எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிகாகோ : ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்குக் குழந்தைகளோடு வாருங்கள் என்று அமெரிக்கவாழ் தமிழர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். சிகாகோ நகரில் சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்கவாழ் சந்திப்பு நிகழ்ச்சியில் பட்டு வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சி ஒன்றை பார்த்தேன். நம்முடைய தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் வேர்களைத் தேடி திட்டத்தின் மூலமாக, தமிழ்நாட்டைப் பார்க்க நம்முடைய பண்பாட்டை இறுகப் பற்றிக் கொள்ள நம்முடைய சொந்தங்களை அடையாளம் காண வந்த இளைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி அது.
அதிலும் ராதிகா என்ற மியான்மர் நாட்டைச் சேர்ந்த நம் சகோதரி, பல ஆண்டுகளாக விட்டுப்போன உறவை மீண்டும் கண்டுபிடித்து நா தழுதழுக்கப் பேசியது என் நெஞ்சிலேயே இருக்கிறது. தன்னுடைய வள்ளிப் பாட்டியைக் கண்டுபிடிக்க நினைத்த அவர், இப்போது தன் மாமா வீட்டோடு சேர்ந்திருக்கிறார்.
அங்கு கலாச்சாரம் எல்லாம் இருக்கிறது. ஆனால், சொந்தக்காரர்கள் குறைவு என சொல்லி அவர் கலங்கியது, உறவுகளைப் பிரிந்து ஏங்கும் அத்தனை அயலகத் தமிழர்களின் உணர்வின் பிரதிபலிப்பாக இருந்தது.
ஊரைத் தாண்டிய ஊரும் உலகமும் எப்படி இருக்கும் என்று அறியாக் காலத்திலேயே, யாதும் ஊரே யாவரும் கேளிர்என எல்லோரையும் சொந்தமாகக் கருதி இலக்கியம் படைத்த புகழுக்குச் சொந்தக்காரர்கள் நாம்.
அதனால்தான் இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என நான் தொடர்ந்து சொல்கிறேன். இன்றைக்கு பல நாடுகளில் பல்வேறு உயர் பொறுப்புகளில் இருக்கிறோம். அந்த உயர் பொறுப்புகளுக்குக் கடைக்கோடியில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களும் வரமுடியும் என்பதை சாத்தியப்படுத்தியது,
நம்முடைய தமிழகத்தில் இருக்கும் சமூக நீதியும் அதற்காக பாடுபட்ட தலைவர்களும்தான். தமிழ்நாட்டுத் தமிழர்களை மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாக நமது திராவிட மாடல் அரசு தமிழகத்தில் இருக்கிறது.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்காக அயலகத் தமிழர் நலவாரியம் உருவாக்கி இருக்கிறோம். ஜனவரி 12-ம் நாளை அயலகத் தமிழர் நாளாகக் கொண்டாடுகிறோம். அந்த வாரியத்தின் மூலமாக, தமிழால் இணைவோம், உலகெங்கும் தமிழ், தமிழ் வெல்லும் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டிருக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2,398 பேரை அயல்நாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் மீட்டு வந்தோம். மொத்தத்தில், தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும், நமக்கு என்று தாய்வீடாக தமிழ்நாடு இருக்கிறது என்ற உணர்வை, நம்பிக்கையை நம்முடைய தி.மு.க. ஆட்சி ஏற்படுத்தி வருகிறது.
இது அனைத்துக்கும் முத்தாய்ப்பான திட்டம்தான் வேர்களைத் தேடி என்று, அயலகத்தில் வாழும் நம்முடைய குழந்தைகளை தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் திட்டம். அதனால்தான், நான் எப்போதும் சொல்வேன். இது ஒரு கட்சியின் அரசல்ல, ஒரு இனத்தின் அரசு.
உலகத்தில் வேறு எந்த இனத்துக்கும் இல்லாத பெருமை நம் தமிழினத்துக்கு உண்டு.மொழிப்பற்றுக்கும் மொழி வெறிக்குமான வேறுபாட்டையும்-இனப்பற்றுக்கும் இனவெறிக்குமான வேறுபாட்டை அறிந்தவர்கள்
நாம்.இங்கு கூடியிருக்கும், உங்களில் சிலர் மட்டும்தான் இந்த நாட்டுக்கு விரும்பி வந்திருப்பீர்கள். மற்றவர்கள் சூழ்நிலை காரணமாகவும், பணிகளுக்காகவும் இங்கு வந்திருப்பீர்கள். உங்களிடம் நான் வைக்கும் ஒரே கோரிக்கை.
