எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெய்ரூட் : தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகளை குறி வைத்து போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் படையினர் சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் பல கட்டிடங்கள், மற்றும் ஆயுத கிடங்குகள் சேதமடைந்தது. மேலும் 100-க்கும் மேற்பட்ட ராக்கெட் லாஞ்சர்களையும் குண்டு வீசி அழித்து விட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது கடந்த 11 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சண்டையில் பெண்கள், குழந்தைகள் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.
ஹமாசுக்கு ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினரும் துணையாக இருந்து வருகின்றனர். லெபனானில் இருந்து அவ்வப்போது இஸ்ரேல் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தெற்கு லெபனான் பகுதியில் பொதுமக்களின் வீடுகளை ஆயுதங்கள் பதுக்கி வைக்கும் இடமாகவும், வீடுகளில் சுரங்க பாதைகள் அமைத்தும், பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகின்றது.
இதனால் பாதுகாப்பு கருதி ஹிஸ்புல்லா அமைப்பினர் செல்போனுக்கு பதிலாக பேஜர் கருவிகளை தகவல் தொடர்பு கருவியாக பயன்படுத்தி வருகின்றனர். தங்களது இருப்பிடம் பற்றி வெளியில் தெரியாது என்பதற்காக அவர்கள் இதை பயன்படுத்தி இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உலகமே அதிரும் வகையில் 2 நாட்களுக்கு முன்பு ஒரே சமயத்தில் லெபனானில் பேஜர் கருவிகள் வெடித்து சிதறியது. இதன் தொடர்ச்சியாக வாக்கி டாக்கி கருவிகள் வெடித்து சிதறியது. இந்த இரு சம்பவங்களிலும் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்தவர்கள் உள்பட 37 பேர் உயிர் இழந்தனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்த புது விதமான தாக்குதல் லெபனான் நாட்டு மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டி தான் காரணம் என ஹிஸ்புல்லா அமைப்பினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு இதுவரை இஸ்ரேல் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. மறுக்கவும் இல்லை. தொலை தொடர்பு கருவிகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல் வாயிலாக அனைத்து வரம்புகளையும் இஸ்ரேல் மீறி விட்டதாகவும், இந்த தாக்குதலால் கடும் இழப்பை சந்தித்து உள்ளதாகவும், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லா தெரிவித்தார்.
இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் பகுதிகளை குறி வைத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை நடத்தினார்கள். இதில் 8 பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் இஸ்ரேல் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
இஸ்ரேலிய பீரங்கி நிலைகளை ராக்கெட் மூலம் தாக்கியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவத்தினரும் அதிரடி தாக்குதலில் இறங்கினார்கள். தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகளை குறி வைத்து வான்வழி தாக்குதல் நடத்தினார்கள்.
போர் விமானங்கள் மூலம் சரமாரியாக குண்டுகளை வீசினார்கள். இந்த குண்டு வீச்சில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் பல கட்டிடங்கள், மற்றும் ஆயுத கிடங்குகள் சேதமடைந்தது. மேலும் 100-க்கும் மேற்பட்ட ராக்கெட் லாஞ்சர்களையும் குண்டு வீசி அழித்து விட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இதில் உயிர் சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் தொடர்ந்து குண்டு மழை பொழிந்ததால் லெபனானில் பொதுமக்கள் பீதி அடைந்தனர். சைரன் ஒலி கேட்ட வண்ணம் இருந்தது. எல்லைப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தொடரும் என இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவா கேலண்டர் தெரிவித்துள்ளார். போரின் புதிய கட்ட தொடக்கத்தில் நாங்கள் இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காசா போர் தொடங்கிய பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. இதற்கு ஹிஸ்புல்லா அமைப்பினரும் பதிலடி கொடுக்க தயார் நிலையில் உள்ளனர். இதனால் இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே முழுமையாக போர் நடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்22 hours 48 min ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 weeks 6 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 2 days ago |
-
மீண்டும் டி-20 கிரிக்கெட்டுக்கு திரும்ப வாய்ப்பே இல்லை : கேப்டன் ரோகித் சர்மா திட்டவட்டம்
19 Sep 2024சென்னை, மீண்டும் டி-20 கிரிக்கெட்டுக்கு திரும்ப வாய்ப்பே இல்லை என்று கேப்டன் ரோகித் சர்மா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
நாளை முதல் 23-ம் தேதி வரை: பிரதமர் மோடி அமெரிக்க பயணம்: குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்
19 Sep 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி வரும் 21 முதல் 23 வரை அரசு முறை பயணமாக அமெரிக்காவில் இருப்பார் என வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது ஐகோர்ட்
19 Sep 2024சென்னை, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்
-
இந்தியா ‘டி’ அணி நிதான ஆட்டம்
19 Sep 2024துலிப் கோப்பையில் மொத்தமுள்ள 6 ஆட்டங்களில் 5 ஆவது ஆட்டத்தில் இந்தியா டி மற்றும் இந்தியா சி அணிகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஆனந்தபூர் மைதானத்தில் விளையாடி வருகின்றன.
-
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடக்கம்
19 Sep 2024சென்னை, ஐ.ஏ.எஸ்., ஐஎஃப்எஸ், ஐ.பி.எஸ். பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
19 Sep 2024மேட்டூர், மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு எதிரொலியாக, இரண்டு நாள்களில் அணையின் நீர்மட்டம் 2.50 அடி சரிந்தது.
