முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2017-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு: பிரிட்டனை சேர்ந்த கசுவோ இஷிகுரோவுக்கு அறிவிப்பு

வியாழக்கிழமை, 5 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

ஸ்டாக் கோம் : 2017-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரிட்டனை சேர்ந்த கசுவோ இஷிகுரோவுக்கு வழங்கப்படுகிறது.

கடந்த 1901-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற தொழில் அதிபரின் நினைவாக இந்த பரிசு வழங்கப்படுகிறது. வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி, இயற்பியல் அல்லது மருத்துவம் ஆகிய துறைகளில் மனித இனத்திற்கு பயன்படும் வகையில் பணியாற்றியோருக்காக இந்த பரிசு வழங்கப்படுவது வழக்கம். 

அந்த வகையில்  மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கான நோபல் பரிசை ஏற்கனவே அறிவித்து விட்டது. நேற்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறுபவரின் பெயர் அறிவிக்கப்பட்டது.  ஸ்டாக் கோமில்  நோபல் இலக்கிய பரிசு குழு தலைவர்  சாரா டேனியஸ் அறிவித்தார்.

2017 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரிட்டனை சேர்ந்த கசுவோ  இஷிகுரோவுக்கு  நோபல் பரிசு அறிவிக்கபட்டு உள்ளது. பட்டயத்துடன் பருசு தொகையாக  ரூ.7 கோடியும்  வழங்கப்படும். இவர் ஏராளமான நாவல்கள் மற்றும் சிறு கதைகளை எழுதி புகழ் பெற்றவர் ஆவார். கசுவோ எட்டு புத்தகங்களையும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக்கான ஸ்கிரிப்ட்டுகளையும் எழுதியுள்ளார். இஷிகுரோவின் சமீபத்திய நாவல்,  "தி புரியட் ஜெயண்ட்"இவர் ஜப்பானை பூர்வீகமாக கொண்டவர் ஆவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து