எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருபவர் சர்பராஸ் கான். இவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடினார். தற்போது கே.எல்.ராகுல் அணிக்கு திரும்பியதால் அவருக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை. இவரது சகோதரர் முஷீர் கான். 19 வயதேயான இவர் முதல் தர போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். சமீபத்தில் முடிவடைந்த துலீப் டிராபியில இந்தியா "சி" அணிக்காக விளையாடி 181 ரன்கள் விளாசினார். சுப்மன் கில், மயங்க் அகர்வால், ஆவேஷ் கான், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், கலீல் அகமது ஆகியோர் இடம் பிடித்திருந்த இந்தியா "ஏ" அணிக்கெதிராக சதம் விளாசினார்.
இரானி கோப்பையில் மும்பை - ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோத இருக்கின்றன. இந்த தொடரில் மும்பை அணிக்காக முஷீர் கான் விளையாட இருக்கிறார். இவர் இரானி கோப்பையில் விளையாடுவதற்கான உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து லக்னோ செல்லும்போது கார் விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் அவரது கழுத்துப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இரானி கோப்பை தொடரில் அவர் விளையாட முடியாது. மேலும், அக்டோபர் 11-ந்தேதி தொடங்கும் ரஞ்சி கோப்பையின் தொடக்க போட்டிகளிலும் விளையாட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்ட காயம் குணமடைய சுமார் 3 மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது. இரானி கோப்பை போட்டி அக்டோபர் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
__________________________________________________________________________________________
போட்டி அட்டவணை வெளியீடு
மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. அக்டோபரில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி அக்டோபர் 13 டம்புல்லாவில் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 20-26 ஆம் தேதி இடைவெளியில் ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.
இலங்கை அணி கடந்த சில மாதங்களாக சிறப்பாக செயல்பட்டு வருவது அந்த அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வெற்றி, இங்கிலாந்துக்கு எதிராக ஓவலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெற்றி, நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடி வருவது போன்ற விஷயங்கள் இலங்கை அணியின் நம்பிக்கையை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த சூழலில் மேற்கிந்தியத் தீவுகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. டி20 தொடர் விவரம் வருமாறு., முதல் டி20 - டம்புல்லா, அக்டோபர் 13, 2-வது டி20 - டம்புல்லா, அக்டோபர் 15, 3-வது டி20 - டம்புல்லா அக்டோபர் 17, ஒருநாள் தொடர் விவரம் வருமாறு., முதல் ஒருநாள் - கண்டி - அக்டோபர் 20, 2-வது ஒருநாள் - கண்டி - அக்டோபர் 23,3-வது ஒருநாள் - கண்டி - அக்டோபர் 26 .
__________________________________________________________________________________________
நியூசி., 88 ரன்களில் ஆல் அவுட்
இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 'டாஸ்' ஜெயித்த இலங்கை கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 306 ரன்கள் அடித்திருந்தது. இதனையடுத்து 2-வது நாள் ஆட்டம்நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 602 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 2-வது நாள் முடிவில் 14 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 22 ரன்கள் எடுத்திருந்தது. வில்லியம்சன் 6 ரன்களுடனும், அஜாஸ் படேல் ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்று 3வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி இலங்கையின் சுழலில் சிக்கியது. அதிலும் மிகச்சிறப்பாக பந்துவீசிய பிரபாத் ஜெயசூர்யாவிடம் நியூசிலாந்து வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 39.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 88 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 days 12 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 week 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 weeks 10 hours ago |
-
நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்ய பெங்களூரு கோர்ட்டு உத்தரவு
28 Sep 2024பெங்களூரு, தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்பட்ட வழக்கில் நிர்மலா சீதாராமன் உள்பட சம்பந்தப்பட்ட பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்ய பெங்க
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழகத்தில் வரும் 4-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு
28 Sep 2024சென்னை, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வரும் 04-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் தேர்வு : 650 பேர் எழுதினர்
28 Sep 2024சென்னை : சென்னையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்.
-
பெரிய நிறுவனங்களுக்கு தமிழகமே முதல் முகவரி : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
28 Sep 2024ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் ரூ.9 ஆயிரம் கோடியில் 470 ஏக்கரில் அமையவுள்ள டாடா, ஜாக்குவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு முதல்வர் மு.க.ஸ்டா
-
கோவை பாப்பம்மாள் மறைவு: பிரதமர் மோடி புகழஞ்சலி
28 Sep 2024புதுடெல்லி : உடல்நலக்குறைவால் மறைந்த பத்மஸ்ரீ விருது பெற்றவரும், இயற்கை விவசாயியுமான கோவையைச் சேர்ந்த மூதாட்டி பாப்பம்மாளுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
தமிழகத்தில் காலாண்டு விடுமுறை தொடக்கம்
28 Sep 2024சென்னை : தமிழகத்தில் காலாண்டு விடுமுறை நேற்று முதல் தொடங்கியது. விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் அக். 7-ம் தேதி திறக்கப்படவுள்ளன.
