எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Congress 2023 01 25](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2025/02/13/Congress_2023_01_25.jpg?itok=OfNbUTZF)
Source: provided
புதுடில்லி: இந்தியர்கள் நாடு கடத்தல் விவகாரம் குறித்து டிரம்ப்பிடம் கேட்க பிரதமர் மோடிக்கு தைரியம் உள்ளதா? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் இணை தலைமையேற்பதற்காக பிரதமர் மோடி கடந்த 10-ந்தேதி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். இதன்பின்னர், பாரீஸ் நகரில் நடைபெற்ற ஏ.ஐ. உச்சி மாநாட்டில், அந்நாட்டு அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி ஒன்றாக பங்கேற்றார். பிரான்ஸ் சுற்றுப்பயணம் முடிந்ததும், பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு புறப்பட்டார். நேற்று காலை அந்நாட்டுக்கு சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் அந்நாட்டுக்குள் மட்டுமின்றி உலகெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் டிரம்ப்பை சந்தித்து பேச உள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்ட நிலையில் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட விவகாரம் குறித்து டிரம்ப்பிடம் பிரதமர் மோடி கேள்வி எழுப்புவாரா? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"பிரதமர் மோடி தனது 'நல்ல நண்பர்' அதிபர் டிரம்ப்பை பிப்ரவரி 14-ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கு சந்திப்பார். அப்போது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும், பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் உறுதிப்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தியா ஏற்கனவே சில விவசாய விளைபொருட்கள் மற்றும் டிரம்பிற்கு விருப்பமான ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் மீதான இறக்குமதி வரிகளை குறைத்து அமெரிக்க அதிபரை சமாதானப்படுத்தியுள்ளது.
அமெரிக்க நிறுவனங்களின் கோரிக்கைக்கு ஏற்ப, அணுசக்தி சேதங்களுக்கான சிவில் பொறுப்பு சட்டம், 2010-ஐ திருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமரிடம் ஐந்து கேள்விகள் உள்ளன;-
1. சில நாட்களுக்கு முன்பு இந்திய குடிமக்கள் மனிதாபிமானமற்ற முறையில் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் குறித்து அமெரிக்க அதிபரிடம் கேட்க பிரதமர் மோடிக்கு தைரியம் உள்ளதா?
2. எதிர்காலத்தில் நாடு கடத்தப்படும் இந்தியர்களை அழைத்து வர, வெனிசுலா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளைப் போல் இந்தியா தனது சொந்த விமானங்களை அனுப்பும் என்று பிரதமர் மோடி அமெரிக்க அதிபரிடம் தெரிவிப்பாரா?
3. பாலஸ்தீனம் குறித்த இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்துவாரா? அமெரிக்க அதிபர் காசா விவகாரத்தில் முன்வைத்த வினோதமான திட்டத்திற்கு தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவாரா?
4. காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்தும் உலக சுகாதார அமைப்பில் இருந்தும் விலகுவது அமெரிக்காவின் தலைமைப் பதவியையும், அதன் பொறுப்பையும் கைவிடுவதாகும் என்று மோடி அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கூறுவாரா?
5. எச்.1.பி. விசா வைத்திருப்பவர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் குறித்தும், அவர்களில் 70%க்கும் அதிகமானோர் இந்திய இளைஞர்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் பிரதமர் மோடி அதிபர் டிரம்பிடம் தெளிவாகச் சொல்வாரா?
சந்தேகத்திற்கு இடமின்றி பிரதமர் மோடி, தொழிலதிபர் எலான் மஸ்க்கையும் சந்திப்பார். இது சம்பந்தமாக நமக்கு இரண்டு கேள்விகள் உள்ளன;-
1. டெஸ்லா நிறுவனம் இந்தியாவை தனது மின்சார வாகனங்களுக்கான சந்தையாக கருதினால், இந்தியாவில் அதன் உற்பத்தி மையத்தை தொடங்க வேண்டும் என்று எலான் மஸ்க்கிடம் பிரதமர் மோடி தெளிவாக கூறுவாரா?
2. மே 2014-ல் பிரதமரான பிறகு ஸ்பெக்ட்ரத்தை நிர்வாக ரீதியாக ஒதுக்கீடு செய்யாமல், ஏலம் விடும் கொள்கையை ஆதரித்த மோடி, மீண்டும் அதனை வலியுறுத்துவாரா? ஸ்டார்லிங்க் போன்ற செயற்கைக்கோள் இணைய சேவைதாரர்களை பொறுத்தவரை, பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்பதை பிரதமர் மோடி வலியுறுத்துவாரா?"
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-02-2025.
