எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - சென்னை விமான நிலையத்திற்கு மஸ்கட் மற்றும் சவுதியில் இருந்து ரூ.2.80 கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்கம் கடத்தி வந்த 3 பேரை டிஆர்ஐ அதிகாரிகள் கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் அடிக்கடி தங்கம் கடத்தி வருவதும் அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.இந்த நிலையில் , இன்று அதிகாலை மஸ்கட் மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து தங்கம் கடத்தி வருவதாக டிஆர்ஐ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்ததகவலின் படி மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கொண்ட 7 பேர் கொண்ட குழு ஒன்று நேற்று அதிகாலை அதிரடியாக விமான நிலையத்திற்குள் புகுந்து சுங்கத்துறை பகுதிகளில் சோதனை செய்தனர். அப்போது சந்கேகத்திற்கு இடமான வகையில் 2 பயணிகளை சோதனை செய்தனர். அப்போது கேரளா மாநிலம் தலைச்சேரி பகுதியைச்சேர்ந்த முகமது நிசாம் என்ற பயணி தனது கைப்பையில் 4 கிலோ தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.
அதேபோன்று ராமநாதபுரத்தைச்சேர்ந்த முகமது மசூத் என்ற வாலிபர் தனது பெல்ட்டில் அரை கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.இவர்கள் இருவரையும் டிஆர்ஐ அதிகாரிகள் கைது செய்து அவர்களிடமிருந்து 4.50 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் மஸ்கட்டிலிருந்து வந்த மற்றொரு பயணியிடமிருந்த 3.50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.2.80 கோடி என்று கூறப்படுகிறது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட முகமுது நிசாம் என்ற வாலிபர் ஏற்கனவே சென்னை, கொச்சி, மஸ்கட் போன்ற இடங்களில் அடிக்கடி தங்கம் கடத்தி வந்ததும் அவர் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற அடிக்கடி விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வருவதால் தங்க கடத்தல் கும்பலுக்கும் முகமுது நிசாம் என்பருக்கும் தொடர்பிருக்கலாம் எ ன்று பல்வேறு கோணங்களில் டிஆர்ஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தங்கம் கடத்தல் காரர்களுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் உதவி செய்த போது தனியார் தொலைகாட்சி ஒன்று நேரில் படம் பிடித்து அம்பலப்படுத்தியது. இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதுபோன்று ஒரு சில சுங்கத்துறை அதிகாரிகளின் உதவியுடன் தான் அடிக்கடி தங்கம் கடத்தி வருகிறார்களோ என்ற சந்தேகத்தில் டிஆர்ஐ அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 day 6 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 weeks 6 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 2 days ago |
-
பள்ளிகளுக்கு 28-ம் தேதி முதல் 5 நாட்கள் காலாண்டு விடுமுறை : தமிழக பள்ளிக்கல்வித்துறை தகவல்
20 Sep 2024சென்னை : தமிழகத்தல் பள்ளிகளுக்கு 28-ம் தேதி முதல் 5 நாட்கள் காலாண்டு விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை இருமடங்கு உயர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
20 Sep 2024சென்னை : பள்ளி, கல்லூரிகளிலும் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான கல்வி உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி முதல்வர் மு.க.
-
இலங்கையில் இன்று அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்
20 Sep 2024கொழும்பு : இலங்கையில் இன்று சனிக்கிழமை அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
-
தமிழகத்தில் வரும் 26-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Sep 2024சென்னை : தமிழகத்தில் வரும் 26-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
உலகளாவிய இந்திய அழகிகள் போட்டி: மிஸ் இந்தியாவாக ஐ.டி. மாணவி தேர்வு
20 Sep 2024நியூயார்க் : உலகளாவிய இந்திய அழகிகள் பங்கேற்ற அழகிகள் போட்டியில் மிஸ் இந்தியாவாக ஐ.டி. மாணவி த்ருவி பட்டேல் தேர்வு செய்யப்பட்டார்.
-
சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை திசை திருப்ப எங்கள் மீது குற்றச்சாட்டு: திருப்பதி லட்டு விவகாரத்தில் ஜெகன் மோகன் கருத்து
20 Sep 2024விஜயவாடா, ஆந்திராவில் சட்டம் -ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை திசை திருப்பவே எங்கள் மீது குற்றச்சாட்டை சுமத்துகின்றனர் என்று திருப்பதி லட்டு விவகாரம் குறித்து ஜெகன் மோகன் ர
-
புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த தமிழக பா.ஜ.க.வினருக்கு அண்ணாமலை வேண்டுகோள்
20 Sep 2024சென்னை : நமது இலக்கை அடையும் வகையில் புதிய உறுப்பினர் சேர்க்கும் பணியை மேலும் தீவிரப்படுத்த தமிழக பா.ஜ.க.வினருக்கு மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். 