உங்களுக்குள் எந்தப் பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள். ஒரு தாய் மக்களாக வாழுங்கள். உங்கள் உயர்வுக்குக் காரணமான அறிவையும், உழைப்பையும் மட்டும் நம்பி, வாழ்க்கைப் பயணத்தைத் தொடருங்கள். உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது எல்லாம். ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்குக் குழந்தைகளோடு வாருங்கள்.
உங்களால் முடிந்த செயல்களை தமிழ்நாட்டுக்குச் செய்யுங்கள். நான் இங்கிருந்து தமிழ்நாட்டுக்கு திரும்பிய பிறகும், உங்களின் இந்த ஆரவாரமும் மகிழ்ச்சியான முகங்களும்தான் எப்போதும் என் ஞாபகத்துக்கு வரும் என தெரிவித்தார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், '
இமைநேரத்தில் கண்டங்களைக் கடந்துவிட்ட உணர்வு. சிகாகோ நகரில் வெள்ளமெனத் தமிழர் திரண்ட காட்சியில், தமிழினம் மேலெழுந்து வந்த வரலாற்றைக் கண்டேன். கற்ற கல்வியால் ஒப்பற்ற உழைப்பால் பெற்ற பெருமைகளைத் தாங்கி, அமெரிக்க மண்ணில் தமிழர் தலைநிமிர்ந்து வாழ்தல் கண்டு தமிழகத்தின் முதல்வராக தி.மு.க. தலைவராக அளவில்லா மகிழ்ச்சியடைந்தேன்.
புலம்பெயர்ந்து புலர்ந்தெழுந்த தமிழர்களின் நல்வாழ்வு நாளும் சிறக்க என் வாழ்த்துகளைச் சொல்லி அமெரிக்கப் பயணத்தின் குறிப்புகளில் பொறிக்க அவர்களது மகிழ்ச்சியை என் நெஞ்சிலேந்தினேன் என பதிவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 weeks 4 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 18 hours ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.3 weeks 4 days ago |
-
திருச்சியில் சேது எக்ஸ்பிரசின் 3 பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு
18 Sep 2024திருச்சி : திருச்சி ரயில் நிலையத்தில் சேது எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் தனியாக கழன்று ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஆந்திரா வெள்ள பாதிப்பு: சிறப்பு நிவாரணம் அறிவித்தார் சந்திரபாபு
18 Sep 2024விஜயவாடா, ஆந்திராவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண நிதி அறிவித்தார் முதல்வர் சந்திரபாபு நாயுடு.
-
சந்திரயான் - 4 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
18 Sep 2024புது டெல்லி, சந்திராயன் - 4 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் ரூ.
-
பழம்பெரும் பிரபல நடிகை சி.ஐ.டி. சகுந்தலா மரணம்
18 Sep 2024பெங்களூர் : பழம்பெரும் பிரபல நடிகை சி.ஐ.டி. சகுந்தலா மரணமடைந்தார்.
-
வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட மசோதா தாக்கல்: உயர்மட்ட குழுவின் பரிந்துரைகளை ஏற்று மத்திய அமைச்சரவை முடிவு
18 Sep 2024புதுடெல்லி, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு சமர்ப்பித்
-
திருப்பதி கோவிலில் டிசம்பர் மாத கட்டண சேவைகளுக்கு குலுக்கல் முறையில் டிக்கெட் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
18 Sep 2024திருப்பதி, திருப்பதி கோவிலில் டிசம்பர் மாதம் நடைபெறும் கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகளை குலுக்கல் முறையில் பெற விரும்பும் பக்தர்கள் இன்று 19-ம் தேதி முதல் 21-ம் த
-
மது ஒழிப்பு மாநாடு: முறையாக அழைப்பு வந்தால் பங்கேற்பது குறித்து முடிவு: எடப்பாடி பழனிசாமி தகவல்
18 Sep 2024சென்னை : விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெறும் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டிற்கு முறையாக அழைப்பு விடுத்தால் அ.தி.மு.க.
