முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய நிதியை செலவிட்டது குறித்து கணக்கு காட்டுங்கள் : முதல்வர் மம்தாவுக்கு கவர்னர் கடிதம்

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2024      இந்தியா
Ananda-Pose 2024-09-09

Source: provided

கொல்கத்தா : மத்திய அரசின் நிதியை செலவிட்டது தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க மம்தா பானர்ஜிக்கு மேற்கு வங்காள கவர்னர் கடிதம் எழுதியுள்ளார்.

மேற்கு வங்காள மாநிலத்திற்கு 2023-24ம் நிதியாண்டில் பல்வேறு திட்டங்களின் கீழ் மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1.17 கோடி நிதியை செலவு செய்தது தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு அந்த மாநிலத்தின் கவர்னர் சி.வி.ஆனந்தா போஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மத்திய அரசின் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும், மேற்கு வங்காள மாநிலம் தற்போது பல்வேறு நிதி அபாயங்கள் மற்றும் பொது நிதி மேலாண்மை சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் கடந்த 2018-19ல் சுமார் ரூ.33,500 கோடியாக இருந்த நிதிப்பற்றாக்குறை, 2022-23ல் ரூ.49,000 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், அதே சமயம் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி(ஜி.எஸ்.டி.பி.)-கடன் விகிதம் 35.69 சதவீதத்தில் இருந்து 37 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் சி.வி.ஆனந்தா போஸ் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2021-22 முதல் 2022-23ம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் மேற்கு வங்காள அரசு கடன்களை திருப்பி செலுத்துவதற்காக பொதுக்கடன் நிதியின் பெரும்பகுதியை பயன்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். நிதி ஆயோக் பரிந்துரைகளால் மேற்கு வங்காள அரசு பெரிதும் பயனடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், 2021-22 முதல் 2024-25 வரை வருவாய் பற்றாக்குறை மானியமாக மேற்கு வங்காளத்திற்கு ரூ.40,115 கோடி நிதியை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

2023-24ம் ஆண்டில், மேற்கு வங்கத்தின் மொத்த வருவாயான ரூ.2.13 லட்சம் கோடியில், மத்திய நிதி பகிர்மானம் மட்டும் ரூ.1.17 லட்சம் கோடியாக இருந்தது எனவும், இது மாநிலத்தின் மொத்த வருவாயில் 55 சதவீதம் என்றும் சி.வி.ஆனந்தா போஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மேற்கு வங்காள அரசு தொடர்பான 6 சி.ஏ.ஜி. அறிக்கைகள் இன்னும் சட்டசபையில் தாக்கல் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ள அவர், அரசியலமைப்பு சட்டம் 151-வது பிரிவின் கீழ், ஒரு மாநிலத்தின் கணக்குகள் தொடர்பான சி.ஏ.ஜி.யின் தணிக்கை அறிக்கைகளை கவர்னரிடம் சமர்ப்பிக்கலாம் என்றும், கவர்னர் அதனை சட்டசபையில் தாக்கல் செய்யலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், மாநில அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை மம்தா பானர்ஜி வெளியிட வேண்டும் எனவும் கவர்னர் ஆனந்தா போஸ் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து