முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்களில், தமிழில் கும்பாபிஷேகம் நடத்த அரசாணை கோரி நாம் தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கு தள்ளிவைப்பு

வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2025      தமிழகம்
Chennai-high-court2

சென்னை, கோவில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்த அரசாணை கோரிய வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சியின் மாநில செயலாளர் விஜயராகவன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 'கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோவிலில் ஏப்ரல் 4-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி இந்த உத்தரவு அடிப்படையில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தும்படி அனைத்து செயல் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு கொடுத்தேன். இதுவரை எந்த பதிலும் இல்லை.

எனவே, இதுதொடர்பாக அரசாணை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும். மருதமலை முருகன் கோவிலிலும் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்னிலையில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. இந்த மனு தொடர்பாக தமிழக அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 days ago
View all comments

வாசகர் கருத்து