-
பெண் மருத்துவர் கொலை விவகாரம்: சந்தீப் கோஷின் மருத்துவப் பதிவு ரத்து
19 Sep 2024கொல்கத்தா, கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட ஆர்.ஜி.
-
வரும் 26-ம் தேதி மாடம்பாக்கத்தில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
19 Sep 2024சென்னை, வரும் 26-ம் தேதி மாடம்பாக்கத்தில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
2025-ஐ.பி.எல். சீசன்: மெகா ஏலத்தை நவம்பரில் நடத்த பி.சி.சி.ஐ. திட்டம்
19 Sep 2024மும்பை, ஐ.பி.எல். 2025: மெகா ஏலத்தை வரும் நவம்பர் மாதம் நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணியை சரிவில் இருந்து மீட்ட அஸ்வின் - ஜடேஜா ஜோடி
19 Sep 2024சென்னை, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அஸ்வின் - ஜடேஜா ஜோடி தங்களது சிறப்பான ஆட்டத்தால் இந்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2024.
20 Sep 2024 -
இலங்கையில் இன்று அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்
20 Sep 2024கொழும்பு : இலங்கையில் இன்று சனிக்கிழமை அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
-
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை இருமடங்கு உயர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
20 Sep 2024சென்னை : பள்ளி, கல்லூரிகளிலும் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான கல்வி உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி முதல்வர் மு.க.
-
திருப்பதி கோவில் பிரசாத லட்டுவின் தரம் பற்றிய விவகாரம்: தேவஸ்தானம் விளக்கம்
20 Sep 2024திருப்பதி : திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டு உலக புகழ்பெற்றது ஆகும்.
-
உலகளாவிய இந்திய அழகிகள் போட்டி: மிஸ் இந்தியாவாக ஐ.டி. மாணவி தேர்வு
20 Sep 2024நியூயார்க் : உலகளாவிய இந்திய அழகிகள் பங்கேற்ற அழகிகள் போட்டியில் மிஸ் இந்தியாவாக ஐ.டி. மாணவி த்ருவி பட்டேல் தேர்வு செய்யப்பட்டார்.
-
அதிபர் தேர்தல்: நேரடி விவாதத்திற்கு பின் கமலா ஹாரிஸின் செல்வாக்கு அதிகரிப்பு
20 Sep 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸின் செல்வாக்கு நேரடி விவாதத்திற்கு பிறகு மேலும் அதிகரித்துள்ளதாக கருத்துக்கணிப்பு முட
-
விமானங்களில் பேஜர், வாக்கி டாக்கி கொண்டு செல்ல தடை: கத்தார் ஏர்வேஸ்
20 Sep 2024பெய்ரூட் : பெய்ரூட் விமான நிலையத்தில் பயணம் செய்யும் மக்கள் பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், இது உடனடியாக
-
ஹிஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் சரமாரி குண்டு வீச்சு
20 Sep 2024பெய்ரூட் : தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகளை குறி வைத்து போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் படையினர் சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் ஹிஸ்புல்
-
தமிழகத்துக்கு நீட் விலக்கு தர வேண்டிய சூழல் மத்திய அரசுக்கு நிச்சயம் ஏற்படும் : அமைச்சர் ரகுபதி பேட்டி
20 Sep 2024சென்னை : தமிழகத்துக்கு நீட் விலக்கு ஏன் தேவை என்று விளக்கம் கேட்டு மத்திய அரசு 4 முறை கடிதம் எழுதியுள்ளதாகவும், இதற்கு தமிழக அரசு அளித்துள்ள பதில்கள் மூலம், நீட் விலக்க
-
மகன்களை தாக்கியதாக பாடகர் மனோவின் மனைவி புகார்: 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
20 Sep 2024சென்னை, தனது மகன்களை தாக்கியதாக பிரபல பின்னணி பாடகர் மனோவின் மனைவி அளித்த புகாரின் பேரில் 8 பேர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
அக். 27-ல் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு : நடிகர் விஜய் அறிவிப்பு
20 Sep 2024சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என்று நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.
-
மே.வங்க வெள்ளம்: தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க போகிறேன் : பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்
20 Sep 2024கொல்கத்தா : ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வரும் தண்ணீரால் மேற்கு வங்காளத்தின் தெற்கு மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் விபத்தில் காயமடைந்த அரியானா இளைஞரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி
20 Sep 2024சண்டிகர் : அமெரிக்காவில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த அரியானா இளைஞரின் கோக்ரிபூர் கிராமத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரை நேற்று நேரில் சந்தித்து ராகுல் க
-
29 தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு நிதியுதவி : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
20 Sep 2024சென்னை : தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.54.20 லட்சம் நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
-
கர்நாடக ஐகோர்ட் நீதிபதியின் ஆட்சேபனைக்குரிய கருத்து : தாமாக முன்வந்து சுப்ரீம் கோர்ட் விசாரணை
20 Sep 2024புதுடெல்லி : வழக்கு விசாரணையின்போது, பெண் வழக்கறிஞர் ஒருவருக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட் நீதிபதி ஒருவர் தெரிவித்த ஆட்சேபனைக்குரிய, சர்ச்சையான கருத்து குறித்து சுப்ரீம் க