எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவை புதிதாக அமைத்த பிறகு, சனத் ஜெயசூர்யாவை இலங்கை அணியின் முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.சனத் ஜெயசூர்யா இலங்கை வீரர்கள் தலைமுடையை ஒழுங்காக வெட்ட வேண்டும் எனவும் காதில் எதையும் அணியக் கூடாது என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் இடைக்கால பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா கூறியதாவது.,நமது அணிக்கு பொதுவான ஒழுக்கம் தேவை. எனது பதவிக்காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணி ஒழுக்கமாக இருக்க விரும்புகிறேன். வயதில் குறைந்தர்வர்கள் சீனியர்களான நம்மைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.
கிரிக்கெட் என்பது மக்கள் விரும்பும் விளையாட்டாக இருக்க வேண்டும். நாம் நன்றாக செய்தால் நமக்கு பின்னர் வருபவர்களும் அதைப் பின்பற்றுவார்கள். அதனால்தான் இந்த மாற்றங்களை செய்யவிருக்கிறோம். கிரிக்கெட்டை ஜென்டில்மேன் விளையாட்டாக தொடர விரும்புகிறேன். பொறுமையாகவும் திமிர்தனம் காட்டாமல் இருந்தால் நாம் தோல்வியடைந்தாலும் பெரிதாக விமர்சனங்கள் வராது. மக்களிடம் கிரிகெட்டுக்கு ஆழமான காதல் இருக்கிறது. ரோஹித், கோலி, ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்குதான் நஷ்டம், நமக்கு மிகப்பெரிய லாபம் என்றார்.
_______________________________________________________________________
ரியல் மாட்ரிட் புதிய சாதனை
பிரபல கால்பந்து அணியான ரியல் மாட்ரிட் அணியின் 2023/2024 நிதியாண்டின் வருமானம் குறித்து கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) நடைபெற்றது. இதில் வீரர்களுக்கான மாற்றங்கள் இல்லாமலேயே 1.073 பில்லியன் யூரோஸ் ( இந்திய மதிப்பில் 9,076 கோடி 10 லட்சம் ரூபாய்) வருமானம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 27 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ரியல் மாட்ரிட் அணியில் வலைதளத்தில், “2023-2024 நிதியாண்டில் மட்டும் 1,073 மில்லியன் யூரோஸ் வருமானம கிடைத்துள்ளது. இது 2022-2023 நிதியாணடைவிட 27 சதவிகிதம் (230 மில்லியன் யூரோஸ்) அதிகம். இந்த நிதியாண்டில் விளையாட்டரங்கம் முழுமையாக செயல்படாவிட்டாலும் நமது அணி 1 பில்லியன் யூரோஸை எட்டியுள்ளது. வேறெந்த கால்பந்து கிளப் அணியும் எட்டாத சாதனை இது” எனக் குறிப்பிட்டுள்ளது. பிரபல கால்பந்து விரர் லூகா மோட்ரிச் 2025 வரை ரியல் மாட்ரிட் அணியில் விளையாட ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரபல இளம் வீரர் எம்பாப்வேயும் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளது அந்த அணிக்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளது.
_______________________________________________________________________
ஹர்மன்ப்ரீத் கவுர் நெகிழ்ச்சி
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாளத்துக்கு எதிரான இந்தப் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கௌருக்கு ஒய்வு அளிக்கப்பட்டது. துணை கேப்டனான ஸ்மிருதி மந்தனா இந்திய அணியை வழிநடத்தினார். இந்நிலையில் இந்திய மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நேர்காணலில் கூறியதாவது., கிரிக்கெட்தான் எனக்கு எல்லாமுமாக இருக்கிறது. கிரிக்கெட் இல்லையென்றால் நான் எதுவுமே இல்லை.
கிரிக்கெட் எனக்கு அளித்த பெயர்போல வெறெதுவும் எனக்கு அளிக்கவில்லை. அதனால் கிரிக்கெட் எனக்கு கடவுள். நான் சிறிய வயதில் கண்ட கனவு, விளையாடும்போது நினைப்பது எல்லாமே எனக்கு கிரிக்கெட் கொடுத்ததுதான். முதல்முறையாக இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்தபோது அதை பெற்றோர்களுக்கு அனுப்புவதா அல்லது கிரிக்கெட் கற்றுக்கொடுத்த பயிற்சியாளருக்கு அனுப்புவதா என்ற குழப்பம் ஏற்பட்டது. ஏனெனில் இருவர்களுமே எனக்கு சமமானவர்கள் என்றார்.
_______________________________________________________________________
ஆலி போப் நம்பிக்கை
நிச்சயம் ஒருநாள் தங்கள் அணி ஒரே நாளில் டெஸ்ட் போட்டியில் 600 ரன்களை குவிக்கும் என இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஆலி போப் தெரிவித்துள்ளார். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆலி போப் கூறும்போது, “சில சமயங்களில் 280 முதல் 300 ரன்களை ஒரே நாளில் எடுப்போம் அது சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் ஆடியதால் விளைவது. ஆனால், ஒரே நாளில் 500 முதல் 600 ரன்களையும் வரும் நாட்களில் எடுப்போம். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.
