எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ஆதி திராவிட மாணவர்களின் விடுதிகளில் அடிப்படை வசதிகளை சீர் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
2021 மே மாதம், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. தமிழகம் எங்கும் உள்ள ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் உள்ள சுமார் 1,331 மாணவ, மாணவியர் விடுதிகளில் சுமார் 82,500 பள்ளி மாணாக்கர்களும், சுமார் 16,500 கல்லூரி மாணாக்கர்களும் என சுமார் 99 ஆயிரம் மாணவ, மாணவியர் தங்கியுள்ளனர்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விதிகளின்படி, உணவுப்படி வழங்கப்படுவதாகவும், இது தவிர பண்டிகை காலங்களில் சிறப்பு உணவு வழங்க சிறப்பு நிதியும், சோப்பு, எண்ணெய் போன்ற தினசரி பயன்படுத்தும் பொருட்கள் வாங்குவதற்கு மாதம் ஒருமுறை பள்ளி மாணவர் ஒருவருக்கு ரூ. 100-ம், கல்லூரி மாணவர் ஒருவருக்கு ரூ.150-ம் வழங்கப்படுவதாகவும் தி.மு.க. அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மைலாப்பூரில் உள்ள ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் பல கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ளதாகவும், அங்குள்ள கழிவறைகள் சுகாதாரமின்றி, கதவுகள் உடைந்துள்ள நிலையில் காணப்படுவதாகவும், இரவு நேரங்களில் வெளியாட்கள் வளாகத்தில் மதுபானங்கள் அருந்துவதாகவும் மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் அசைவ உணவு வழங்கப்படும்போது 3-ல் ஒரு பங்கு மாணவர்களே சாப்பிடக்கூடிய அளவில் உணவு வழங்கப்படுவதால், பல மாணவர்கள் சாப்பாடு இல்லாமல் பசியோடு இருக்கக்கூடிய சூழ்நிலை உள்ளதாகவும், தண்ணீர் தொட்டி சுத்தம் செய்து பல ஆண்டுகள் ஆகியுள்ளதாகவும், இது போன்ற பல குறைகள் குறித்து பலமுறை நிர்வாகத்திடம் புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இங்கு தங்கியுள்ள மாணவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
நான் ஏற்கெனவே, தி.மு.க. அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு விடுவிக்க வேண்டிய நிதியை கால தாமதமாக வழங்குவதால் அங்கு தங்கியுள்ள மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை விளக்கி உடனுக்குடன் நிதியை விடுவிக்க தி.மு.க. அரசை வலியுறுத்தியிருந்தேன்.
எனவே, தமிழ்நாடு முழுவதும் சிறப்புக் குழு அமைத்து, ஆதி திராவிட மாணவ, மாணவிகளின் விடுதிகளில் போர்க்கால அடிப்படையில் உணவு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை சீர் செய்ய தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 weeks 4 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 18 hours ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.3 weeks 4 days ago |
-
திருச்சியில் சேது எக்ஸ்பிரசின் 3 பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு
18 Sep 2024திருச்சி : திருச்சி ரயில் நிலையத்தில் சேது எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் தனியாக கழன்று ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஆந்திரா வெள்ள பாதிப்பு: சிறப்பு நிவாரணம் அறிவித்தார் சந்திரபாபு
18 Sep 2024விஜயவாடா, ஆந்திராவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண நிதி அறிவித்தார் முதல்வர் சந்திரபாபு நாயுடு.
-
சந்திரயான் - 4 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
18 Sep 2024புது டெல்லி, சந்திராயன் - 4 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் ரூ.
-
பழம்பெரும் பிரபல நடிகை சி.ஐ.டி. சகுந்தலா மரணம்
18 Sep 2024பெங்களூர் : பழம்பெரும் பிரபல நடிகை சி.ஐ.டி. சகுந்தலா மரணமடைந்தார்.
-
வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட மசோதா தாக்கல்: உயர்மட்ட குழுவின் பரிந்துரைகளை ஏற்று மத்திய அமைச்சரவை முடிவு
18 Sep 2024புதுடெல்லி, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு சமர்ப்பித்
-
திருப்பதி கோவிலில் டிசம்பர் மாத கட்டண சேவைகளுக்கு குலுக்கல் முறையில் டிக்கெட் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
18 Sep 2024திருப்பதி, திருப்பதி கோவிலில் டிசம்பர் மாதம் நடைபெறும் கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகளை குலுக்கல் முறையில் பெற விரும்பும் பக்தர்கள் இன்று 19-ம் தேதி முதல் 21-ம் த
-
காஞ்சிபுரத்தில் வரும் 28-ம் தேதி தி.மு.க. பவளவிழா பொதுக்கூட்டம் : கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு
18 Sep 2024சென்னை : காஞ்சிபுரத்தில் வரும் 28-ம் தேதி தி.மு.க. பவளவிழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
-
மது ஒழிப்பு மாநாடு: முறையாக அழைப்பு வந்தால் பங்கேற்பது குறித்து முடிவு: எடப்பாடி பழனிசாமி தகவல்
18 Sep 2024சென்னை : விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெறும் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டிற்கு முறையாக அழைப்பு விடுத்தால் அ.தி.மு.க.
