எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்கா, ரஷிய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் - உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இடையேயான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் நிறைவுபெற்றது.
அதன் காரணமாக, ஸெலென்ஸ்கியுடனான பேச்சுவாா்த்தையை டிரம்ப் பாதியில் முடித்துக்கொண்டு புறப்பட்டுள்ளாா். இந்த சந்திப்புக்குப் பிறகு, உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் அதிபர் உண்மையிலேயே ஒரு சமாதான பேச்சுவார்த்தையைதான் விரும்பினாரா எனத் தெரியவில்லை என்று கூறியுள்ள அவர், பேச்சுவார்த்தை வெற்றியடையாமல் போனதற்கு ஸெலென்ஸ்கி அதிபர் டிரம்பிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இது விரோதமாக மாற வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தார்.
அதேநேரத்தில் டிரம்ப்புடனான சந்திப்பு வாக்குவாதமாக மாறியதற்கு ஜெலென்ஸ்கி வருத்தம் தெரிவித்தார். எனினும் டிரம்பிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் பேச்சுவார்த்தையில் தோல்வி என்பது இரு தரப்புக்குமே நல்லதல்ல என்றும் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார். மேலும், நாங்கள் மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நாங்கள் ஏதாவது மோசமான செயலைச் செய்தோமா என்று எனக்குத் தெரியவில்லை என்றார். ரஷிய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் - உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இடையேயான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் நிறைவுபெற்றது.
அதன் காரணமாக, ஸெலென்ஸ்கியுடனான பேச்சுவாா்த்தையை டிரம்ப் பாதியில் முடித்துக்கொண்டு புறப்பட்டுள்ளாா். உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்ததில் இருந்து, அப்போதைய அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசும், மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு உதவிகளை வாரி வழங்கின. இந்தச் சூழலில், அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், இந்த விவகாரத்தில் ஜோ பைடன் அரசின் கொள்கைகளை அடியோடு மாற்றிமைத்தாா்.
ரஷியாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைன் மீட்க முடியாது என்றும், உக்ரைனுக்கு நேட்டோவில் இடம் அளிக்கப்படாது என்றும் டிரம்ப் அரசு கூறிவருகிறது. மேலும், இந்த விவகாரத்தில் முந்தைய பைடன் அரசால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் டிரம்ப் தொலைபேசியில் உரையாடி, அவருடன் உறவைப் புதுப்பித்துக் கொண்டாா். இந்தச் சூழலில், ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு தாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அளித்த உதவிகளுக்குக் கைம்மாறாக, அந்த நாட்டின் அரிய வகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு காலவரையறை இல்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தி வருகிறாா்.
இதற்கு ஒப்புக்கொண்ட உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி, தங்கள் நாட்டுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் பொருளாதார ஒப்பந்தத்தில் கையொப்பமிடத் தயாா் என்று அறிவித்தாா். ஆனால், உக்ரனுக்கு இனியும் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தாா். இந்தச் சூழலில், இந்த பொருளாதார ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக அமெரிக்காவுக்கு வெள்ளிக்கிழமை வந்த ஸெலென்ஸ்கி, வெள்ளை மாளிகையில் அதிபா் டிரம்ப்பை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது, உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஸெலென்ஸ்கி மீண்டும் வலியுறுத்தினாா். இதனால், டிரம்ப்-ஸெலென்ஸ்கி இடையேயான ஆலோசனை காரசார வாக்குவாதமாக மாறியது. அதிருப்தியடைந்த டிரம்ப், பேச்சுவாா்த்தையை பாதியில் முடித்துக்கொண்டு எழுந்தாா்.
அதன் காரணமாக, வெள்ளை மாளிகையில் இருவரும் கூட்டாக பத்திரிகையாளா்கள் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நிகழ்வையும், மதிய விருந்தையும் புறக்கணித்துவிட்டு ஸெலென்ஸ்கி வெள்ளை மாளிகையிலிருந்து புறப்பட்டுச் சென்றாா். டிரம்ப்-ஸெலென்ஸ்கி சந்திப்பின்போது அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் உடனிருந்தாா்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 03 -03-20235
02 Mar 2025 -
3,000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் எகிப்தில் கண்டுபிடிப்பு
02 Mar 2025கெய்ரோ : எகிப்து நாட்டில் 3000 ஆண்டுகள் பழைமையான தங்கச் சுரங்கப்பகுதி கண்டறியப்பட்டுள்ளது.
-
உ.பி. அலிகர் முஸ்லிம் பல்கலை.யில் பிளஸ் 1 மாணவர் சுட்டுக்கொலை : சக மாணவர் வெறிச்செயல்
02 Mar 2025புதுடெல்லி : உத்தரப் பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் பிளஸ் 1 மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
-
சிம்பொனி அரங்கேற்ற லண்டன் செல்லும் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்தினார் முதல்வர் ஸ்டாலின
02 Mar 2025சென்னை : இசைஞானி இளையராஜா மார்ச் 8-ம் தேதி லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்ற உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இளையராஜா இல்லத்திற்கு சென்று அவருக்கு நேரில் வ
-
அமெரிக்காவின் அலுவல் மொழியாக ஆங்கிலம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
02 Mar 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக ஆங்கிலம் இருக்குமென அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
பயோ டெக்னாலாஜி நுழைவுத்தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
02 Mar 2025சென்னை : முதுநிலை பயோ டெக்னாலாஜி படிப்புகளுக்கான கேட்-பி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் (மார்ச் 3) நிறைவு பெறுகிறது.