ரன்களுக்கான பேரவா இருக்கவே செய்கிறது. ஆம், எப்போதும் ரன் பசி இருக்கிறது. ஆனால் இப்போது கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது. ஒரு பேட்டிங் அணியாக கருணையற்ற விதத்தில் அடித்து ஆட விரும்புகிறோம். ஆனாலும் இந்த ஆட்டத்தை நாங்கள் எப்படி ஆடுவோமோ அதே போல்தான் ஆடுகிறோம். ஏனெனில், இது எங்கள் தேசிய விளையாட்டு. கருணையற்ற விதத்தில் ஆடுவது டெஸ்ட் கிரிக்கெட்டின் ஓர் அங்கமாகும். இப்படி ஆடு என்று போதிக்கப்பட்டுள்ளீர்களா என்று என்னிடம் கேட்டனர். ஆனால், அப்படியெல்லாம் இல்லை. இது எங்கள் இயல்பான ஆட்டம்தான். இப்படித்தான் கிரிக்கெட்டை யோசிக்கிறோம். ” என்றார் ஆலி போப்.
_______________________________________________________________________
தீவிர பயிற்சியில் ஆர்ச்சர்
29 வயதாகும் ஜோப்ரா ஆர்ச்சர் பிப், 2021 முதல் காயம் காரணமாக 3 விளையாடாமல் இருந்தார். இந்நிலையில் பிபிசி ஸ்போர்ட்டுக்கு அளித்த பேட்டியில் ஆர்ச்சர் கூறியதாவது: இந்தாண்டு முழுவதும் உபயோகித்து வரும் ஆஷஸ் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பினை அதிகப்படுத்த வேண்டும். இன்ஸ்டாகிராம் சென்று அதில் ‘ஆர்ச்சர் அடுத்த 2 வாரங்களுக்கு காயம் காரணமாக ஓய்வெடுக்கப் போகிறார்’ என்பது போன்ற பதிவுகளைப் பார்க்க சலிப்பாக இருக்கின்றன.
இந்தாண்டு முழுவதையும் சரியாக பயன்படுத்தி சில நபர்களின் கணிப்பினை தவறென நிரூபிக்க வேண்டியுள்ளது. அடுத்த ஆஷஸ் தொடரில் விளையாடுவேன் என நம்புகிறேன். அடுத்தாண்டு வரும் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட என்னால் முடிந்த அனைத்தையும் முயற்சிப்பேன். சில போட்டிகளில் மட்டும் விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான வேலைப் பளுவை குறைக்க திட்டமிட்டுள்ளேன் என்றார்.
_______________________________________________________________________
இஸ்ரேல் வீரர்களுக்கு தடை?
பாரிசில் ஒலிம்பிக் போட்டிகள் நாளை முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் டேக்வாண்டோ தடகள வீரர் அவிஷாக் செம்பெர்க், ஜிம்னாஸ்டிக் வீரர் ஆர்டெம் டோல்கோபியாட் மற்றும் லானிர் உள்ளிட்ட பல்வேறு இஸ்ரேலிய வீரர் போட்டியில் உள்ளனர். இதேபோல, பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 8 பாலஸ்தீன விளையாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர்.
இதற்கிடையே, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவருக்கு இஸ்ரேலை தடை செய்யக் கோரி பாலஸ்தீன ஒலிம்பிக் கமிட்டி கடிதம் அனுப்பியது. பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பது சட்டவிரோதமானது என ஐ.நா.சபையின் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய கருத்தையும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், பாலஸ்தீனிய ஒலிம்பிக் குழுவின் கோரிக்கையை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் ஆகியோர் நிராகரித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 weeks 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 2 weeks ago |
-
ஈரானின் அணு நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது : அமெரிக்கா தகவல்
16 Oct 2024வாஷிங்டன் : ஈரானின் அணு நிலையம் தாக்குதல் மற்றும் கச்சா எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று இஸ்ரேல் உறுதியளித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
-
பிரதமர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல்: மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு
16 Oct 2024புதுடெல்லி, மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்துவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை வரும் 21-ம் தேதி ரேசனில் வழங்கப்படும் : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல்
16 Oct 2024புதுச்சேரி : தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை வரும் 21-ம் தேதி ரேசனில் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் எஞ்சியுள்ள 30 சதவீத மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடித்து விடுவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
16 Oct 2024சென்னை : சென்னையில் எஞ்சியுள்ள 30 சதவீத மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடித்து விடுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
-
பயங்கரவாதத்திற்கு எதிராக போராட பேச்சுவார்த்தையில் நேர்மை முக்கியம் : எஸ்.சி.ஓ. மாநாட்டில் ஜெய்சங்கர் பேச்சு
16 Oct 2024இஸ்லாமாபாத் : பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவது எனும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ - SCO) முதன்மையான குறிக்கோள்களை அடைய நேர்மையான
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18,000 கனஅடியாக அதிகரிப்பு : அருவிகளில் குளிக்க 4-வது நாளாக தடை
16 Oct 2024ஒகேனக்கல் : கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
-
தீபாவளிக்கு முன்பாக டெல்லி மேயர் தேர்தல்?