-
அக். 27-ல் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு : நடிகர் விஜய் அறிவிப்பு
20 Sep 2024சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என்று நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.
-
விமானங்களில் பேஜர், வாக்கி டாக்கி கொண்டு செல்ல தடை: கத்தார் ஏர்வேஸ்
20 Sep 2024பெய்ரூட் : பெய்ரூட் விமான நிலையத்தில் பயணம் செய்யும் மக்கள் பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், இது உடனடியாக
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2024.
20 Sep 2024 -
அதிபர் தேர்தல்: நேரடி விவாதத்திற்கு பின் கமலா ஹாரிஸின் செல்வாக்கு அதிகரிப்பு
20 Sep 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸின் செல்வாக்கு நேரடி விவாதத்திற்கு பிறகு மேலும் அதிகரித்துள்ளதாக கருத்துக்கணிப்பு முட
-
ஹிஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் சரமாரி குண்டு வீச்சு
20 Sep 2024பெய்ரூட் : தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகளை குறி வைத்து போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் படையினர் சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் ஹிஸ்புல்
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான 15 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு
20 Sep 2024சென்னை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
-
29 தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு நிதியுதவி : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
20 Sep 2024சென்னை : தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.54.20 லட்சம் நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
-
பழனி பஞ்சாமிர்தம் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு அரசு விளக்கம்
20 Sep 2024சென்னை, பழனி பஞ்சாமிர்தம் தொடர்பாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு பழனி பஞ்சாமிர்தத்தில் சேர்க்கப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்தே ப
-
புதுக்கோட்டையில் விபத்து: கோட்டாட்சியர் கார் மோதி 2 பேர் பலி
20 Sep 2024புதுக்கோட்டை, புதுக்கோட்டையில் வருவாய் கோட்டாட்சியர் சென்ற கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.
-
திருப்பதி கோவில் பிரசாத லட்டுவின் தரம் பற்றிய விவகாரம்: தேவஸ்தானம் விளக்கம்
20 Sep 2024திருப்பதி : திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டு உலக புகழ்பெற்றது ஆகும்.
-
இந்திய வரலாற்றை மாற்றியமைத்த சர்ஜான் மார்ஷலுக்கு நன்றி: முதல்வர் ஸ்டாலின் பதிவு
20 Sep 2024சென்னை, நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் வரலாற்றை மாற்றி வடிவமைத்த சர்ஜான் மார்ஷலுக்கு நன்றி தெரிவிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஆயுதங்களை போட்டு விட்டு சரணடையுங்கள் : நக்சல்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை
20 Sep 2024புதுடெல்லி : நக்சல்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பொது நீரோட்டத்தில் இணைய முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இல்லாவிட்டால் அரசின்
-
3 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை பவுன் ரூ.480 உயர்வு
20 Sep 2024சென்னை : கடந்த 3 நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்த நிலையில், நேற்று அதிரடியாக உயர்ந்து மீண்டும் ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து விற்பனையானது.
-
உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கினால் வரவேற்போம்: அமைச்சர் எ.வ.வேலு பதில்
20 Sep 2024வேலூர், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கினால் வரவேற்போம் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
-
25-ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு : தமிழ்நாட்டு திட்டங்களுக்கு நிதியை ஒதுக்க வலியுறுத்துகிறார்
20 Sep 2024சென்னை :சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
-
துணை முதல்வர் பதவி குறித்த கேள்வி ? அரசியல் கேள்வி கேட்காதீர்கள் என நடிகர் ரஜினிகாந்த் கண்டிப்பு
20 Sep 2024சென்னை, அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு அரசியல் கேள்வி கேட்காதீர்கள் என செய்தியாளரை கண்டிக்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
-
வழக்கத்துக்கு மாறாக சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்தில் தினசரி மின் தேவை 30 சதவீதம் அதிகரிப்பு
20 Sep 2024சென்னை, தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் வழக்கத்துக்கு மாறாக வெயில் சுட்டெரித்து வருவதால், தினசரி மின் தேவை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
-
தெலுங்கு கங்கை கால்வாய் மூலம் சென்னைக்கு 1200 கன அடி தண்ணீர்: வரும் 30-ம் தேதி வரை விநியோகம்
20 Sep 2024திருமலை, கண்டலேறு அணையில் இருந்து தெலுங்கு கங்கை திட்ட கால்வாய் மூலம் சென்னைக்கு 1200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.