முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

தென்காசி, ஆக 8 - மலைப்பகுதியில் தொடர் சாரல் பெய்துவருவதையடுத்து குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உல்லாச பயணிகள் பாதுகாப்புடன் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டோ கொட்டோ  என்று கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இரவில் பெய்த தொடர் சாரல் காரணமாக நேற்று முன்தினம் தண்ணீர் வரத்து அதிகரித்தது. சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பயணிகள் கூட்டம் குவிந்தது. 

இந்நிலையில் இரவு 7 மணி முதல் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ச்சை தாண்டி விழுந்ததால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. 

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக அருவியின் ஓரமாக நின்று போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்