16 Oct 2024புதுடெல்லி : டெல்லி மேயர் தேர்தல் தீபாவளிபண்டிகைக்கு முன்பாக நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
வெடிகுண்டு மிரட்டல்: கனடாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: சிகாகோ அழைத்து செல்லப்பட்ட பயணிகள்
16 Oct 2024புதுடெல்லி : டெல்லியில் இருந்து சிகாகோ நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு உள்ளது என மிரட்டல் விடப்பட்ட நிலையில், அந்த விமானம் கனடாவுக்கு திருப்பி விடப்பட்ட
-
தெருக்களில் எங்கும் மழை நீர் தேங்காமல் வடிந்திருப்பதே வெள்ளை அறிக்கைதான் : துணை முதல்வர் உதயநிதி பேட்டி
16 Oct 2024சென்னை : மழைநீர் தடுப்பு பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரியிருந்தது தொடர்பாக பதிலளித்த துணை முதல்வர்
-
சென்னைக்கு ‘ரெட் அலர்ட்’ ஏன் ? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
16 Oct 2024சென்னை, காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலினுள் இருக்கிறது. அது நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இன்னும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கவில்லை.
-
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
16 Oct 2024சென்னை : தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
காசாவில் மனிதாபிமான உதவிகள்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
16 Oct 2024வாஷிங்டன் : காசாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்காவிட்டால் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டு வரும் ராணுவ ஒத்துழைப்பு ரத்து செய்யப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
-
பெங்களூருவில் மழை: இந்தியா-நியூசி. டெஸ்ட்; முதல் நாள் ஆட்டம் ரத்து
16 Oct 2024Sports - Model
பெங்களூரு : இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
-
காஷ்மீர் புதிய முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பு : ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு
16 Oct 2024ஸ்ரீநகர் : ஜம்மு, காஷ்மீர் புதிய முதல்வராக உமர் அப்துல்லா நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
-
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா : மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் கவர்னர் ரவி
16 Oct 2024சேலம் : சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
-
உயிர் கொண்டு அசையும் புகைப்படங்களை செய்தி ஊடகங்களில் வெளியிடக்கூடாது : தலிபான் அரசு அதிரடி உத்தரவு
16 Oct 2024காபூல் : உயிர் கொண்டு அசையும் எந்த ஒன்றின் புகைப்படங்களையும் செய்தி ஊடகங்களில் வெளியிடக் கூடாது என்று தலிபான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரயில்கள் இயங்கும்
16 Oct 2024சென்னை : சென்னை மெட்ரோ ரெயில்கள் இன்று முதல் வழக்கம்போல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
2047-ல் பயங்கரவாதம் இல்லாத நாடாக இந்தியா இருக்கும்: அமித்ஷா
16 Oct 2024புதுடெல்லி : பிரதமர் மோடியின் இலக்கான விக்சித் பாரத் (வளர்ச்சியடைந்த பாரதம்) மக்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கு பாதுகாப்பு வழங்க கூடியதாகவும், போதை மற்றும் பயங்கரவாதம்
-
வங்கக்கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று சென்னை - நெல்லூர் இடையே கரையை கடக்கிறது: சென்னைக்கு மிக கனமழை ஆபத்து இல்லை
16 Oct 2024சென்னை, வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (அக்.17) அதிகாலை
-
அரியானா மாநில முதல்வராக சைனி இன்று பதவியேற்கிறார் : பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்பு
16 Oct 2024பஞ்ச்குலா : சட்டமன்ற கட்சி தலைவராக நயாப் சிங் சைனி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து அரியானா மாநில முதல்வராக அவர் இன்று பதவியேற்று கொள்கிறார்.
-
முகமது ஷமி எப்போது அணிக்கு திரும்புவார் ? - கேப்டன் ரோகித் சர்மா பதில்
16 Oct 2024பெங்களூரு : இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ள நிலையில், முகமது ஷமி எப்போது
-
தாழ்வான பகுதிகளில் அத்தியாவசிய பொருள் வழங்க டிரோன்கள் தயார் : அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
16 Oct 2024சென்னை : சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில் மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு
-
இணைந்து பயணிப்போம்: வெற்றி காண்போம்: உமர் அப்துல்லாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
16 Oct 2024சென்னை : ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்
-
சென்னையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
16 Oct 2024சென்னை : சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி சமுதாய நலக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமில் துணை மு
-
ரூ. 33 ஆயிரம் கோடியில் அமெரிக்காவிடமிருந்து 31 நவீன டிரோன்களை வாங்க இந்தியா ஒப்பந்தம்
16 Oct 2024புதுடெல்லி : ரூ. 33 ஆயிரம் கோடி செலவில் அமெரிக்காவிடம் இருந்து 31 பிரிடேட்டர் ரக டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.