முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்பம் கிளை நூலகருக்கு விருது அமைச்சர் சி.வி. சண்முகம் வழங்கினார்

சனிக்கிழமை, 26 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

கம்பம், நவ. - 27 - கம்பம் தெற்கு கிளை நூலகர் வடிவேலுவுக்கு நல் நூலகர் விருதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார். கம்பம் தெற்கு கிளை நூலகராக பணிபுரிந்து வருபவர் வடிவேல். இவர் கம்பம், பழைய ஆயக்குடி, அம்மாபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள நூலகங்களில் பணிபுரிந்தவர். கம்பம் கிளை நூலகத்தில் 58 புரவலர்களை சேர்த்துள்ளார். இவரது சிறப்பான பணியை பாராட்டி தமிழக அரசு நல் நூலகர் விருது வழங்கியுள்ளது. அமைச்சர் சண்முகம், கம்பம் நூலகர் வடிவேலுவுக்கு நல் நூலகர் விருதை வழங்கினார். விருது பெற்ற நூலகர் வடிவேலுவை புரவலர்கள், நூலக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்