எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலினுள் இருக்கிறது. அது நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இன்னும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கவில்லை. கரையை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. இன்று காலை கரைக்கு அருகில் வருகிறபோது, மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாலும், ஏற்கெனவே பெய்த மழை பதிவுகள் ஆகியவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான் ரெட் அலர்ட் கொடுக்கப்படுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் நேற்று (அக்.16) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது., “தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 5 இடங்களில் அதி கனமழையும், 48 இடங்களில் மிக கனமழையும், 21 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 30 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழையைப் பொருத்த வரையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அக்.1 முதல் நேற்று (அக்.16) வரையிலான காலக்கட்டத்தில், 138 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த காலக்கட்டத்தின் இயல்பு அளவு 71 மி.மீட்டர். இது இயல்பைவிட 94 சதவீதம் அதிகமாகும். தற்போது தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 280 கி.மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 320 கி.மீட்டர் தொலைவிலும், ஆந்திரப்பிரதேசம், நெல்லூருக்கு தென்கிழக்கே சுமார் 370 கி.மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 15 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (அக்.17) அதிகாலை வடதமிழகம் - தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுவைக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் கரையைக் கடக்கக்கூடும். இதன் காரணமாக அடுத்து வருகிற 4 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்து வருகிற 24 மணி நேரத்துக்கு திருவள்ளூர்,காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
இன்று (அக்.17ம் தேதி) திருவள்ளூர்,காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, புதுவை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வடதமிழக கடலோரப் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், தென் மேற்கு வங்க கடல், மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 60 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், வரும் அக்.18ம் தேதி வரை மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலினுள் இருக்கிறது. அது நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருப்பதால், அனைத்து இடங்களிலும் 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்யும் என்று அர்த்தமில்லை. இன்னும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கவில்லை. கரையை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. காலை மற்றும் பகல் பொழுதுகளுக்கும் வானிலையில் வேறுபாடு இருக்கும். இன்று காலை கரைக்கு அருகில் வருகிற போது, மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாலும், ஏற்கெனவே பெய்து வரும் மழை பதிவுகள் ஆகியவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழைக்கான வாய்ப்பு இருப்பதால், ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், ரெட் அலர்ட் என்பது 2 மணி முதல் 4 மணிக்கு ஆனது இல்லை. அதனால்தான், வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரம், அடுத்து வருகிற 48 மணி நேரம் என்ற வகையில் கூறுகிறது. அதாவது காலை 8.30 மணி முதல் அடுத்த நாள் காலை 8.30 மணிக்கானது, கால அளவாக அதை புரிந்து கொள்ள வேண்டும். காரணம், இந்த வானிலை நிகழ்வு மொத்தமாக கலைந்துவிடவில்லை. இன்னும் கடலில் இருப்பதால், கரையை நோக்கி வரும்போது மழைக்கு வாய்ப்பு உள்ளது, எனவேதான் ரெட் அலர்ட் கொடுக்கப்படுகிறது. எச்சரிக்கையாக இருப்பதற்காகவே ரெட் அலர்ட் கொடுக்கப்படுகிறது” என்று அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 12 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 weeks 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 2 weeks ago |
-
ஈரானின் அணு நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது : அமெரிக்கா தகவல்
16 Oct 2024வாஷிங்டன் : ஈரானின் அணு நிலையம் தாக்குதல் மற்றும் கச்சா எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று இஸ்ரேல் உறுதியளித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
-
தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை வரும் 21-ம் தேதி ரேசனில் வழங்கப்படும் : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல்
16 Oct 2024புதுச்சேரி : தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை வரும் 21-ம் தேதி ரேசனில் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
-
பயங்கரவாதத்திற்கு எதிராக போராட பேச்சுவார்த்தையில் நேர்மை முக்கியம் : எஸ்.சி.ஓ. மாநாட்டில் ஜெய்சங்கர் பேச்சு
16 Oct 2024இஸ்லாமாபாத் : பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவது எனும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ - SCO) முதன்மையான குறிக்கோள்களை அடைய நேர்மையான
-
வெடிகுண்டு மிரட்டல்: கனடாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: சிகாகோ அழைத்து செல்லப்பட்ட பயணிகள்
16 Oct 2024புதுடெல்லி : டெல்லியில் இருந்து சிகாகோ நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு உள்ளது என மிரட்டல் விடப்பட்ட நிலையில், அந்த விமானம் கனடாவுக்கு திருப்பி விடப்பட்ட
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18,000 கனஅடியாக அதிகரிப்பு : அருவிகளில் குளிக்க 4-வது நாளாக தடை
16 Oct 2024ஒகேனக்கல் : கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
-
தெருக்களில் எங்கும் மழை நீர் தேங்காமல் வடிந்திருப்பதே வெள்ளை அறிக்கைதான் : துணை முதல்வர் உதயநிதி பேட்டி
16 Oct 2024சென்னை : மழைநீர் தடுப்பு பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரியிருந்தது தொடர்பாக பதிலளித்த துணை முதல்வர்
-
தீபாவளிக்கு முன்பாக டெல்லி மேயர் தேர்தல்?