-
லெபனானில் ஒரே சமயத்தில் வெடித்த பேஜர் கருவிகள்: 8 பேர் பலி, 2,750 பேர் படுகாயம்
18 Sep 2024பெய்ரூட், லெபனானில் நேற்று ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் தகவல் தொடர்புக்காக பயன்படுத்தி வரும் பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதற
-
ஜம்மு காஷ்மீர் முதற்கட்ட தேர்தல்: 24 சட்டசபை தொகுதிகளில் விறுவிறுபான ஓட்டுப்பதிவு: நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களித்தனர்
18 Sep 2024ஜம்மு, பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது.
-
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு: பட்டதாரிகள் அக்.16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: சி.பி.எஸ்.இ.
18 Sep 2024சென்னை : சிடெட் எனும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு பட்டதாரிகள் அக்டோபர் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
-
செய்தி மக்கள் தொடர்புத்துறையில் 2 வாகன ஓட்டுநர்கள். ஒரு வாகன சீராளருக்கு பணி நியமன ஆணைகள் : அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்
18 Sep 2024சென்னை : தமிழ் வளர்ச்சி (ம) செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டு வாகன ஓட்டுநர்கள்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-09-2024.
18 Sep 2024 -
ராகுல் காந்திக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள்: பா.ஜ.க. தலைவர்கள் மீது போலீசில் காங்கிரஸ் புகார்
18 Sep 2024புது டெல்லி, ராகுல் காந்தி குறித்து வெறுக்கத்தக்க வகையில் பேசியதாக பா.ஜ.க.
-
தங்கம் விலை சற்று குறைவு
18 Sep 2024சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில் நேற்றும் சற்று குறைந்து விற்பனையானது.
-
நிபா வைரசுக்கு வாலிபர் பலி: கேரளா அமைச்சர் வீணா ஜார்ஜ் விளக்கம்
18 Sep 2024திருவனந்தபுரம் : நிபா வைரசுக்கு வாலிபர் பலியானது குறித்து கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் விளக்கமளித்துள்ளார்.
-
சினிமா பட பாணியில் லாரியை மடக்கி பிடித்த நடிகை நவ்யா நாயர்
18 Sep 2024திருவனந்தபுரம், விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை துணிச்சலாக காரில் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்த நடிகை நவ்யா நாயரை போலீசார் வெகுவாக பாராட்டினர்.&nbs
-
27 நாடுகளில் பரவிய புதிய வகை கொரோனா: புதிய அலை உருவாகலாம் என எச்சரிக்கை
18 Sep 2024நியூயார்க், ஜெர்மனியில்தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் புதிய வகை கொரோனா திரிபு 27 நாடுகளில் பரவியுள்ளது.
-
இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்: சீமான் அஞ்சலி
18 Sep 2024சென்னை, இரட்டைமலை சீனிவாசனாருக்கு பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
-
வக்பு வாரிய உறுப்பினராக நவாஸ்கனி எம்.பி. தேர்வு : தமிழக அரசு அறிவிப்பு
18 Sep 2024சென்னை : தமிழ்நாடு வக்பு வாரியத்தின் நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவுக்கு ராமநாதபுரம் எம்.பி.
-
ராகுலின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் : முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Sep 2024சென்னை : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
-
அமெரிக்கா வரும் பிரதமர் மோடியை நேரில் சந்திப்பேன்: அதிபர் வேட்பாளர் டிரம்ப் விருப்பம்
18 Sep 2024மிச்சிகன், அமெரிக்கா வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் தேர்தல் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்
-
நடிகர் தனுஷ் விவகாரம்: பெப்சி நிர்வாகத்திற்கு நடிகர் சங்கம் கண்டனம்
18 Sep 2024சென்னை, நடிகர் தனுஷ் விவகாரம் தொடர்பாக பெப்சி நிர்வாகத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை கண்டித்து பந்த் : பஸ், ஆட்டோ ஓடாததால் மக்கள் அவதி
18 Sep 2024புதுச்சேரி : புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை கண்டித்து நேற்று நடந்த பந்த போராட்டத்தால் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை.
-
வரும் 1-ம்தேதி செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு
18 Sep 2024சென்னை, மோசடி வழக்கில், குற்றச்சாட்டுகள் பதிவுக்காக வரும் 1-ம் தேதி நேரில் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.