எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : உண்மைக்கு புறம்பாகவும், தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவும் பல்வேறு பொய் செய்திகளை எடப்பாடி பழனிசாமி பரப்பி வருவதாக ரகுபதி தெரிவித்துள்ளார்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமைச் செயலகம், சட்டப் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உண்மைக்கு புறம்பாகவும், தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவும் பல்வேறு பொய் செய்திகளை இன்றைக்கு பரப்பிக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். தமிழகத்தை பொறுத்த வரைக்கும், நாங்கள் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று சொல்வதிலே எந்தவிதமான தவறும் கிடையாது. கடந்த 20 ஆண்டுகால வரலாற்று புள்ளி விவரங்களை நாம் எடுத்து பார்த்தோமேயானால், அதிகமாக 2012-ஆம் ஆண்டில் நடந்திருக்கின்ற குற்றச் சம்பவங்கள் 1943 - 2013-ல் 1927 - கடந்த ஆண்டில் 1540. மக்கள் தொகை பெருகுகிறது; குற்றச் சம்பவங்கள் பெருகுகிறது என்றெல்லாம் சொல்கின்ற இந்த நேரத்தில், அண்ணா திமுக ஆட்சியில், அம்மையார் ஆட்சியிலும் சரி, எடப்பாடி ஆட்சியிலும் சரி அன்றைக்கு குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரியும்.
ஆனால், ஒரு சில தொடர் நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு அதன் மூலமாக ஏதோ தமிழகத்திலே சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்கின்ற தவறான தகவல்களை இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி பரப்பி வருகின்றார். அதற்குக் காரணம் தமிழகத்தை நோக்கி பல்வேறு தொழிற்சாலைகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த தொழிற்சாலைகள் தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. தமிழக மக்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படுகிறது.
இதையெல்லாம் கண்டு பொறாமை கொண்டு தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்பதற்காக திராவிட முன்னேற்றக் கழக அரசு இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறது என்கின்ற காரணத்திற்காக, எடப்பாடி பழனிசாமி ஏதோ தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. இங்கே எதற்கும் அமைதி பூங்கா இல்லை என்ற தவறான தகவல்களை பரப்பி, மக்களை அச்சுறுத்தி வருகின்றாரே தவிர, எந்த இடத்திலும்.
எந்த காலத்திலும் அவர்களுடைய காலத்தில் நடைபெற்றது போல தூத்துக்குடி சம்பவமோ, பரமக்குடி சம்பவமோ அல்லது துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களோ, கலவரங்களோ எதுவும் எங்களுடைய இந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் கிடையாது. இது ஒன்றே போதும் - தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டான சம்பவம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். இன்றைக்கு (நேற்று) சட்டமன்றத்தில், ஜீரோ நேரத்தில் பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் என்கின்ற முறையில், எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை தலைவர்களிடத்தில் கேட்டார்கள்.
ஆனால், அவர்களுடைய 10 ஆண்டு காலத்தில் எழுதப்பட்ட ஒரு நீதி. அதாவது சட்டமன்றம் துவங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக ஜீரோ நேரத்தில் நாங்கள் என்ன பிரச்சனையை கிளப்ப இருக்கிறோம் என்பதை பற்றிய புள்ளிவிபரத்தை சட்டப்பேரவை தலைவர் இடத்திலே தந்தால் அவர் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அனுப்பி பதிலை பெற முடியும். அமைச்சர் பதில் இல்லை என்று சொல்லிவிட்டால் பிரச்சனை மட்டும் எழுப்ப முடியும்.
ஆனால், இன்றைக்கு (நேற்று) அரை மணி நேரத்திற்கு முன்பாக அல்லாமல், சட்டப்பேரவை துவங்குவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு குறைந்தது 7 அல்லது 8 நிமிடங்களுக்கு முன்னால், கொறடா சட்டப்பேரவை தலைவர் இடத்தில் நாங்கள் காவல்துறையைப் பற்றி ஒரு பிரச்சனையை எழுப்பப் போகிறோம் என்று சொன்னாரே தவிர, என்ன பிரச்சனையை எழுப்ப போகிறோம் என்பதை கூட அவர்கள் சொல்லவில்லை. எழுத்து மூலமாக எழுதி தரவில்லை. ஆனால், ஜீரோ நேரத்தில் எழுந்து கொண்டு எங்களைப் பேச அனுமதிக்க மறுக்கிறீர்கள் என்று சத்தம் போடுவது, எங்களுடைய துணை முதலமைச்சர் உடைய பதிலுரையை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு அவர்கள் செய்திருக்கும் செயல் என்பதை நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்த அரசை பொறுத்தவரைக்கும், எதிர்க்கட்சிகளுக்கு தான் இன்றைக்கு (நேற்று) அதிகமான அளவில் வாய்ப்பை தருகின்ற முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கின்றார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று சொல்லுகின்ற முதலமைச்சர். ஆனால் அரை மணி நேரத்திற்கு முன்னால் கொடுக்க வேண்டும் என்கின்ற விதி இருக்கும்போது, இங்கே நாங்கள் பத்து நிமிடங்களுக்கு முன்பாக ஒரு பிரச்சனையை கிளப்ப போகிறோம் என்று சொல்லிவிட்டு, அது கூட என்ன பிரச்சனை என்பதைச் சொல்லாமல் இருந்தால், எப்படி அங்கு பதில் சொல்ல முடியும்.
எங்களுடைய முதலமைச்சரிடத்திலேயே பதில் இருக்கிறது. ஆனால், அதற்காக சட்டத்தை மீறி எதையும் செய்யக்கூடாது என்பதற்காக சட்டப்பேரவை தலைவர் , உங்களுக்கு நான் அனுமதி கொடுக்க முடியாது. நீங்கள் அரை மணி நேரத்திற்கு முன்னால் வந்து தகவலை சொல்லவில்லை என்று சொன்னால் அது குற்றமா? அது தண்டனைக்கு உரியதா? அல்லது அவர்களை அசிங்கப்படுத்துவதா அவமாரியாதை செய்வதா? இவர்கள்தான் சட்டமன்றத்தை அவமரியாதை செய்கின்றார்களே தவிர, இன்றைக்கு திராவிட முன்னேற்ற கழகம் சட்டமன்றத்தினுடைய மரியாதை தருகின்ற அமைப்பாக இருக்கிறது என்பதை இங்கே நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 4 days ago |
-
கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக விமானங்கள் இயக்க நடவடிக்கை
02 Apr 2025ஆலந்தூர் : கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகிறது.
-
பாக்., அதிபர் மருத்துவமனையில் அனுமதி
02 Apr 2025பாகிஸ்தான் : பாகிஸ்தான் அதிபர் உடல்நிலை பாதிப்பால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-04-2025.
02 Apr 2025 -
இந்தியா - சீனா ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த வேண்டும் : அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தல்
02 Apr 2025சீனா : இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தினார்.
-
திருப்பூர் அருகே தங்கையை கொலை செய்த அண்ணன் கைது
02 Apr 2025திருப்பூர், பல்லடம் அருகே கல்லூரி மாணவி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், காதல் விவகாரத்தால் ஆத்திரமடைந்த அண்ணன் தனது தங்கையை கொலை செய்தது முதற்கட்ட விசா
-
கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
02 Apr 2025சென்னை : மத்திய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
-
வயதான தம்பதி மீது நாயை ஏவி வேடிக்கை பார்த்த உரிமையாளர்
02 Apr 2025சென்னை, வயதான தம்பதி மீது ராட்வீலர் நாயை ஏவி உரிமையாளர கடிக்க விட்டு வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வக்பு திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
02 Apr 2025சென்னை, 1995-ம் ஆண்டு வக்பு சட்டத்தில் உத்தேச திருத்தம் செய்யும் சட்ட முன்வடிவினை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.
-
வக்பு திருத்த மசோதாவுக்கு பிஜூ ஜனதா தளம் எதிர்ப்பு
02 Apr 2025புதுடெல்லி, வக்பு திருத்த மசோதாவை தங்கள் கட்சி எதிர்ப்பதாக பிஜூ ஜனதா தளம் தெரிவித்துள்ளது.
-
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
02 Apr 2025சென்னை, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க நேரம் கேட்டு தமிழக அரசு சார்பில் கடிதம் அ
-
விராலிமலையில் ஜல்லிக்கட்டு: மாடி முட்டியதில் காயம் அடைந்த காவல் ஆய்வாளருக்கு விஜயபாஸ்கர் முதலுதவி
02 Apr 2025விராலிமலை : விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி காயம் அடைந்த காவல் ஆய்வாளருக்கு முன்னாள் அமைச்சர் முதலுதவி அளித்தார்.
