எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
காரைக்குடி : மாநிலப் பட்டியலுக்கு கல்வியை மீட்கும் வரை சட்டப் பேராட்டம் தொடரும் என காரைக்குடியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் தனது சொந்த நிதி ரூ.12 கோடியில் கட்டிய லட்சுமி வளர்தமிழ் நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.21) திறந்து வைத்தார். தொடர்ந்து நிர்வாக கட்டிடத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். பின்னர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கலையரங்கில் நடைப்பெற்ற விழாவுக்கு மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.
ப.சிதம்பரம், கவிஞர் வைரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைவேந்தர் ரவி வரவேற்றார்.விழாவில் கலையரங்கு கருந்தரங்க கூடத்துக்கு வீறுகவியரசர் முடியரசனார் அரங்கு என்று முதல்வர் பெயர் சூட்டினார். தொடந்து அவர் வெளியிட்ட கருணாநிதி நூற்றாண்டு விழா தேசிய கருத்தரங்கு ஆய்வு கட்டுரைகள் தொகுப்பு நூலை துணைவேந்தர் பெற்றுக் கொண்டார்.கவிஞர் அண்ணாதாசன் எழுதிய ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிள்ளைத்தமிழ்’ என்ற நூலை ப.சிதம்பரம் வெளியிட துணைவேந்தர் பெற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது:- காரைக்குடி வள்ளல் அழகப்பர் கல்வித் தொண்டு மற்றும் தமிழ் தொண்டை சேர்த்து ஆற்றியததால் தான், பலரும் பட்டங்கள் பெற்று, உலகம் முழுவதும் பரவியுள்ளனர். தமிழர்களின் ஈகைக்கு அடையாளமாக வாழ்ந்தவர் தான் அழகப்பர். வள்ளுவர் நெறிகளே வாழ்வியல் நெறியாக மாறும் என்று கூறி வருகிறோம்.
அறிவு தான் நம்மை காக்கும் கருவி என்று வள்ளுவர் சென்னதுக்கு அடையாளமாக ப.சிதம்பம் தனது தாயார் பெயரில் நூலகத்தை கட்டியுள்ளார். அதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ப.சிதம்பரமே நடமாடும் நூலகம். திராவிட மாடல் ஆட்சியில் அறிமுகப்படுத்தும் ஒவ்வாரு திட்டம் குறித்தும் ப.சிதம்பரம் என்ன சொல்வார் என்று எதிர்பார்பேன். ஏனென்றால் அவரது பார்வையும், பாராட்டும் எனக்கு உற்சாக மூட்டும்.
திராவிட மாடல் ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். உயர்க்கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் 32 கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளை தொடங்கியுள்ளோம். நான் முதல்வன் திட்டத்தில் 22.56 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி தந்து பெருநிறுவனங்களில் சேர வைத்துள்ளோம்.
புதுமை பெண் திட்டத்தால் கல்லூரியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழ் புதல்வன் திட்டத்தாலும் உயர்க்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ரூ.1,000 கோடியில் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டமும், ரூ.150 கோடியில் உயர்கல்வி நிறுவனங்களில் டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைந்த கற்றல் மேம்பாடு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்களால் தமிழகத்தில் உயர்கல்வித் தரம், அடிப்படை கட்டமைப்பு மேம்பட்டு வருகின்றன.
இந்தியாவில் அதிக அரசு பல்கலைக்கழங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. 500-க்கும் மேற்பட்ட தரமான பொறியியல் கல்லூரிகள், அதிக மருத்துவக் கல்லூரிகள், புகழ் பெற்ற 100 உயர்கல்வி நிறுவனங்களில் 31 உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. உயர்கல்வி மாணவர்கள் சேர்க்கையில் தேசிய சராசரியை விட 2 மடங்காக உயர்ந்துள்ளது. 49 சதவீதம் பெற்று இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது. உயர்கல்வியில் சிறப்பாக விளங்க பல்கலைக்கழக நிர்வாகம் மாநில அரசு முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். வேந்தர் பதவியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இருக்க வேண்டும் என்று சொல்கிறோம்.
