எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: காலநிலை விழிப்புணர்வை மாணவர்கள் மூலமாக அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டுபோய் சேர்க்கவிருக்கிறோம் என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 3.O நேற்று (பிப்.5) துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “தமிழகத்தில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, அதை எதிர்கொள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் தொடர்ந்து, தமிழக அரசு எடுத்து வருகிறது. அதில் ஒருபகுதியாக என்னுடைய தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் குறித்து ஆராய, இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக மாநாடு நடத்துவது தமிழகம் தான். அதுமட்டுமின்றி, துறையின் பெயரையே சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை என்று மாற்றியிருக்கிறோம். இந்த வரிசையில், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம், தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம், ஆகிய 4 சிறப்பு இயக்கங்கள் மூலமாக இதற்கான முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாகத்தான் ஆண்டுதோறும், காலநிலை உச்சி மாநாடுகளை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த மாநாடுகள் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் கீழ் வரும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இரண்டு காலநிலை மாற்ற உச்சி மாநாடுகளை தமிழக அரசு வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்கிற வகையில், நம்மை தகவமைத்துக் கொள்வதற்கான விவாதங்களை முன்னெடுக்கிற தளமாக இந்த மாநாட்டை அரசு நடத்தி வருகிறது.
உலக நாடுகள் பல்வேறு இயற்கைப் பேரிடர்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், கடந்தாண்டு துபாயில் ஏற்பட்ட வெள்ளம். சீனா, பிரேசில், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளம். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீ. வெப்பமண்டல நாடுகளில் ஏற்பட்ட வெப்ப அலை பாதிப்புகள், ஆகியவற்றை நாம் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல், அண்டை மாநிலமான கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.
தமிழகத்திலும் திருவண்ணாமலையில் சிறிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இவையெல்லாம் வேறுவேறு நாடுகளில், வேறு மாநிலங்களில் நடந்த சம்பவங்களாக இருந்தாலும், இவை எல்லாத்துக்கும் ஒரே காரணமாக காலநிலை மாற்றத்தைத்தான் கூற முடியும். இதை நாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். அதற்கு முதல்தேவை பிரச்சினையின் தீவிரத்தை உணர வேண்டும். காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய விளைவுகளையும், பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டுமெனில், அனைத்து தரப்பு மக்களும் காலநிலை மாற்றம் என்றால் என்ன? அதன் விளைவுகள் என்ன? அதை எப்படி எதிர்கொள்வது? அதற்கு ஏற்றபடி எப்படி நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும்? விழிப்புபணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இது நடந்தால், நமது சமூகம் காலநிலை கல்விப் பெற்ற சமூகமாக இருக்கும். பேரிடர்களில் இருந்து மீண்டு வருவதற்கான மீள்தன்மை இருக்கும். காலநிலை மாற்றத்தை கல்வித்துறை மூலமாக புகட்ட தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. தமிழகத்தின் எதிர்காலத்துக்கான கனவுகள் அனைத்துக்கும் கல்விதான் அடித்தளமாக இருக்கிறது. அதனால்தான் தமிழக அரசு காலநிலை கல்வி அறிவை ஒரு இயக்கமாகவே முன்னெடுக்க முடிவு செய்திருக்கிறது. இதுதொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்.
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். காலநிலை கல்வியறிவுக்கென ஒரு கொள்கையை தமிழக அரசு விரைவில் வகுத்து அறிக்கவுள்ளோம். அனைவருக்கும் அவசியமான காலநிலை விழிப்புணர்வை மாணவர்கள் மூலமாக அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டுபோய் சேர்க்கவிருக்கிறோம். பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு அலுவலர்களுக்கும் காலநிலை மாற்றத்தடுப்பு மற்றும் தழுவல்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும்.
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் வேளாண் உள்ளிட்ட துறைகளுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வை குறைப்பதற்கான வழிமுறைகள் காணப்படும். வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழக அரசு அறிவித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. வெப்ப அலையால் உயிரிழக்க நேரிட்டால், ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளோம். வெப்பநிலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள், மற்றும் ஓஆர்எஸ் கரைசல் வழங்க மாநில பேரிடர் மேலாண்மை நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-02-2025.
04 Feb 2025 -
தமிழ்நாட்டில் ஒரு வாரம் வெப்பநிலை அதிகரிக்கும் வானிலை மையம் தகவல்
04 Feb 2025சென்னை: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
04 Feb 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.840 உயர்ந்து விற்பனையானது.
-
மசோதாக்களுக்கு அனுமதி வழங்காத விவகாரம்: 24 மணிநேரத்தில் தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும் கவர்னருக்கு சுப்ரீம்கோர்ட்டு அறிவுறுத்தல்
04 Feb 2025புதுடெல்லி: மசோதாக்களுக்கு அனுமதி வழங்காமல் கிடப்பில் போடப்பட்ட உள்ளிட்ட விவகாரங்களில் அரசியல் சாசனப்படி 24 மணிநேரத்தில் தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க
