முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு

வியாழக்கிழமை, 13 பெப்ரவரி 2025      தமிழகம்
School-Education 2022 02 11

Source: provided

சென்னை: பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

மாணவர்கள் மீதான பாலியல் தாக்குதல்களை முற்றிலும் தடுக்க அதிகபட்ச நடவடிக்கை பரிந்துரைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், புதிய விதிகள் குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பான புகார்களில் சிக்குபவர்கள் சில நாட்கள் சஸ்பெண்ட் ஆகி ஜாமீன் பெற்று வெளியில் வந்துவிடுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறையில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள் என 238 பேர் கொண்ட பட்டியலைத் தயார் செய்து, அவர்கள் மீதான விசாரணையை விரைந்து முடிக்க விசாரணை அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து