உயர் கல்வி மாணவர்களுக்கு திட்டங்கள் வகுத்து, செலவு செய்வது மாநில அரசு. பேராசிரியர்களுக்கு ஊதியம், கட்டமைப்பு வசதிகளை செய்வது மாநில அரசு. ஆனால் வேந்தர் பதவியை மட்டும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒருவருக்கா என்பது தான் எனது கேள்வி. அதனால் தான் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம். மாநிலப் பட்டியலுக்கு கல்வியை மீட்கும் வரை சட்டப் பேராட்டம் தொடரும்,” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். இந்நிகழ்வில், அமைச்சர்கள் கே.ஆர். பெரியகருப்பன், ரெகுபதி, தங்கம்தென்னரசு, கோவி.செழியன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், சுவாமிநாதன், மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 4 weeks ago |
-
இந்தியாவை விட்டு வெளியேற கெடு: வாகாவில் குவியும் பாகிஸ்தானியர்கள்
26 Apr 2025அட்டாரி : ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலையடுத்து இந்தியாவை விட்டு வெளியேற கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஏரா
-
அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்: காஷ்மீர் பிரச்சினை குறித்து அமெரிக்க அதிபர் கருத்து
26 Apr 2025வாஷிங்டன் : காஷ்மீர் பிரச்சினையை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
-
கர்நாடகாவுக்கு சுற்றுலா சென்றபோது விபரீதம்: 2 தமிழ்நாடு மருத்துவக்கல்லூரி மாணவிகள் கடலில் மூழ்கி பலி
26 Apr 2025பெங்களூரு : தமிழக மருததுவக்கல்லூரி மாணவிகள் 2 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சேலம் பட்டாசு வெடி விபத்து; எடப்பாடி பழனிசாமி இரங்கல்
26 Apr 2025சேலம் : சேலம் பட்டாசு வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ள நிலையில் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவ
-
பஹல்காம் பாதுகாப்பு குறித்து கேள்வி: எதிர்க்கட்சிகள் மத்திய அரசு விளக்கம்
26 Apr 2025புதுடெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பாதுகாப்புப் படை வீரர்கள் பணியமர்த்தப்படாதது ஏன் என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
ஐ.பி.எல். தொடரில் எந்த அணியாலும் 300 ரன்கள் குவிக்க முடியும்: ரிங்கு சிங் இம்பாக்ட் பிளேயர் விதி காரணமாக அதிக ரன்கள் எடுக்க முடிகிறது: ரிங்கு சிங்
26 Apr 2025கொல்கத்தா : இம்பாக்ட் பிளேயர் விதி காரணமாக அதிக ரன்கள் எடுக்க முடிகிறது என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
-
கைலாஷ் மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகளுக்கு பிறகு தொடக்கம்
26 Apr 2025புதுடெல்லி : கைலாஷ் மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்க உள்ளது.
-
சி.எஸ்.கே. அணியில் ஏகப்பட்ட ஓட்டைகள்: தோனி ஆதங்கம்
26 Apr 2025சென்னை : சன்ரைசர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சி.எஸ்.கே.வின் தோல்வியைத் தொடர்ந்து தோனி ஒன்றிரண்டு ஓட்டைகளை அடைக்கலாம் ஆனால் பலரும் சரியாக விளையாடமல் இருந்தால் கடினம் எனக் க
-
முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மாத ஓய்வூதியம், மருத்துவப்படி உயர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
26 Apr 2025சென்னை : முன்னாள் சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.35 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.17,500 ஆகவும் மற்றும் மருத்துவப் படி ரூ.1 லட்சமாகவும
-
போப் பிரான்சிஸ் சேவை எப்போதும் நினைவில் இருக்கும் - பிரதமர் மோடி
26 Apr 2025புதுடெல்லி : சமூகத்திற்கு போப் பிரான்சிஸ் செய்த சேவையை உலகம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
முகமது ஷமி புதிய சாதனை
26 Apr 2025ஐ.பி.எல். தொடரின் 43-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
-
சமூக நீதி,நேர்மை, துணிவு இவற்றை மனதில் வைத்துக் கொண்டு ஏழை எளிய மக்களுடைய உயர்வுக்காக பாடுபடுங்கள் : யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிப்பெற்றவர்களை பாராட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
26 Apr 2025சென்னை : சமூக நீதி,நேர்மை, துணிவு ஆகியவற்றை மனதில் வைத்துக் கொண்டு, ஏழை எளிய மக்களுடைய உயர்வுக்காகப் பாடுபடுங்கள்.