-
11-ம் தேதி ராமேசுவரம் வருகிறார் பிரதமர் மோடி
04 Feb 2025சென்னை: பாம்பன் பால திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிற 11-ம் தேதி தமிழகம் வருகிறார்.
-
கால்நடைகளை கொண்டு செல்ல புதிய விதிமுறைகளை வெளியிட்ட ஐகோர்ட்
04 Feb 2025சென்னை: கால்நடைகளை லாரிகள் மூலம் கொண்டு செல்லும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை சென்னை ஐகோர்ட்டு வகுத்து, இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
-
தி.மு.க. - நா.த.க. இடையே நேரடிப்போட்டி: ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று இடைத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
04 Feb 2025ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 8ம் தேதி நடக்கிறது.
-
தமிழகத்தில் காலநிலை விழிப்புணர்வை மக்களிடம் கொண்டுசெல்ல அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
04 Feb 2025சென்னை: காலநிலை விழிப்புணர்வை மாணவர்கள் மூலமாக அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டுபோய் சேர்க்கவிருக்கிறோம் என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் அனைத்துப் ப
-
இன்று இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடல்
04 Feb 2025ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 182 மதுக் கடைகள் மூடப்பட்டன.
-
திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி தலைவர் கைது
04 Feb 2025திருப்பூர்: திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
-
தேர்தல் விதிமுறை மீறல்: டெல்லி முதல்வர் மீது வழக்குப்பதிவு
04 Feb 2025புதுடெல்லி: 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
-
உ.பி. மகா கும்பமேளாவில் இன்று புனித நீராடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
04 Feb 2025புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடி, துறவிகளுடன் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
-
ஈரோடு கிழக்கில் 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: கலெக்டர் தகவல்
04 Feb 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளதாக கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்தார்.
-
உ.பி. மகா கும்பமேளாவில் புனித நீராடிய பூடான் மன்னர்
04 Feb 2025லக்னோ: உ.பி. பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் நேற்று புனித நீராடினார்.
-
வரும் 13-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் டிரம்பை சந்தித்து பேசுகிறார் பிரதமர் மோடி
04 Feb 2025புதுடெல்லி: 13 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி சந்திப்பு வரும் 14-ம் தேதி அமெரிக்க தொழிலதிபர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரை பிரதமர் நரேந்திர மோடி சந்
-
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் பணி தொடக்கம்
04 Feb 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை நாடு கடத்தும் பணியை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
-
அரசு காலி பணியிடங்கள் எத்தனை? - டி.என்.பி.எஸ்.சி தலைவர் விளக்கம்
04 Feb 2025சென்னை : இந்த ஆண்டு அரசு பணிகளில் எத்தனை காலியிடங்கள் நிரப்பப்படும் என்பது ஏப்ரல் மாதம் தெரியவரும் என்று தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார்.
-
உத்தரபிரதேசத்தில் சரக்கு ரெயில்கள் மோதி விபத்து
04 Feb 2025லக்னோ : உத்தரபிரதேசத்தில் 2 சரக்கு ரெயில்கள் மோதி விபத்து ஏற்பட்டது.
-
அங்கன்வாடியில் பிரியாணி, சிக்கன் கேட்ட சிறுவனுக்கு அமைச்சர் பதில்
04 Feb 2025திருவனந்தபுரம் : கேரளத்தில் அங்கன்வாடியில் படிக்கும் சிறுவன், தனக்கு உப்புமாவுக்குப் பதிலாக பிரியாணி வேண்டும் எனக் கேட்டதற்கு கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் பதிலளித்துள்ளார்
-
ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா கோலாகலம்
04 Feb 2025திருப்பதி : ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி திருவிழாவில் பக்தர்கள் வாகன சேவைகளை தரிசனம் செய்தனர்.
-
தைப்பூசம் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் வரும் 12-ம் தேதி கோவில் நடை சாத்தப்படும்
04 Feb 2025ராமேசுவரம் : தைப்பூசம் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பிப்ரவரி 12 அன்று நடை சாத்தப்படுகிறது.
-
அரசு பஸ் ஓட்டியபடி ரீல்ஸ் வீடியோ எடுத்த டிரைவர், கண்டக்டர் டிஸ்மிஸ்
04 Feb 2025சென்னை : சென்னையில் பணியின் போது அரசு பஸ் ஓட்டியபடி ரீல்ஸ் எடுத்து வீடியோ ரிலீஸ் செய்த டிரைவர், கண்டக்டர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர்.
-
திருப்பரங்குன்றத்திற்கு பழனியில் இருந்து காவடியுடன் புறப்பட்ட பா.ஜ.வினர் கைது
04 Feb 2025திண்டுக்கல் : பழனியில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு காவடிகளுடன் பாதயாத்திரையாக புறப்பட்ட பா.ஜ.க.வினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
மத்தியப் பிரதேசம், போபாலில் பிச்சை போட்டால் இனி வழக்குப்பதிவு
04 Feb 2025போபால் : மத்தியப் பிரதேசம் போபால் மாவட்டத்தில் பிச்சை எடுக்கவும் போடவும் தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
-
அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் நிலக்கரி, எரிவாயுவுக்கு இனி 15 சதவீத வரி: சீனா பதிலடி
04 Feb 2025பீஜிங் : டிரம்பின் நடவடிக்கைக்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் நிலக்கரி, எரிவாயுவுக்கு 15 சதவீத வரியை சீனா விதித்துள்ளது.