-
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 11,12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து : தன்னம்பிக்கையுடன் எழுதுமாறு அறிவுறுத்தல்
02 Mar 2025சென்னை : 2024-25-ஆம் கல்வியாண்டுக்கான 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. பெயரில் விஷமக் கருத்துகள்: பொதுச்செயலாளர் ஆனந்த் எச்சரிக்கை
02 Mar 2025சென்னை : த.வெ.க. பெயரில் விஷமக் கருத்துகளைத் திணிக்கும் முயற்சி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
-
புதிதாக பாஸ் போர்ட் பெற பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் : மத்திய அரசு புதிய அறிவிப்பு
02 Mar 2025புதுடெல்லி : புதிதாக பாஸ் போர்ட் பெற பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
சீமான் வழக்கில் தி.மு.க.வின் தலையீடா? - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்
02 Mar 2025புதுக்கோட்டை : சீமான் விவகாரத்தில் தி.மு.க. பின்புலத்தில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே தென் மாவட்ட பஸ்கள் இயக்கப்படும் : போக்குவரத்து கழகம் அறிவிப்பு
02 Mar 2025சென்னை : தென்மாவட்டங்களிலிருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த பஸ்கள் இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளத
-
தமிழகத்தில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது : தயார்நிலையில் தேர்வு மையங்கள்
02 Mar 2025சென்னை : தமிழகத்தில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
-
நன்றியுணர்வு மற்றும் பக்தியின் அடையாளம் ரம்ஜான் நோன்பு : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
02 Mar 2025புதுடெல்லி : ரம்ஜான் நோன்பு நேற்று (மார்ச் 2) தொடங்கியுள்ள நிலையில் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மீனவர்கள் பிரச்சினையில் ஆக்கபூர்வமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் : தமிழ்நாடு அரசுக்கு கவர்னர் வலியுறுத்தல்
02 Mar 2025ராமேசுவரம் : மீனவர் பிரச்சினையை அரசியலாக்குவதற்குப் பதிலாக ஆக்கபூர்வமான அணுகுமுறையை மாநில அரசு மேற்கொண்டால் அது பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு பெரி
-
தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்கு புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு இன்று தொடக்கம்
02 Mar 2025புதுச்சேரி : புதுச்சேரி, காரைக்காலில் தமிழக அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் 102 தனியார் பள்ளிகளில் படிக்கும் மற்றும் தனி தேர்வர்கள் 8,105 ஆயிரம் பேருக்கும் பிளஸ் 2 பொத
-
உணவக மேலாண்மை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு
02 Mar 2025சென்னை : இளநிலை உணவக மேலாண்மை படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
மூன்றாண்டுகளில் நான் முதல்வன் திட்டத்தில் 41.3 லட்சம் பேர் பயன் தமிழக அரசு தகவல்
02 Mar 2025சென்னை: நான் முதல்வன் திட்டத்தின்கீழ், இதுவரையில் 41.3 லட்சம் பேர் பயன்பெற்றிருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது.
-
வரும் 6-ம் தேதி வரை 4 நாட்கள் தமிழகத்தில் 3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
02 Mar 2025சென்னை : தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 6-ம் தேதி வரை 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 – 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்ன
-
கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது திருச்செந்தூர் முருகன் கோவில் மாசித்திருவிழா
02 Mar 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
-
இனி நிம்மதியாக இருக்க முடியாது: சீமான் மீது நடிகை சாபம்
02 Mar 2025சென்னை: சீமான் இனி நிம்மதியாக இருக்கமுடியாது என்று வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் நடிகை வெளியிட்டுள்ளார்.
-
10, 11, 12 பொதுத்தேர்வு: உதவி எண்கள் அறிவிப்பு
02 Mar 2025சென்னை : 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடர்பான புகார்கள், ஐயங்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் த.மா.கா.பங்கேற்காது: ஜி.கே.வாசன் அறிவிப்பு
02 Mar 2025சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மார்ச் 5 ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் த.மா.கா.
-
இன்று நாகை புதிய பஸ் நிலையத்தில் 105 பஸ்களின் சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
02 Mar 2025நாகப்பட்டினம் : இன்று நாகை புதிய பஸ் நிலையத்தில் 105 பஸ்களின் சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
-
உத்தரகண்ட் பனிச்சரிவு பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
02 Mar 2025டெஹ்ராடூன்: உத்தரகண்டில் பணிச்சரிவில் காணாமல் போன மேலும் ஒருவரின் உடல் ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது தனியார் விண்கலம் 'புளூ கோஸ்ட்'
02 Mar 2025வாஷிங்டன்: அமெரிக்க நிறுவனத்தின் விண்கலம், நிலவில் நேற்று வெற்றிகரமாக தரை இறங்கியது.