எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை:சன்ரைஸர்ஸ் ஐதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது மும்பை இண்டியன்ஸ். இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை 2-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
முதலில் பேட் செய்த மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் அதிரடி தொடக்கம் கண்டும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளாமல் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.
டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்ய, லென்ட் சிம்மன்ஸும், பார்திவ் படேலும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். வேகமாக ஆட முயன்ற பார்திவ் படேல் 17 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டெயின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த உன்முக்த் சந்த் 5 ரன்களில் நடையைக் கட்ட, சிம்மன்ஸுடன் இணைந்தார் கேப்டன் ரோஹித் சர்மா. இந்த ஜோடி அதிரடியாக ஆட, 10 ஓவர்களில் 72 ரன்களை எட்டியது மும்பை. ஸ்டெயின் வீசிய 13-வது ஓவரின் முதல் இரு பந்துகளில் பவுண்டரிகளை விரட்டி 41 பந்துகளில் அரைசதம் கண்ட சிம்மன்ஸ், அடுத்த பந்தில் போல்டு ஆனார். அவர் 42 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்தார்.
பின்னர் வந்த போலார்ட் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்க, கரண் சர்மா வீசிய அடுத்த ஓவரில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 15 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு வந்த அம்பட்டி ராயுடு 7 ரன்களிலும், ஹர்பஜன் சிங் ரன் ஏதுமின்றியும் வெளியேறினர். மறுமுனையில் அதிரடியாக ரன் சேர்த்தார் போலார்ட், புவனேஸ்வர் குமார் வீசிய கடைசி ஓவரில் போல்டு ஆனார். அவர் 24 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்தது மும்பை.
சன்ரைஸர்ஸ் தரப்பில் புவனேஸ்வர் குமார் 4 ஓவர்களில் 26 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் ஆடிய சன்ரைஸர்ஸ் அணிக்கு ஷிகர் தவன்-டேவிட் வார்னர் ஜோடி அதிரடி தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. ஹர்பஜன் சிங் வீசிய 4-வது ஓவரை எதிர்கொண்ட ஷிகர் தவன், அதில் 3 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விளாச, அந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள் கிடைத்தன. ஆனால் 5-வது ஓவரை வீசிய மலிங்கா, வார்னரை வீழ்த்தினார். 7 பந்துகளில் 9 ரன்கள் எடுத்த வார்னர், அம்பட்டி ராயுடுவிடம் கேட்ச் ஆனார். மெக்லினாகன் வீசிய அடுத்த ஓவரில் ஷிகர் தவன் ஆட்டமிழந்தார். அவர் 29 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்தார்.
பின்னர் வந்த நமன் ஓஜா 9 ரன்களில் நடையைக் கட்ட, 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்திருந்தது சன்ரைஸர்ஸ்.
இதன்பிறகு லோகேஷ் ராகுலுடன் இணைந்தார் ரவி போபாரா. பந்துகளை வீணடிக்காமல் விளையாடிய இந்த ஜோடி 36 ரன்கள் சேர்த்தது. அந்த அணி 104 ரன்களை எட்டியபோது ராகுல் 25 ரன்களில் (27 பந்துகளில்) ஆட்டமிழந்தார். இதன்பிறகு போபாராவுடன் இணைந்தார் ஹனுமா விஹாரி. அப்போது சன்ரைஸர்ஸ் வெற்றி பெற கடைசி 5 ஓவர்களில் 54 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.
வினய் குமார் 16-வது ஓவரில் இரு பவுண்டரிகளையும், மலிங்கா வீசிய 17-வது ஓவரில் ஒரு பவுண்டரியையும் ஹனுமா விஹாரி விளாச, அந்த ஓவர்களின் மூலம் 20 ரன்கள் கிடைத்தன. இதனால் கடைசி 3 ஓவர்களில் 34 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. மெக்லீனா கான் வீசிய 18-வது ஓவரில் போபாரா 23 ரன்களில் (27 பந்துகளில்) ஆட்டமிழந்தார். இதையடுத்து கரண் சர்மா களம் கண்டார். அதேநேரத்தில் மெக்லினாகன் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன.
இந்த ஓவர்தான் திருப்புமுனையாக அமைந்தது. 19-வது ஓவரை வீசிய மலிங்கா முதல் பந்தில் ஹனுமா விஹாரியையும் (10 பந்துகளில் 16 ரன்கள்), 3-வது பந்தில் பிரவீண் குமாரையும் (0), 4-வது பந்தில் ஸ்டெயினையும் (0) வீழ்த்தினார். இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது சன்ரைஸர்ஸ். கரண் சர்மா 2, புவனேஸ்வர் குமார் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
மும்பை தரப்பில் மலிங்கா 4 ஓவர்களில் 23 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், மெக்லீனாகான் 4 ஓவர்களில் 20 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.6 hours 18 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
ஐ.பி.எல். 41-வது லீக் ஆட்டம்:ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு
26 Apr 2024பெங்களூரு:ஐபிஎல் சீசனின் 41-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
இந்தோனேசிய வீராங்கனை சாதனை
26 Apr 2024மங்கோலியா பெண்கள் கிரிக்கெட் அணி இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 ஆட்டங்கள் அடங்கிய சர்வதேச 20 ஓவர் தொடரில் பங்கேற்றது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்:பெங்களூருவில் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்
26 Apr 2024பெங்களூரு:கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றது.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
வாக்குப்பதிவு நாளில் சி.பி.ஐ. சோதனை: தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் கட்சி புகார்
27 Apr 2024கொல்கத்தா, தேர்தல் நாளில் சந்தேஷ்காலியில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதற்கு எதிராக மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.