13 Feb 2025 -
எந்த நிபந்தனையும் இல்லாமல் அ.தி.மு.க.வில் இணையத் தயார் - ஓ. பன்னீர்செல்வம் அதிரடி
13 Feb 2025தேனி, எந்த நிபந்தனையும் இல்லாமல் அ.தி.மு.க.வில் இணையத் தயார் என்று முன்னால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
மகா கும்பமேளாவில் இதுவரை 48 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்
13 Feb 2025லக்னோ, மகா கும்பமேளாவில் இதுவரை 48 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
-
புகையிலை பழக்கத்திற்கு அடிமையான மகளை பெற்றோர் திட்டியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
13 Feb 2025பெங்களூரு, புகையிலை பழக்கத்திற்கு அடிமையான மகளை பெற்றோர் திட்டியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
காதலர் தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் கண்காணிப்பை தீவிரம்
13 Feb 2025சென்னை, காதலர் தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் போலீசார் தீவிர கண்காணிப்பை பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
ஜார்கண்ட்: வெடிகுண்டு தாக்குதலில் பள்ளி முதல்வர் பலி போலீசார் விசாரணை
13 Feb 2025ராஞ்சி, ஜார்கண்ட்டில் வெடிகுண்டு தாக்குதலில் பள்ளி முதல்வர் உயிரிழந்தார் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் சென்னை வானிலை மையம் தகவல்
13 Feb 2025சென்னை, தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இந்தாண்டு இறுதிக்குள் மெட்ரோ ரயில் சேவை: பூந்தமல்லி - போரூர் இடையே சுரங்கம் தோண்டும் பணிகளை ஆய்வு செய்த பின் முதல்வர் தகவல்
13 Feb 2025சென்னை, இந்தாண்டு இறுதிக்குள் பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்,
-
அ.தி.மு.க. சின்னத்தை யாராலும் முடக்க முடியாது: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு
13 Feb 2025மதுரை, அ.தி.மு.க. சின்னத்தை யாராலும் முடக்க முடியாது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.
-
காஷ்மீர் குண்டு வெடிப்பில் ராணுவ வீரர் மரணம் கடவுள் சத்தியமானவர் என்று முழுங்கிய தாய்
13 Feb 2025ராஞ்சி, காஷ்மீர் குண்டு வெடிப்பில் ராணுவ வீரர் மரணம் அடைந்தார் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
-
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்
13 Feb 2025நைபிடா, மியான்மர் நாட்டில், இந்தியாவின் மணிப்பூர் எல்லையையொட்டிய பகுதியில் நேற்று மதியம் 12.35மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
-
கமல்ஹாசனுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
13 Feb 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
-
1961-ம் ஆண்டு சட்டத்திற்கு பதிலாக புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
13 Feb 2025புதுடில்லி, மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.
-
புதிய வருமான வரியை மக்களவையில் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்
13 Feb 2025புதுடெல்லி, புதிய வருமான வரியை மக்களவையில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.
-
ஊழல் குறித்து லோக்பால் அமைப்புக்கு இதுவரை 2 ஆயிரத்துக்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளன
13 Feb 2025புதுடெல்லி, ஊழல் குறித்து லோக்பால் அமைப்புக்கு இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
மெட்ரோ ரெயில் பணியை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார்
13 Feb 2025சென்னை, மெட்ரோ ரெயில் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
-
பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவின் கூட்டாட்சிக்கு ஆபத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
13 Feb 2025சென்னை: பா.ஜ.க. ஆட்சியின் கீழ் இந்தியாவின் கூட்டாட்சி முறை ஆபத்தில் உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தற்போது லோக்சபா தேர்தல் நடந்தால் தனி மெஜாரிட்டியுடன் பா.ஜ. ஆட்சியை பிடிக்கும் புதிய கருத்துக்கணிப்பில் தகவல்
13 Feb 2025புதுடில்லி: தற்போதைய சூழலில் லோக்சபா தேர்தல் நடந்தால் பா.ஜ., தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என்று பிரபல தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்
-
அ.தி.மு.க.வுக்கு எந்த சக்தியாலும் சேதாரத்தை ஏற்படுத்த முடியாது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்
13 Feb 2025சென்னை: அ.தி.மு.க.வுக்கு எந்த சக்தியாலும் சேதாரத்தை ஏற்படுத்தி விடமுடியாது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
-
பெண் காவலர் பாலியல் புகார்: ஐ.பி.எஸ். அதிகாரி சஸ்பெண்ட்
13 Feb 2025சென்னை: பெண் காவலர் அளித்த பாலியல் புகார் அடிப்படையில், சென்னை மாநகர போலீஸ் வடக்கு மண்டல போக்குவரத்து பிரிவு இணை கமிஷனர் மகேஷ் குமார் (ஐ.பி.எஸ். அதிகாரி) சஸ்பெண்ட
-
அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
13 Feb 2025வாஷிங்டன்: பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கு அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
தி.மு.க. மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் நியமனம்
13 Feb 2025சென்னை; பல மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து தி.மு.க. தலைமையகம் அறிவித்துள்ளது.
-
காசா மீது மீண்டும் தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
13 Feb 2025டெல் அவிவ்: பிணைக்கைதிகளை வரும் சனிக்கிழமைக்கு ஹமாஸ் விடுவிக்காவிட்டால் காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கும் என்று அதன் பிரதமர் பெஞ்சமின் நென்யாகு எச்
-
ஈரான் அணு ஆயுத தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?
13 Feb 2025வாஷிங்டன்: ஈரானில் உள்ள அணு ஆயுத தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம் தீட்டி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
-
அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி
13 Feb 2025சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒரு புல்லைக்கூட அண்ணாமலையால் பிடுங்க முடியாது என்று தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.