-
காஞ்சிபுரத்தில் வரும் 28-ம் தேதி தி.மு.க. பவளவிழா பொதுக்கூட்டம் : கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு
18 Sep 2024சென்னை : காஞ்சிபுரத்தில் வரும் 28-ம் தேதி தி.மு.க. பவளவிழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
-
லெபனானில் ஒரே சமயத்தில் வெடித்த பேஜர் கருவிகள்: 8 பேர் பலி, 2,750 பேர் படுகாயம்
18 Sep 2024பெய்ரூட், லெபனானில் நேற்று ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் தகவல் தொடர்புக்காக பயன்படுத்தி வரும் பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதற
-
ஜம்மு காஷ்மீர் முதற்கட்ட தேர்தல்: 24 சட்டசபை தொகுதிகளில் விறுவிறுபான ஓட்டுப்பதிவு: நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களித்தனர்
18 Sep 2024ஜம்மு, பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது.
-
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு: பட்டதாரிகள் அக்.16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: சி.பி.எஸ்.இ.
18 Sep 2024சென்னை : சிடெட் எனும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு பட்டதாரிகள் அக்டோபர் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
-
செய்தி மக்கள் தொடர்புத்துறையில் 2 வாகன ஓட்டுநர்கள். ஒரு வாகன சீராளருக்கு பணி நியமன ஆணைகள் : அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்
18 Sep 2024சென்னை : தமிழ் வளர்ச்சி (ம) செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டு வாகன ஓட்டுநர்கள்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-09-2024.
18 Sep 2024 -
ராகுல் காந்திக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள்: பா.ஜ.க. தலைவர்கள் மீது போலீசில் காங்கிரஸ் புகார்
18 Sep 2024புது டெல்லி, ராகுல் காந்தி குறித்து வெறுக்கத்தக்க வகையில் பேசியதாக பா.ஜ.க.
-
தங்கம் விலை சற்று குறைவு
18 Sep 2024சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில் நேற்றும் சற்று குறைந்து விற்பனையானது.
-
நிபா வைரசுக்கு வாலிபர் பலி: கேரளா அமைச்சர் வீணா ஜார்ஜ் விளக்கம்
18 Sep 2024திருவனந்தபுரம் : நிபா வைரசுக்கு வாலிபர் பலியானது குறித்து கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் விளக்கமளித்துள்ளார்.
-
சினிமா பட பாணியில் லாரியை மடக்கி பிடித்த நடிகை நவ்யா நாயர்
18 Sep 2024திருவனந்தபுரம், விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை துணிச்சலாக காரில் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்த நடிகை நவ்யா நாயரை போலீசார் வெகுவாக பாராட்டினர்.&nbs
-
27 நாடுகளில் பரவிய புதிய வகை கொரோனா: புதிய அலை உருவாகலாம் என எச்சரிக்கை
18 Sep 2024நியூயார்க், ஜெர்மனியில்தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் புதிய வகை கொரோனா திரிபு 27 நாடுகளில் பரவியுள்ளது.
-
இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்: சீமான் அஞ்சலி
18 Sep 2024சென்னை, இரட்டைமலை சீனிவாசனாருக்கு பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
-
வக்பு வாரிய உறுப்பினராக நவாஸ்கனி எம்.பி. தேர்வு : தமிழக அரசு அறிவிப்பு
18 Sep 2024சென்னை : தமிழ்நாடு வக்பு வாரியத்தின் நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவுக்கு ராமநாதபுரம் எம்.பி.
-
ராகுலின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் : முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Sep 2024சென்னை : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
-
அமெரிக்கா வரும் பிரதமர் மோடியை நேரில் சந்திப்பேன்: அதிபர் வேட்பாளர் டிரம்ப் விருப்பம்
18 Sep 2024மிச்சிகன், அமெரிக்கா வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் தேர்தல் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்
-
சேப்பாக்கத்தில் முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா-வங்கதேசம் இன்று பலப்பரீட்சை
18 Sep 2024சென்னை : சென்னை, சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா-வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
-
நடிகர் தனுஷ் விவகாரம்: பெப்சி நிர்வாகத்திற்கு நடிகர் சங்கம் கண்டனம்
18 Sep 2024சென்னை, நடிகர் தனுஷ் விவகாரம் தொடர்பாக பெப்சி நிர்வாகத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை கண்டித்து பந்த் : பஸ், ஆட்டோ ஓடாததால் மக்கள் அவதி
18 Sep 2024புதுச்சேரி : புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை கண்டித்து நேற்று நடந்த பந்த போராட்டத்தால் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை.