முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 579 ஏரிகள் நிரம்பின

செவ்வாய்க்கிழமை, 5 டிசம்பர் 2023      தமிழகம்
Chembarambakkam 2023 06 20

Source: provided

சென்னை : தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 579 ஏரிகள் நிரம்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் அதி கனமழை பெய்ததால் நகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது. நகர தெருக்களில் எல்லாம் சூழ்ந்துள்ள மழைநீர் கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளத்தை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது.

புயல் கரையை கடந்ததை தொடர்ந்து சென்னையில் ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது. இதனால் சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. 

இந்த நிலையில், தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 579 ஏரிகள் நிரம்பியுள்ளன. நேற்று முன்தினம் ஒரே நாளில் 262 ஏரிகள் நிரம்பியுள்ளன. 128 ஏரிகள் 75 சதவீதம் முதல் 99 சதவீதம் நிரம்பியுள்ளன. 126 ஏரிகள் 50 சதவீதம்  முதல் 74 சதவீதம் நிரம்பியுள்ளன. 75 ஏரிகள் 25 சதவீதம் முதல் 49 சதவீதம்  நிரம்பியுள்ளன. ஒரு ஏரி 25 சதவீதம் குறைவாக நிரம்பியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து