எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,பிப்.- 18 - மத்திய அரசு தொடங்க உள்ள பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இவ்விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதாவுடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்றாயக், பீகார் முதல்வர் நிதீஷ்குமார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும் இணைந்துள்ளனர். உ,பி.முதல்வர் மாயாவதியின் கருத்து இதுவரை வெளிப்படவில்லை. இது குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட் நாயக் கூறியுள்ளதாவது:- ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பாக தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் மார்ச் 1ந்தேதி தொடங்குவதாக தகவல் வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த திட்டம் மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறிப்பது போல் இருக்கிறது. அதனால் இத்திட்டத்தை கைவிடும்படி கடந்த பிப்.14ந்தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த தகவலை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார். இந்த அமைப்புக்கு எதிரான மம்தாவின் கருத்தை தான் ஆதரிப்பதாக கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக அவர், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடனும் ஆலோனையும் நடத்தியுள்ளார். தற்போது இந்த பயங்கரவாத தடுப்பு அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க மம்தா பானர்ஜி, ஜெயலலிதா, நிதீஷ்குமார், மற்றும் நவீன் பட்நாயக் ஆகிய 4 மாநில முதல்வர்கள் இணைந்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசின் உரிமையை மத்திய அரசு என்றும் பறிக்காது. மம்தா எழுதியாக கூறும் எதிர்ப்பு கடிதம் இதுவரை உள்துறை அமைச்சகத்துக்கு வந்து சேரவில்லை என்று கூறியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு ஒரு செய்தி குறிப்பிப்பை வெளியிட்டுள்ளது. பயங்கர வாதத் தடுப்பு மையம் தொடங்குவது குறித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலிதா பிரதமர்மன் மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: - இந்திய இறையாண்மையைக் கட்டிக் காப்பாற்றி உயர்த்திப் பிடிப்பதிலும், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப் பாட்டை ஆதரிப்பதிலும் எனக்குள்ள அர்ப்பணிப்பு உணர்வை நீங்கள் அறிவீர்கள். எத்தகைய ஒரு சூழலிலும் இந்தியாவின் பாதுகாப்பு எத்தகைய சமரசத்திற்கும் உட்பட்டதல்ல என்ற நிலையில் சில விசயங்கள் குறித்து உங்களின் கவனத்தைச் செலுத்த விழைகிறேன். உள்துறை அமைச்சகம் கடந்த 3ம் தேதி ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளது. அதில் மத்திய புலனாய்வுத் துறையின் கீழ், தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் என்.சி.டி.சி ஒன்றை மார்ச் 1ம் தேதி தொடங்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் என்.சி.டி.சி. யாரையும் கைது செய்யவோ, அவர்களின் இடத்தை சோதனை இடவோ முடியும்.மேலும் மாநிலத்திற்குள் தனி புலனாய்வுக் குழுவையும் அமைக்கும் அதிகாரம் அதற்குள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவின் கீழ் என்.சி.டி.சி அறிக்கைகள், ஆவணங்கள், சான்றாதாரங்கள், எந்தவிதமானதாலும், அத் தகவல்கள், எந்தஒரு நிறுவனத்திடமிருந்தும், அமைப்பிடமிருந்தும் இதற்குத் தேவையான தகவல்களை பெறும் அதிகாரத்தைப் பெறுகிறது.
இத்தகைய சூழலில், சில விஷயங்களில் உள்ள ரகசிய மாக வைத்திருக்க வேண்டிய தகவல்களை கூட அதற்கு அளிக்க வேண்டியதும் இருக்கும்.
இந்த சட்டப்பிரிவு, எந்தவிதமான பொதுப்புகளையும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு அதிகாரத்தை அது பெறுகிறது.
யாரையும் கைது செய்வது, சோதனை செய்வது, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது, பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிப்போர் மீது எடுக்கப்படும் எச்சரிக்கை நடவடிக்கைகள் போன்ற பலவிதமான செயல் முறைகள் இது வரை மாநில அரசின் உள்துறை செயலகத்திடம் இருந்தது. என்.சி.டி.சி.யின் இந்த விசேஷ அதிகாரத்தின் மூலம், மாநில உள்துறை செயலகத்திடம் இருந்த அதிகாரங்கள் இனி மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் வசமும் என்.சி.டி.சி.யில் உள்ள மத்திய புலனாய்வு அதிகாரிகள் வசமும் கை மாறுகிறது, சுருக்கமாகச் சொல்லப்போனால் மத்திய மாநில இணைப்புப் புலனாய்வுக் குழுக்களை என்.சி.டி.சி அமைப்பானது, அமைப்பதின் மூலம் மாநில அரசின் உரிமைகளில் அது தலையிடுகிறது.
மேலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதிலும், அதை யொட்டி எடுக்கும் நடவடிக் கைகளும் தமிழ்நாடு அரசு சிறப்பான சாதனைப் பட்டியலைக் கொண்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் மாநில அரசு எந்தவித மான பின்வாங்குதலும் இல்லாமல் முன்னோக்கி செய்கிறது.
என்னுடைய அனுபவத்தில் மாநில காவல் துறையும் புலனாய்வு அமைப்பும் எப்போதுமே தீவிரவாதிகளையும் அவர்களின் அமைப்புகளையும் ஒடுக்குவதில் சிறந்து விளங்குகிறது. அதற்காக மாநில காவல் துறையானது. நவீனப் படுத்தப்பட்டு செயல் படுகிறது. பல அசம்பாவித சம்பவங்களையும் தடுத்துள்ளது.
வெறும் ஒரு மையத்தை அமைப்பதும், தகவல்களைப் பெறு வது மட்டுமே அதனுடைய நோக்கத்தை அடைய முடியாது. அகையால் என்.சி.டி.சி. அமைப்பது குறித்த மாநிலங்களின் வேறுபாடுகளை நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன். இவ்விஷயத்தில் பிறமாநில முதல்வர்களின் கருத்துடன் நானும் உடன் படுகிறேன்.
இவ்விஷயத்தில் தாங்கள் உடனடியாக கவனத்தை செலுத்த வேண்டும். மேலும் மாநில அரசுகளுடனும், மாநில போலீஸ் உயரதிகாரிகளுடனும் உடனடியாக கலந்து பேச வேண்டும் பயங்கவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற மிகுந்த முக்கியத்துவமுள்ள இவ்விஷயத்தில் மாநிலங்களில் கருத்துக்களை எடுத்துக் கொள்ளாமல், தேசிய பயங்கரவாத தடுப்பு நடைமுறைகள் எப்படி செயல்பட முடியும்.
ஆகையால் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் உள்துறை அமைச்சகத்தின் அந்த அதிகார நடவடிக்கை, குறித்து உரிய நடவடிக்கையை தாங்கள் எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 4 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-04-2025.
02 Apr 2025 -
கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக விமானங்கள் இயக்க நடவடிக்கை
02 Apr 2025ஆலந்தூர் : கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகிறது.
-
திருப்பூர் அருகே தங்கையை கொலை செய்த அண்ணன் கைது
02 Apr 2025திருப்பூர், பல்லடம் அருகே கல்லூரி மாணவி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், காதல் விவகாரத்தால் ஆத்திரமடைந்த அண்ணன் தனது தங்கையை கொலை செய்தது முதற்கட்ட விசா
-
வக்பு திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
02 Apr 2025சென்னை, 1995-ம் ஆண்டு வக்பு சட்டத்தில் உத்தேச திருத்தம் செய்யும் சட்ட முன்வடிவினை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.
-
இந்தியா - சீனா ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த வேண்டும் : அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தல்
02 Apr 2025சீனா : இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தினார்.
-
கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
02 Apr 2025சென்னை : மத்திய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
-
வக்பு மசோதா மத சுதந்திரத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிரானது : பார்லி.யில் ஆ.ராசா பேச்சு
02 Apr 2025டெல்லி : வக்பு மசோதா மத சுதந்திரத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிரானது என்று பாராளுமன்றத்தில் வக்பு மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விவாதத்தில் தி.மு.க.
-
விராலிமலையில் ஜல்லிக்கட்டு: மாடி முட்டியதில் காயம் அடைந்த காவல் ஆய்வாளருக்கு விஜயபாஸ்கர் முதலுதவி
02 Apr 2025விராலிமலை : விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி காயம் அடைந்த காவல் ஆய்வாளருக்கு முன்னாள் அமைச்சர் முதலுதவி அளித்தார்.