-
ஏலத்தில் தவறு செய்து விட்டோம்: சி.எஸ்.கே அணி பயற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் ஒப்புதல்
26 Apr 2025சென்னை : சி.எஸ்.கே.
-
தனது வெற்றிக்கான ரகசியம்: மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
26 Apr 2025லக்னோ : ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமாக செயல்படுவதற்கான ரகசியத்தை மேற்கிந்தியத் தீவுகள் வீரர் நிக்கோலஸ் பூரன் பகிர்ந்துள்ளார்.
-
சட்டவிரோத குடியேற்றம்: குஜராத்தில் 450 வங்காளதேசத்தினர் கைது
26 Apr 2025காந்திநகர் : வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் குஜராத்தில் சட்டவ
-
சொந்த மண்ணில் சென்னை அணிக்கு 4-வது தோல்வி
26 Apr 2025சென்னை : ஐ.பி.எல். போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஐதராபாத் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை வெள்ளிக்கிழமை வென்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2025
27 Apr 2025 -
டெல்லியில் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள்: காவல்துறைக்கு உளவுத்துறை பட்டியல்
27 Apr 2025புதுடெல்லி : தேசிய தலைநகர் டெல்லியில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் சொந்தநாடு திரும்புவதை உறுதி செய்வதற்காக 5,000 பாகிஸ்தானியர்களின் பெயர் பட்டியலை டெல்லி போலீஸாரிடம் உள
-
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்ட ‘சசேத்’ மொபைல் செயலியின் சிறப்புகள்
27 Apr 2025சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் 121-வது அத்தியாத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
-
கோவையில் ஜல்லிக்கட்டு: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்
27 Apr 2025கோவை : கோவை மாவட்ட நிர்வாகம், தமிழர் பண்பாட்டு ஜல்லிகட்டு பேரவை, கோவை இணைந்து நடத்தும் மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா கோவை செட்டிபாளையம் எல் அண்ட் டி புறவழிச்சாலை அருகே
-
வக்பு நிலங்களில் வளர்ச்சி பணிகள்: தமிழ்நாடு வக்பு வாரியம் அனுமதி
27 Apr 2025ராமேசுவரம் : வக்பு வாரியத்திற்கு சொந்தமான காலி இடங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தேவையான அனைத்து அனுமதிகளை வழங்க தயாராக உள்ளதாக தமிழ்நாடு வக்பு வாரியம் தெரிவி
-
பஹல்காம் தாக்குதல் வழக்கு: என்.ஐ.ஏ. விசாரணை தொடக்கம்
27 Apr 2025புதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் படி, பயங்கரவாதிகளால் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) எடுத்
-
கடந்த பத்து ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட விண்வெளி ஸ்டார்ட்-அப்கள் : மனதின் குரலில் பிரதமர் மோடி பெருமிதம்
27 Apr 2025புதுடெல்லி : இந்தியா தனது விண்வெளித் துறையை தனியார் துறைக்கும் திறந்து விட்டதை அடுத்து, கடந்த 10 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட விண்வெளி ஸ்டார்ட் அப்புகள் செயலாற்றி வரு
-
இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயார் : பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல் பேச்சு
27 Apr 2025லாகூர் : கோரி, ஷாஹீன், கஸ்னவி ஏவுகணைகள் மற்றும் 130 அணு ஆயுதங்கள் இந்தியாவை தாக்க தயாராக உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி கூறியுள்ளார்.
-
கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது இந்திய கடற்படை
27 Apr 2025புதுடெல்லி : இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் சமீபத்தில் வெற்றிகரமாக பல கப்பல் எதிர்ப்பு ஏவுகணைச் சோதனைகளை நடத்தியதாக கடற்படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.