ் செய்த டிரைவர், கண்டக்டர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர்.
-
தி.மு.க. - நா.த.க. இடையே நேரடிப்போட்டி: ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று இடைத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
04 Feb 2025ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 8ம் தேதி நடக்கிறது.
-
உத்தரபிரதேசத்தில் சரக்கு ரெயில்கள் மோதி விபத்து
04 Feb 2025லக்னோ : உத்தரபிரதேசத்தில் 2 சரக்கு ரெயில்கள் மோதி விபத்து ஏற்பட்டது.
-
ரவுடிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கோரி மனு: அபராதத்துடன் தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்
04 Feb 2025சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரனுக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரிய வழக்கை 50 ஆயிரம் ரூபாய் அபராதத்து
-
அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் நிலக்கரி, எரிவாயுவுக்கு இனி 15 சதவீத வரி: சீனா பதிலடி
04 Feb 2025பீஜிங் : டிரம்பின் நடவடிக்கைக்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் நிலக்கரி, எரிவாயுவுக்கு 15 சதவீத வரியை சீனா விதித்துள்ளது.
-
வரும் 16, 25-ல் போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
04 Feb 2025சென்னை : பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற பிப். 16, 25 ஆகிய தேதிகளில் போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ-ஜியோ கூறியுள்ளது.
-
பிப்ரவரி 3-வது வாரத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
04 Feb 2025சென்னை : பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் தமிழக சட்டபேரவை கூடுகிறது. இக்கூட்டத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலைஅறிக்கையை தாக்கல் செய்கிறார்.
-
இன்று இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடல்
04 Feb 2025ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 182 மதுக் கடைகள் மூடப்பட்டன.
-
அங்கன்வாடியில் பிரியாணி, சிக்கன் கேட்ட சிறுவனுக்கு அமைச்சர் பதில்
04 Feb 2025திருவனந்தபுரம் : கேரளத்தில் அங்கன்வாடியில் படிக்கும் சிறுவன், தனக்கு உப்புமாவுக்குப் பதிலாக பிரியாணி வேண்டும் எனக் கேட்டதற்கு கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் பதிலளித்துள்ளார்
-
சங்கத்தமிழ் நாள்காட்டி, கலைஞர் கருவூலம் சிறப்பு இணையப்பக்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
04 Feb 2025சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (பிப்.
-
ராகுல் காந்தி பொறுப்பற்ற அரசியலில் ஈடுபடுகிறார்: ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 Feb 2025புதுடில்லி : தேசிய நலன் சார்ந்த விஷயங்களில் ராகுல் காந்தி பொறுப்பற்ற அரசியலில் ஈடுபடுவது மிகவும் வருத்தமளிக்கிறது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
-
கால்நடைகளை கொண்டு செல்ல புதிய விதிமுறைகளை வெளியிட்ட ஐகோர்ட்
04 Feb 2025சென்னை: கால்நடைகளை லாரிகள் மூலம் கொண்டு செல்லும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை சென்னை ஐகோர்ட்டு வகுத்து, இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி தலைவர் கைது
04 Feb 2025திருப்பூர்: திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
-
தமிழகத்தில் காலநிலை விழிப்புணர்வை மக்களிடம் கொண்டுசெல்ல அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
04 Feb 2025சென்னை: காலநிலை விழிப்புணர்வை மாணவர்கள் மூலமாக அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டுபோய் சேர்க்கவிருக்கிறோம் என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் அனைத்துப் ப
-
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் பணி தொடக்கம்
04 Feb 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை நாடு கடத்தும் பணியை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
-
ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா கோலாகலம்
04 Feb 2025திருப்பதி : ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி திருவிழாவில் பக்தர்கள் வாகன சேவைகளை தரிசனம் செய்தனர்.
-
தைப்பூசம் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் வரும் 12-ம் தேதி கோவில் நடை சாத்தப்படும்
04 Feb 2025ராமேசுவரம் : தைப்பூசம் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பிப்ரவரி 12 அன்று நடை சாத்தப்படுகிறது.