முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மூலம் | வெளி மூலம் | இரத்த மூலம் | மூலப்புண் வலி குணமாக

siddha-1

  • மூல வியாதி குணமாக;--  வெங்காயத்தை  பசு வெண்ணையுடன் கலந்து சாப்பிட மூல வியாதி குணமாகும்.
  • ரத்த மூலம் கட்டுப்படுத்த;-- வாழைப்பூவை உணவில் சேர்த்து வர ரத்த மூலம் கட்டுப்படும்.
  • மூலம் நோய்  குணமாக ;-- வேப்ப விதையுடன் வெல்லம் சேர்த்து அரைத்து 48 நாட்கள் சாப்பிட மூலம் நோய் குணமாகும்.
  • முலச்சூடு தணிய ;-- ரோஜாப்பூவை சாரெடுத்து சர்க்கரை சேர்த்து பருகி வர முலச்சூடு தணியும்.
  • வெளி மூலம்  குணமாக ;-- வெங்காயத்தை வதக்கி ஆசன வாயில் கட்ட வெளி மூலம் குணமாகும்.
  • மூலப்புண் வலி குறைய ;-- மஞ்சள் பொடி கலந்த சுடுநீரில் ஆசனவாய் படும்படி அமர்ந்திருந்து வர மூல புண் ஆறும் மூல வலி குறையும்.
  • மூலம்  குணமாக ;-- பப்பாளி பழம் சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கி மூலம் குணமாகும்.
  • மூலக்கடுப்பு தீர ;-- சுண்டைக்காய் சமைத்து உண்ண மூலக்கடுப்பு தீரும்.
  • மூலம் அனைத்தும் தீர ;--நாயுருவி விதைப்பொடியை துத்தி கீரையுடன் சமைத்து உண்ண மூலம் அனைத்தும் தீரும்.
  • இரத்த மூலம் குணமாக;-- மாதுளம் பூ சாற்றில் கற்கண்டு சேர்த்து 15 மில்லி பருக இரத்த மூலம் குணமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்