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 40-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
28 Sep 2024விருதுநகர் : சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நேற்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்த 40-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
-
த.வெ.க. மாநாட்டுக்கு அனுமதி இலவசம்: பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு
28 Sep 2024சென்னை : தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு பாஸ் எதுவும் கிடையாது. அனுமதி இலவசம் என்று அறிவித்துள்ள கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த், விக்கிரவாண்டி த.வெ.க.
-
பீகாருக்கு கனமழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை : மாவட்டங்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தல்
28 Sep 2024பாட்னா : இந்திய வானிலை ஆய்வு மையம் பீகாருக்கு கனமழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் உஷார் நிலையில் இருக்கும்படி அறி
-
உண்மையான தலைவர் யார்? மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி புது விளக்கம்
28 Sep 2024வாஷிங்டன், இன்றைய காலகட்டத்தில் உண்மையான தலைவர் யார் என்பது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ.,) புது விளக்கம் அளித்துள்ளார்.
-
மோசமான விஷயங்கள் மட்டுமே காட்டுகிறது: அதிபரானால் கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடர்வேன்: டிரம்ப்
28 Sep 2024வாஷிங்டன், கூகுள் தேடுதலில், தன்னை பற்றி மோசமான விஷயங்கள் மட்டுமே காட்டுவதாகவும், அதிபராக பதவியேற்றால் அந்நிறுவனம் மீது வழக்கு தொடர்வேன் என்றும் குடியரசு கட்சி சார்பில்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-09-2024.
28 Sep 2024 -
ராணிப்பேட்டையில் ரூ. 9 ஆயிரம் கோடி முதலீட்டில் தனியார் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
28 Sep 2024ராணிப்பேட்டை : தமிழகத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்ட
-
நாமக்கல் அருகே பிடிபட்ட வடமாநில கொள்ளையர்கள் வாக்குமூலத்தால் பரபரப்பு
28 Sep 2024நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் பிடிட்ட வடமாநில கொள்ளையர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
பயணி உணவில் கரப்பான் பூச்சி: மன்னிப்பு கோரியது ஏர் இந்தியா
28 Sep 2024மும்பை : டெல்லியில் இருந்து நியூயார்க் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி இருந்தது குறித்து அவர் புகார் தெரிவித்ததற்கு விம
-
திருப்பதி லட்டு விவகாரம்: பதில் கூற நடிகர் ரஜினி மறுப்பு
28 Sep 2024சென்னை : திருப்பதி லட்டு விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு பதில் கூறுவதை நடிகர் ரஜினிகாந்த் தவிர்த்துவிட்டார்.
-
நேபாளத்தில் கனமழை, வெள்ளம் - 39 பேர் பலி
28 Sep 2024காத்மண்டு : நேபாளத்தில் இடைவிடாத மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஸ்காட்லாந்து சிகரத்தில் இந்திய தேசியக்கொடியுடன் அண்ணாமலை
28 Sep 2024ஓஸ்லோ : ஸ்காட்லாந்தில் பென் நெவிஸ் சிகரம் மீதேறி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சாதனை படைத்துள்ளார். இதனை பிரதமர் மோடிக்கு அர்ப்பணிப்பதாக அவர் கூறி உள்ளார்.
-
வந்தே பாரத் ரயில்களை வாங்க ஆர்வம் காட்டும் வெளிநாடுகள்
28 Sep 2024புதுடெல்லி : வந்தே பாரத் ரயில்களை வாங்குவதில் கனடா, சிலி, மலேசியா ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
-
ஓசூரில் டாடா மின்னணு உதிரிபாக தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
28 Sep 2024கிருஷ்ணகிரி, ஓசூரில் டாடா மின்னணு உதிரிபாக தொழிற்சாலையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி தீயை அணைத்தனர்.
-
விரைவில் இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளேன்: மாலத்தீவு அதிபர் முய்சு தகவல்
28 Sep 2024மாலே, இந்தியாவுடன் மாலத்தீவு மிகவும் வலுவான இரு தரப்பு உறவை கொண்டுள்ளது என்றும், விரைவில் இந்தியாவுக்கு செல்ல திட்டுமிட்டுள்ளேன் என்றும் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு
-
புனே மெட்ரோ ரெயில் சேவை: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
28 Sep 2024புனே, புனேயின் சிவாஜிநகர் மாவட்ட கோர்ட்டு- ஸ்வர்கேட் இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
-
நாட்டின் சிறந்த சுற்றுலா கிராமமாக கீழடி தேர்வு
28 Sep 2024சிவகங்கை : நாட்டில் பாரம்பரிய பிரிவின் கீழ் சிறந்த சுற்றுலா கிராமமாக தமிழகத்தைச் சேர்ந்த கீழடி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
-
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 வீரர்கள் காயம்
28 Sep 2024ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நேற்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் 4 பேரும், ஒரு போக்குவரத்துக் காவல
-
பாகிஸ்தான் மூன்றாக பிரியும், தண்ணீருக்கும் கையேந்தும் : காஷ்மீர் பிரச்சாரத்தில் உ.பி. முதல்வர் யோகி பேச்சு
28 Sep 2024லக்னோ : பாகிஸ்தான் ஒவ்வொரு சொட்டு தண்ணிருக்கும் கையேந்தும் நிலை ஏற்படும். மூன்றாக உடையும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.