-
புதுப்பட்டினம் கடற்கரையை சுற்றுலாத் தலமாக்கப்படுமா ? - அமைச்சர் ராஜேந்திரன் பதில்
02 Apr 2025சென்னை : புதுப்பட்டினம் கடற்கரையை சுற்றுலாத் தலமாக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திரன் பதில் அளித்தார்.
-
வயதான தம்பதி மீது நாயை ஏவி வேடிக்கை பார்த்த உரிமையாளர்
02 Apr 2025சென்னை, வயதான தம்பதி மீது ராட்வீலர் நாயை ஏவி உரிமையாளர கடிக்க விட்டு வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூ. 896 கோடியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
02 Apr 2025சென்னை, தாமிபரபணி ஆற்றை நீர் ஆதாரமாக கொண்டு ரூ.896 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
-
கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றம்
02 Apr 2025சென்னை, கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் மு.க.
-
பாக்., அதிபர் மருத்துவமனையில் அனுமதி
02 Apr 2025பாகிஸ்தான் : பாகிஸ்தான் அதிபர் உடல்நிலை பாதிப்பால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
பா.ஜ.க. தலைவர் தேர்வு குறித்து பாராளுமன்றத்தில் அகிலேஷ், அமித்ஷா பேச்சால் கலகலப்பு
02 Apr 2025புதுடெல்லி : சமாஜவாதி கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசும்போது, பாஜக தலைவர் தேர்வு குறித்து கேள்வி எழுப்பினார்.
-
கோவையில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் : சட்டசபையில் அமைச்சர் தகவல்
02 Apr 2025சென்னை : கோவை மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய விரைவில் ஆய்வுக் கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.
-
எம்புரான் படத்துக்கு தடை கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு
02 Apr 2025கேரளா, எம்புரான் படத்துக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதிக்ககோரி மனு.
-
வக்பு திருத்த மசோதாவுக்கு பிஜூ ஜனதா தளம் எதிர்ப்பு
02 Apr 2025புதுடெல்லி, வக்பு திருத்த மசோதாவை தங்கள் கட்சி எதிர்ப்பதாக பிஜூ ஜனதா தளம் தெரிவித்துள்ளது.
-
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வங்கி துணை மேலாளர் தற்கொலை
02 Apr 2025திருச்சி, ஆன்லைன் ரம்மியில் ரூ. 10 லட்சத்தை இழந்த வங்கி துணை மேலாளர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
-
அமெரிக்க பொருட்களுக்கான அனைத்து இறக்குமதி வரிகளையும் ரத்து செய்து இஸ்ரேல் புதிய உத்தரவு
02 Apr 2025டெல் அவிவ், அமெரிக்க பொருட்களுக்கான அனைத்து இறக்குமதி வரிகளும் ரத்து செய்யப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
-
உத்தரகோசமங்கை கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெறும்: அமைச்சர் தகவல்
02 Apr 2025ராமநாதபுரம் : உத்திரகோசமங்கை கோயில் குடமுழுக்கு அன்னைத் தமிழில் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
தேர்தலை நோக்கமாகக் கொண்டு கச்சத்தீவு மீட்பு தீர்மானம் - எடப்பாடி பழனிசாமி
02 Apr 2025சென்னை : தேர்தலை நோக்கமாகக் கொண்டு கச்சத்தீவை மீட்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
இறந்ததாக வெளியான தகவல்: நேரலையில் தோன்றுவதாக நித்தியானந்தா அறிவிப்பு
02 Apr 2025ஆமதாபாத் : இறந்ததாக வெளியான தகவலையடுத்து நேரலையில் தோன்றுவதாக நிதியானந்தா அறிவித்துள்ளார்.
-
வக்ப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்கு பயன்படுத்தப்பட வக்பு மசோதா அவசியம் : பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பேச்சு
02 Apr 2025டெல்லி : வக்ப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த நோக்கத்தை அடைய வக்பு மசோதா தேவை.
-
தென்காசி மாவட்டத்திற்கு 2 நாள் உள்ளூர் விடுமுறை
02 Apr 2025தென்காசி : தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் 7, 11 ஆகிய இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.
-
தைவானை சுற்றி சீன ராணுவம் 2-வது நாளாக போர் பயிற்சி
02 Apr 2025தைபே சிட்டி, தைவானை சுற்றி சீன ராணுவம் 2-வது நாளாக போர் பயிற்சியில் ஈடுபட்டனர்.