முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கக்கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று சென்னை - நெல்லூர் இடையே கரையை கடக்கிறது: சென்னைக்கு மிக கனமழை ஆபத்து இல்லை

புதன்கிழமை, 16 அக்டோபர் 2024      தமிழகம்
Rain-2023-11-30

சென்னை, வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (அக்.17) அதிகாலை வடதமிழகம் - தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் சென்னை - நெல்லூருக்கும் இடையே கரையைக் கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னைக்கு மிக கனமழை ஆபத்து நீங்கியுள்ளது. 

4 மாவட்டங்களில்... 

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை-தெற்கு ஆந்திரா இடையே இன்று கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று நேற்று முன்தினம் நள்ளிரவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றின் திசை வேகமாறுபாடு காரணமாக அது சென்னை- தெற்கு ஆந்திரா இடையே இன்று கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனமழை ஆபத்து...

அதன் காரணமாக சென்னைக்கு மிக கனமழை ஆபத்து நீங்கியுள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரை கடக்கும் போது அதிகனமழைபெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

தாழ்வு பகுதியாக...

இந்நிலையில் வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது சென்னைக்கு 280 கி.மீ கிழக்கு- தென்கிழக்கிலும், புதுச்சேரிக்கு 320 கி.மீ. கிழக்கு - வடக்கிலும் மையம் கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 15 கி.மீ வேகத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் கரையை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு இடங்களில்...

முன்னதாக இந்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், காற்றின் வேகமாறுபாடு காரணமாக தெற்கு ஆந்திரா நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்துள்ளது. அதனால், சென்னையில் அதிகனமழை மற்றும் கனமழை பெய்யும் வாய்ப்பு குறைந்து, ஆபத்தும் நீங்கியுள்ளது. அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தமும் மற்றும் வங்க கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தமும் இணைந்து அரபிக் கடல் முதல் வங்கக் கடல் வரை பரவியிருந்தது.

2 நாட்களுக்கு மழை...

தற்போது அரபி கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தம் தனியாக பிரிந்து மேற்கு நோக்கி மராட்டியம், கோவா நோக்கி சென்றுவிட்டது. அதன் காரணமாக சென்னைக்கு கனமழை ஆபத்து நீங்கி உள்ளது. இருப்பினும் அடுத்து வரக்கூடிய 2 நாட்களுக்கு சென்னையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து