முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் முதல்வர் மோடிக்குபாக். தொழிலதிபர்கள் அழைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 11 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

ஆமதாபாத்,டிச.- 12 - பாகிஸ்தான் தொழிலதிபர்கள் குஜராத் முதல்வர் மோடியை சந்தித்து பேசினர். அப்போது அவரை பாகிஸ்தான் வரும்படி அவர்கள் அழைப்பு விடுத்தனர். குஜராத் மாநிலம் தொழில் வளர்ச்சியில் முனனேறி வருகிறது. அவர் திறமையாகவும் வெளிப்படையாகவும் நிர்வாகம் செய்து வருவதும் சிறந்த வழிமுறைகளை பின்பற்றுவதும்தான் காரணம் என்று கூறப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சி குறித்து பல மாநிலத்தவர்கள் பார்த்து அதை பின்பற்ற தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. குஜராத் மாநில தலைநகர் ஆமதாபாத்தில் வர்த்தக கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தானில் இருந்து பெரிய வர்த்தகர்களும் தொழிலதிபர்களும் வந்துள்ளனர். அவர்களின் பிரதிநிதிகள் நேற்று முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர். அப்போது குஜராத்தில் ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சிக்கு மோடியை அவர்கள் பாராட்டினர். தொழில் முறையை அவர்கள் கேட்டு தெரிந்து கொண்டனர். பாகிஸ்தானுக்கு வரும்படியும் மோடியை அவர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் இதற்கு அவர் சம்மதித்தாரா என்பது தெரியவில்லை. பாகிஸ்தானுக்கு முதல்வர் மோடி செல்லமாட்டார் என்று முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மோடியும் பாகிஸ்தான் வர்த்தக குழுவினரும் மிகவும் மரியாதை நிமித்தத்துடன் நடைபெற்றது. மோடியை ஒரு நெடுநோக்குடையவர் என்று பாகிஸ்தான் குழுவினர் பாராட்டினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்