16 Oct 2024புதுடெல்லி : டெல்லி மேயர் தேர்தல் தீபாவளிபண்டிகைக்கு முன்பாக நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
காசாவில் மனிதாபிமான உதவிகள்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
16 Oct 2024வாஷிங்டன் : காசாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்காவிட்டால் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டு வரும் ராணுவ ஒத்துழைப்பு ரத்து செய்யப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
-
சென்னையில் எஞ்சியுள்ள 30 சதவீத மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடித்து விடுவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
16 Oct 2024சென்னை : சென்னையில் எஞ்சியுள்ள 30 சதவீத மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடித்து விடுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
-
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
16 Oct 2024சென்னை : தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
2047-ல் பயங்கரவாதம் இல்லாத நாடாக இந்தியா இருக்கும்: அமித்ஷா
16 Oct 2024புதுடெல்லி : பிரதமர் மோடியின் இலக்கான விக்சித் பாரத் (வளர்ச்சியடைந்த பாரதம்) மக்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கு பாதுகாப்பு வழங்க கூடியதாகவும், போதை மற்றும் பயங்கரவாதம்
-
காஷ்மீர் புதிய முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பு : ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு
16 Oct 2024ஸ்ரீநகர் : ஜம்மு, காஷ்மீர் புதிய முதல்வராக உமர் அப்துல்லா நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
-
அரியானா மாநில முதல்வராக சைனி இன்று பதவியேற்கிறார் : பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்பு
16 Oct 2024பஞ்ச்குலா : சட்டமன்ற கட்சி தலைவராக நயாப் சிங் சைனி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து அரியானா மாநில முதல்வராக அவர் இன்று பதவியேற்று கொள்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-10-2024.
16 Oct 2024 -
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா : மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் கவர்னர் ரவி
16 Oct 2024சேலம் : சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
-
சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரயில்கள் இயங்கும்
16 Oct 2024சென்னை : சென்னை மெட்ரோ ரெயில்கள் இன்று முதல் வழக்கம்போல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெய்ரூட் தெற்கு புறநகர் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்
16 Oct 2024பெய்ரூட் : லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கில் உள்ள புறநகர் பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
-
ரூ. 33 ஆயிரம் கோடியில் அமெரிக்காவிடமிருந்து 31 நவீன டிரோன்களை வாங்க இந்தியா ஒப்பந்தம்
16 Oct 2024புதுடெல்லி : ரூ. 33 ஆயிரம் கோடி செலவில் அமெரிக்காவிடம் இருந்து 31 பிரிடேட்டர் ரக டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
-
உயிர் கொண்டு அசையும் புகைப்படங்களை செய்தி ஊடகங்களில் வெளியிடக்கூடாது : தலிபான் அரசு அதிரடி உத்தரவு
16 Oct 2024காபூல் : உயிர் கொண்டு அசையும் எந்த ஒன்றின் புகைப்படங்களையும் செய்தி ஊடகங்களில் வெளியிடக் கூடாது என்று தலிபான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
இணைந்து பயணிப்போம்: வெற்றி காண்போம்: உமர் அப்துல்லாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
16 Oct 2024சென்னை : ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்
-
சென்னையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
16 Oct 2024சென்னை : சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி சமுதாய நலக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமில் துணை மு
-
சித்தராமையா நில வழக்கு: மூடா தலைவர் திடீர் பதவி விலகல்
16 Oct 2024பெங்களூர் : கர்நாடக முதல்வர் சித்தராமையா மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் நிலம் தொடர்பான முறைகேடு வழக்கை எதிர்கொண்டு வரும் நிலையில் மூடா தலைவராக இருந்த மாரி கவ
-
தாழ்வான பகுதிகளில் அத்தியாவசிய பொருள் வழங்க டிரோன்கள் தயார் : அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
16 Oct 2024சென்னை : சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில் மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு
-
நைஜீரியாவில் பயங்கரம்: பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 94 பேர் உடல் கருகி பலி
16 Oct 2024அபுஜா : நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 94 பேர் உடல் கருகி பலியாயினர்.
-
காஷ்மீர் முன்னேற்றத்திற்காக உமர் அப்துல்லாவுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும்: பிரதமர்
16 Oct 2024புதுடெல்லி : ஜம்மு-காஷ்மீர் முன்னேற்றத்திற்காக உமர் அப்துல்லா மற்றும் அவரது குழுவினருடனும் மத்திய அரசு இணைந்து செயல்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.