-
கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றம்
02 Apr 2025சென்னை, கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் மு.க.
-
கோவையில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் : சட்டசபையில் அமைச்சர் தகவல்
02 Apr 2025சென்னை : கோவை மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய விரைவில் ஆய்வுக் கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.
-
மாணவர்களுக்கு தேவையான அளவு பேருந்துகள் இயக்க முதல்வர் உத்தரவு : அமைச்சர் சிவசங்கர் தகவல்
02 Apr 2025சென்னை : பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேவையான அளவு பேருந்துகள் இயக்க வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
-
தேர்தலை நோக்கமாகக் கொண்டு கச்சத்தீவு மீட்பு தீர்மானம் - எடப்பாடி பழனிசாமி
02 Apr 2025சென்னை : தேர்தலை நோக்கமாகக் கொண்டு கச்சத்தீவை மீட்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
வக்ப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்கு பயன்படுத்தப்பட வக்பு மசோதா அவசியம் : பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பேச்சு
02 Apr 2025டெல்லி : வக்ப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த நோக்கத்தை அடைய வக்பு மசோதா தேவை.
-
ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு வீடுகளில் மாதம் தோறும் மின் கட்டணம் வசூல்: தமிழ்நாடு அரசு ஆலோசனை
02 Apr 2025சென்னை, ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு வீடுகளில் மாதம் தோறும் மின் கட்டணம் வசூல் செய்ய தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
பா.ஜ.க. தலைவர் தேர்வு குறித்து பாராளுமன்றத்தில் அகிலேஷ், அமித்ஷா பேச்சால் கலகலப்பு
02 Apr 2025புதுடெல்லி : சமாஜவாதி கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசும்போது, பாஜக தலைவர் தேர்வு குறித்து கேள்வி எழுப்பினார்.
-
அமெரிக்க பொருட்களுக்கான அனைத்து இறக்குமதி வரிகளையும் ரத்து செய்து இஸ்ரேல் புதிய உத்தரவு
02 Apr 2025டெல் அவிவ், அமெரிக்க பொருட்களுக்கான அனைத்து இறக்குமதி வரிகளும் ரத்து செய்யப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
-
காசா முனையில் மேலும் ராணுவ தாக்குதல் தீவிரம் : இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தகவல்
02 Apr 2025இஸ்ரேல் : காசா முனையில் ராணுவ தாக்குதலை விரிவுப்படுத்தி வருகிறோம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளர்.
-
எம்புரான் படத்துக்கு தடை கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு
02 Apr 2025கேரளா, எம்புரான் படத்துக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதிக்ககோரி மனு.
-
மியான்மா் நிலநடுக்கம்: உயிரிழப்பு 3,643 ஆக உயர்வு
02 Apr 2025மியான்மரில் : மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,643-ஐக் கடந்துள்ள நிலையில், மிக மோசமான இயற்கை பேரழிவ
-
புதுப்பட்டினம் கடற்கரையை சுற்றுலாத் தலமாக்கப்படுமா ? - அமைச்சர் ராஜேந்திரன் பதில்
02 Apr 2025சென்னை : புதுப்பட்டினம் கடற்கரையை சுற்றுலாத் தலமாக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திரன் பதில் அளித்தார்.
-
இறந்ததாக வெளியான தகவல்: நேரலையில் தோன்றுவதாக நித்தியானந்தா அறிவிப்பு
02 Apr 2025ஆமதாபாத் : இறந்ததாக வெளியான தகவலையடுத்து நேரலையில் தோன்றுவதாக நிதியானந்தா அறிவித்துள்ளார்.
-
வக்பு மசோதா மத சுதந்திரத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிரானது : பார்லி.யில் ஆ.ராசா பேச்சு
02 Apr 2025டெல்லி : வக்பு மசோதா மத சுதந்திரத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிரானது என்று பாராளுமன்றத்தில் வக்பு மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விவாதத்தில் தி.மு.க.